Saturday, April 30, 2011

Make age just a number

Make age just a number

 

Don't let your age scare you. Here's a quick list of what to expect as you get older and how to beat it

Women at every age, battle with new challenges and changes that can be as exciting as they are exhausting. Work and relationship pressures are at their peak around the mid 30s, as a recent study states, making it one of the most trying years for most. Each stage of life brings along its own set of stress triggers that has a domino effect on health, relationships and overall well-being. Follow this guide to make sure you make the most out of each phase in your life and nip out potential problems.

In your 20s
Healthwise: Anaemia
Studies show, one in every three 19-24 year olds have low stores of iron in the blood which indicates the presence of Anaemia. Symptoms include tiredness and lethargy and difficulty concentrating.
Solution:
Eat a balanced diet, including iron-rich foods like green leafy vegetables, lentils, boiled eggs, fish etc.

In relationships:
Since 20s are usually a deeply experimental phase mentally, it's not uncommon to have more than one sexual partner. Staying healthy and birth control then become top priority. Controlling thrush, urinary tract infections and other STD's is essential.
Solution:
Insist on a condom. Even if you're in a serious relationship, make sure you use contraceptives. Take birth control medication only after consulting with a doctor.

Emotional misery: Stress
This is probably the first time in your life you've had to deal with adult issues like balancing a new job, friends, living away from home. It's stressful initially.
Solution:
Learning to breathe deeply can trigger a relaxation response.

In your 30's
Healthwise: Premenstrual Syndrome (PMS)
PMS gets even more intense and common as women get older. Symptoms can worsen after childbirth.
Solution:
Eat atleast four to five portions of fruit and vegetables daily. Have wholegrain breads and cereals and cut down on saturated fats, salty foods and alcohol.

In relationship: Parenting
The added stress of having a family can lead to couples neglecting their own sexuality.
Solution:
Even if you're too tired for sex, touching, cuddling and simply spending time listening to each other will mean you still feel safe and secure in the relationship. Find help to handle kids for atleast one day in a month so that you can spend time with just each other.

Emotional misery: Fatigue
According to a study, one in four women between the ages of 20 and 39 feels tired at least half the time. The exhaustion, it said, linked women's tiredness with poor diet, lack of exercise and stress.
Solution:
Addressing underlying issues is key. Get your food in order and get some early nights in during the week. Try making the time for a brisk walk everyday.

In your 40s
Healthwise: Weight gain
Most women gain weight between the ages of 40-55 years, increasing the risk of diabetes.
Solution:
Addressing the natural fall in metabolism that occurs in your 40s is key to staying trim. Introduce exercises that build muscle mass, such as lifting weights and doing squats and press-ups. The more lean tissue you have the more calories you burn all day, even at rest.

In relationship: Life in a rut
For most, this is a period when sex life has been the same for years, and taking partners for granted and neglecting physical attention and affection is at its peak. This often leads to dissatisfaction.
Solution:
Something as simple as moving your sex-play from the bedroom to the living room or having sex in the morning for variation can make it seem less routine.

Emotional misery: Depression
Studies show, that early 40s is an age most vulnerable to depression.
Solution:
Seek help of a therapist of counselor if you feel like you're sinking into a depression. Be sure to exercise. That'll help your your mood and increase endorphins in the body.

In your 50s
Healthwise: Heart disease
While women are known to fear breast cancer more than any other disease, they are five times more likely to suffer a heart attack than men.
Solution:
Keep a close eye on your cholesterol levels and reduce your intake of saturated animal fats. Have your blood pressure regularly checked and watch your weight. Half-an-hour of brisk walking five times a week will protect your heart.

In relationships: Change of life
Menopause causes vaginal dryness and sometimes a fall in your sexual desire that may be physical (due to hormone changes) or psychological (changes to your body making you feel less desirable).
Solution:
Try to embrace the liberating side of the menopause. You're free of contraception worries and can have sex more freely when the kids have flown the nest.

Emotional misery: Mid life angst
Turning 50 can trigger disappointments about missed opportunities, or a life that isn't quite going to plan.
Solution:
Embracing your 50s as a prime time of life. Free your mind and challenge yourself to embark on something new.

In your 60s
Healthwise: Bones and joints
Aches, pain and broken bones can feature more often with age.
Solution:
Gentle weight-bearing exercises, such as walking are always good. It's important to include plenty of calcium-rich dairy products in your diet and vitamin D supplement. Maintaining a healthy weight and staying well hydrated will help ward off joint problems.

In relationships: Your sex life wanes
After a point people come to accept the stereotypes that older people don't have sex.
Solution:
Continue to have a good sex for the same reason you should continue to get good exercise, it's about taking care of yourself.

Emotional misery:
Memory loss and dementia
Solution:
Stay mentally active, take a vitamin supplements and make sure to maintain an active social life.

Wednesday, April 27, 2011

''எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை!''

மீபத்தில் நான், விகடனில் ஒரு செய்தி படித்தேன். மிஸ் சென்னை 99 போட்டியின் கடைசிச் சுற்றில் ஒரு கேள்வி கேட்டார்கள்.

 'மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?'

இந்தக் கேள்விக்கு, 'நேர்மை' என்று பதில் அளித்து, த்ரிஷா என்கிற பெண் கிரீடத்தைத் தட்டிக் கொண்டு போனாள். இதில் என்னை ஆச்சர்யப்படவைத்த விஷயம் என்ன என்றால், இளைய தலைமுறையினர்கூட, நேர்மையான குணத்தை மெச்சுகிறார்கள் என்பதுதான். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

க்கத்து வீட்டுப் பெண் குழந்தை கதை சொல்ல வந்திருந்தாள். நாலு வயது இருக்கும்.

'ஒரு ஊர்ல ஒரு கௌவி இருந்தா. அவ வடை சுட்டப்போ, ஒரு காக்கா வந்து வடையைப் பறிச்சுண்டு போய், ஒரு மரத்துல உக்காந்துச்சு. அந்தப் பக்கத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு வடையைப் பார்த்ததும் வாயில எச்சில் ஊறிச்சாம். அது காக்காவப் பார்த்து, 'காக்கா... காக்கா... நீ நல்ல அழகா இருக்க... உன் குரல் இன்னும் அழகா இருக்கு. ஒரு பாட்டுப் பாடு'ன்னுச்சாம். காக்கா, 'கா... கா...'ன்னு கத்த, வடை கீழே விழுந்துச்சாம். நரி எடுத்துண்டு ஓடிச்சாம்!'

நரியும் காகமும், வடையும் காகமும், கிழவியும் வடையும், நரியும் வடையும் என்று பலவிதத் தலைப்புகளைக்கொண்ட இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, சிறுமி போய்விட்டாள்.

அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவிலேயே வளர்ந்த ஒரு சிறு பெண்ணிடம், இந்தக் கதையின் போதனை என்ன என்று ஒரு முறை கேட்டேன். அந்தப் பெண் கொஞ்சமும் தயங்காமல், 'வாய்க்குள் சாப்பாடு வைத்துக்கொண்டு பேசக் கூடாது!' என்றாள். அமெரிக்காவில் உணவை வாயில் வைத்துக்கொன்டு பேசுவது மிகவும் பாவமான செயல் என்பது புரிந்தது.

இன்னொரு சிறுவன் சொன்னான், 'ஏமாற்றினால் நீயும் ஏமாற்றப்படுவாய்' என்று. ஒரு சிறுமி மாத்திரம் 'முகஸ்துதிக்கு மயங்கக் கூடாது' என்றாள்.

உண்மையில், இந்தக் கதையில் நாயகன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. கிழவியா, நரியா, காகமா அல்லது வடையா? வடைதான் ஊடுசரடாகக் கதை முழுக்க வியாபித்து இருக்கிறது என்று கூறுவார்கள்.

அந்தப் பெண் குழந்தை, கதையின் கடைசி வரியைச் சொல்லும்போது, இரண்டு கால் பெருவிரல்களையும் நிலத்தில் ஊன்றி எம்பி நின்று 'நரி எடுத்துண்டு ஓடிச்சாம்' என்று சொன்னபோது, அதன் முகத்தில்தான் எத்தனை பரவசம். காகம் ஏமாந்ததில் அத்தனை சந்தோஷம்! பாடம்: ஏமாற்றினால் பிழைக்கலாம்.

இன்னும் ஒரு பரம்பரைக் கதை சிறுவர் மத்தியில் உலவுகிறது. ஏழை விறகுவெட்டியின் கோடரி ஒருநாள் ஆற்றில் விழுந்துவிட்டது. ஒரு தேவதூதன் தோன்றி, ஆற்றில் குதித்து ஒரு தங்கக் கோடரியைக் கொண்டுவந்தான். விறகுவெட்டி, அது தன்னுடையது இல்லை என்றதும் இன்னொரு முறை மூழ்கி ஒரு வெள்ளிக் கோடரியைக் கொண்டு வந்தான். விறகுவெட்டி அதையும் மறுக்க, கடைசியில் தேவ தூதன் அவன் உண்மையாகத் தொலைத்த இரும்புக் கோடரியைக் கொண்டுவந்து கொடுத்தான். விறகுவெட்டி, அதுதான் தன்னுடையது என்று ஏற்றுக்கொண்டான். கதை இங்கே முடிந்திருக்க வேண்டும். ஆனால், தேவதூதன் என்ன செய்தான்? விறகுவெட்டியின் நேர்மையை மெச்சி தங்கக் கோடரி, வெள்ளிக் கோடரி இரண்டையும் பரிசாகக் கொடுத்தானாம்.

இது போதிக்கும் பாடம் என்ன? நேர்மையைக் கடைப்பிடித்தால், இறுதியில் செல்வம் இருக்கும். இதுவும் ஒரு தப்பான போதனைதான்! நேர்மைக்கும் செல்வத்துக்கும் ஒருவிதத் தொடர்பும் இல்லை. உண்மையில் பார்த்தால், நேர்மையாக இருப்பவர்கள் செல்வம் சேர்ப்பது அரிதான காரியம்.

திருக்குறிப்பு நாயனார் என்று ஒருவர். இவருக்கு வேலை, அடியார்களின் ஆடைகளை இலவசமாகச் சலவை செய்து தருவது. அப்படி ஒருநாள் ஒரு தொண்டரின் கந்தையைத் துவைத்து, உலர்த்தித் தருவதாக வாக்கு கொடுக்கிறார். தோய்த்துவிட்டார். உலர்த்துவதற்கு இடையில் மழை வந்துவிட்டது. வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. என்ன செய்திருக்க வேண்டும்? 'போய்யா... உலர்த்து வதற்கு இடையில் மழை வந்து விட்டது. என்னை என்ன பண்ணச் சொல்லுகிறாய்?' என்று கேட்டிருக்க வேண்டாமோ? மாறாக, மன்னிப்புக் கேட்டு தண்டனையாகக் கல்லில் தன்  தலையை முட்டிக்கொண்டாராம். மனசாட்சி என்பது இதுதான்!

நம்மில் பலர் நேர்மையாக இருப்பதற்குப் பின்விளைவுகளின் பயம்தான் காரணம். பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் நேர்மையாக இருப்பது, அப்பா பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில் சிகரெட் பிடிக்காமல் விடுவது, ஆசிரியரிடம் அகப் பட்டுவிடுவோம் என்ற பயத்தில் மாணவன் பரீட்சை பேப்பரை யோக்கியமாக எழுதுவது, மனைவியிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கணவன் ஒழுக்கமாக நடந்துகொள்வது... இவை எல்லாம் உண்மையில் 'நேர்மை' என்ற பதத்தில் அடங்கும் என்று கூற முடியாது.

ந்த ஆப்பிரிக்கன் எழுத்தறிவு இல்லாத கடைநிலை ஊழியன். எப்போது பார்த்தாலும் அவனுக்கு பணக் கஷ்டம். ஒரு வெள்ளைத் தாளில், சம்பள முன் பணம் கேட்டு, யாரையாவது பிடித்து விண்ணப்பம் எழுதியபடியே இருப்பான். இவனுக்கு ஆறு குழந்தைகள். கடைசியில் பிறந்தது இரட்டைக் குழந்தைகள். நிறுவனத்தில், குழந்தைகளுக்கான படிப் பணம் உண்டு. மாதா மாதம் ஆறு குழந்தைகளுக்கான படிப் பணத்தையும் பெற்றுவிடுவான்.

ஒருநாள் இவனுடைய இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்தவன் செய்த முதல் காரியம், இறந்த குழந்தைகளுக்கான படியை வெட்டச் சொல்லி எழுதத் தெரிந்த ஒருவரைக்கொண்டு கடிதம் எழுதியதுதான்!

என்னுடைய 20 வருட சேவகத்தில் குழந்தைப் படியை வெட்டச் சொல்லிக் கோரும் விண்ணப்பத்தை நான் கண்டது இல்லை. இந்த ஊழியன் இருக்கும் கிராமம் 200 மைல் தூரத்தில் இருந்தது. இவனுடைய குழந்தைகள் இறந்த விவரம் நிர்வாகத்தின் காதுகளை எட்டும் சாத்தியக்கூறே கிடையாது. எப்போதும் கஷ்டத் தில் உழலும் இவன், இப்படித் தானாகவே சம்பளப் படியை வெட்டும்படி சொன்னது ஏன்?

நிர்வாகம் கண்டுபிடித்துவிடும் என்ற பயமாக இருக்கலாம். உரிமை இல்லாத பணத்தைப் பெறுவதில் உள்ள குற்ற உணர்வாக இருக்கலாம். இல்லாவிடில், இறந்துபோன அருமைக் குழந்தைகளின் சம்பாத்தியத்தில் சீவிப்பது அவனுக்கு மன வருத்தத்தைத் தந்திருக்கலாம்.

எதுவோ, படிப்பறிவு சொட்டும் இல்லாத இந்த ஏழைத் தொழிலாளி, வேதங்கள், வியாக்கியானங்கள் ஒன்றுமே படிக்காதவன், இந்தச் செயலைச் செய்தான். இவனுடைய நடத்தைக்கான காரணத்தை நான் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேர்மையின் தரம்... தேசத்துக்குத் தேசம், மக்களுக்கு மக்கள் மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு வைத்தியரிடம் சோதனைக்கு நாளும் நேரமும் குறித்துவிட்டுப் போகாமல்விட்டால், உங்களைத் தேடி பில் கட்டணம் வந்துவிடும். நீங்கள் அந்த வைத்தியரின் அரை மணி நேரத்தைக் களவாடிவிட்டீர்கள் என்று அதற்கு அர்த்தம். மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உங்களுடைய தோட்டத்துக்குள் ஒருவர் வந்து மாங்காய் பறித்துக்கொண்டு போகலாம். ஒருவரும் கேட்க முடியாது. அங்கே இயற்கை தானாகக் கொடுக்கும் செல்வம் பொதுவானது. அப்படி என்றால், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் நேர்மையின் இலக்கணம் என்ன?

எல்லாக் கேள்விகளுக்கும் விடை திருவள்ளுவரிடத்தில் இருக்கும். அவர் என்ன சொல்கிறார்? மனிதனுடைய நற்பண்புகளுக்கு எல்லாம் ஆதாரம்... வாய்மை. அதாவது உண்மைத் தன்மை. நேர்மைக்கு வேர் வாய்மை. அது இல்லாமல் நேர்மையாக இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Transparency  துலாம்பரத் தன்மை அல்லது ஒளிவு மறைவற்ற தன்மை என்றும், Accountability  கணக்கு காட்டும் அல்லது பதில் கூறும் தன்மை என்று சொல்வதும் இதைத்தான். உதாரணத்துக்கு, ஒரு பெரிய டெண்டரைப் பகிரங்கமாக, ஒளிவுமறைவின்றிச் செயல்படுத்தும்போது, அங்கே பொய்க்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. கள்ளம் கரைந்து போகிறது!

அன்று முதல் இன்று வரை நேர்மையானவர்களால்தான் உலகம் இயங்குகிறது. அயோக்கியர்களோடு ஒப்பிடும்போது இந்த உலகத்தில் நேர்மையானவர்கள் மிகச் சிலரே. ஒரு கோலியாத்துக்கு ஒரு சிறுவன் டேவிட் போதும். நூறு கௌரவர்களை ஐந்து பாண்டவர்கள் சமன் செய்துவிடுவார்கள்.

'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.'

ஒரு சிலரின் உழைப்பில்தான் உலகம் உய்க்கிறது. சாரதி சிலர், பயணிகள் பலர். மூன்று போக விதை நெல்லைக் கண்டுபிடித்தவர் சிலர், அனுபவிக்கும் விவசாயிகள் அநேகர். கம்ப்யூட்டரையும் இணையத்தையும் உண்டாக்கியவர் சிலர். அதன் பயனை அனுபவிப்போரோ கோடிக்கணக்கில்!

பாராட்டையோ, புகழையோ, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ எதிர்பாராமல் கடைப்பிடிப்பதுதான் நேர்மை. பின்விளைவுகளின் பயத்தினால் செய்யாமல், தார்மீக சம்மதத்துக்காகச் செய்வது. அதுதான் உண்மையான நேர்மை!

மிஸ் சென்னை 99 மிகவும் சரியாகச் சொன்னதுபோல், மனிதனுக்கு அவசியமான, உன்னதமான பண்பு இது. நம் குழந்தைகளுக்கு நரியும் காகமும் கதை சொல்வதை இனிமேல் நிறுத்திவிடுவோம். விறகுவெட்டிக் கதையையும் ஆற்றிலேயே விட்டுவிடுவோம். நேர்மையாக நடப்பதால் ஏற்படும் மன சாந்திக்காக, நம் சந்ததியிரை அப்படி இருக்கத் தூண்டுவோம். படிப்பறிவு இல்லாத ஓர் ஏழை ஆப்பிரிக்க ஊழியனுக்கு இது சாத்தியமாக இருந்தது. நமக்கும் சாத்தியமாகும்!

Tuesday, April 26, 2011

3G: How to bring down your phone bill

3G: How to bring down your phone bill

 

The wise person who pointed out that you cannot get a rose without attendant thorns might well have been referring to 3G services in India. For, while there is no doubt that 3G (wherever available) has added a whole new dimension to what one can do on a handset, from watching streaming high-definition video to making video calls, the fact is that all this does not come free.

In fact, if you are the type that has been spoilt by relatively low charges for accessing the Internet on your handset using GPRS/EDGE, then it is a fair chance that you will be stunned by the kind of hole a 3G connection can blow in your wallet. For instance, while Airtel allows users to access the Internet using EDGE/GPRS connectivity on their handsets for Rs 199 per month with a 2GB data limit in Delhi, a similar plan for 3G costs Rs 750.

And that is only part of the problem, thanks to the faster connectivity on 3G, you end up doing far more browsing than you would normally do on a relatively sluggish connection. Of course, if you overshoot your data limit, you will end up being charged at the rate of 30 paise per 20KB. Which does not sound too bad on the surface, but on conversion works out to be approximately Rs 15 per MB, which in turn means more than Rs 15,000 per GB. Financial mayhem, in other words.

The good news is that, with a little prudence, you can still make the most of 3G connectivity without depreciating your bank account significantly. All it takes is some common sense and attention to download detail. (Note that this feature mainly deals with 3G usage on a phone, as that is where it is most likely to be used).

 

Pick the right plan

 

To start off, make sure you're on the right plan. As of now, most major service providers (BSNL, Airtel, Vodafone, Idea) have a number of 3G plans, but unlike the early days of accessing the Internet on your handset when you could have an unlimited data plan, there are some very strict data limits on just how much data you can use. You can get plans for long or short periods, with data usage limits applying for both.

Some operators, like Idea, have time-based plans which let you use 3G services for a limited period of time, for instance, there is a Rs 145 plan for prepaid connections in which you get 120 minutes of 3G free spread over a period of seven days.

Similarly Airtel has sachet plans that let you use small amounts of data over 3G for a limited period of time, Rs 11 for 10MB of usage for a day, for instance. The plan you choose depends on your needs, if you are the type who needs to use the mobile Internet a lot and need to download large attachments and watch lots of video, we would recommend using a high data usage plan. On the other hand, if you only occasionally need the odd burst of speed, go for one of the shorter duration ones.

 

Be wary of low-cost plans

 

A warning: do not get lured by the lower costs of relative low data usage plans, the costs you incur for data beyond your usage limit could really hurt you. As to how much data you use, Airtel has a very good data calculator that let you work out your data usage by answering some simple questions. At the cost of sounding like old fogies, we must point out that if you are the type that just needs Internet access to check your email on your handset and do some basic browsing, then you probably are better off with a "normal" EDGE/GPRS connection.

 

Watch videos with caution

 

One of the greatest attractions of 3G connectivity for many people is the fact that they can access videos on their handsets in all their glory, without having to go through the stop/stutter experience that is the staple on EDGE/GPRS connections. Well, all that video gobbles bandwidth, and lots of it.

In fact, even if you watch as little as half an hour of video per day on your handset, it is a fair chance that you will have used up close to 1.5 GB of data in a month, more, if you are the type who prefers watching videos in high-definition. The rule of thumb for online video fans with tight budgets as far as 3G goes is very simple, use only when necessary, simply because ten minutes of video can cost much more than an hour of relatively normal browsing on the same connection.

 

Avoid high definition

 

And unless it is absolutely essential, avoid hitting that "view in HD" option. The same goes for still images. Unless very essential, you should stick to viewing low-res images and not click on to their much larger versions. Loading a high-resolution image could put you back by a few MBs.

The above applies not just to viewing pictures and videos but also uploading them. So if you are the type that likes to pitch your pictures and videos on YouTube, Facebook and the like, please do not get carried away by the fact that 3G connectivity can let you upload a two minute high definition video to your social network in seconds, or that you can now post high quality pictures in Facebook without waiting for half an hour for the picture to upload. Yes, it works faster, but it does so at a price. One which you have to pay when the bill arrives!

 

Always on? Not 'always'

 

This might sound a bit ridiculous to some people, but you do not always need to keep your 3G connection running. When you do not need to do something which requires high-speed data access, you can simply go to your phone's settings and switch to the good old 2G network. Believe us, you do not need mbps speeds all the time, especially for tasks as routine as downloading mail or getting social network notifications.

 

Disable automatic software updates

 

While on the subject of notifications, wherever possible when on 3G connection, do make sure that you only keep those tasks running that you actually need. For instance, having your phone checking for software updates all the time might not be the wisest idea. Neither would clicking on the "automatically update" option for software installed on your handsets or directing your phone to automatically upload all your pictures to Facebook!

 

Go for one-time download

 

The rule here is simple: download only when you think it is necessary. And that applies to email too, we would suggest you set the email client to download only part of your mail instead of downloading everything for your viewing comfort.

Also, whenever possible, go for a one-time download rather than keeping an application running in the background, guzzling data merrily. So whether it is a news application or simply your mail, downloading it at one go at regular intervals is going to make more financial sense than letting it run in the background.

 

Checkout data-saving apps

 

Of course, as with almost everything in life these days, there are applications that are designed to keep your data costs down. A browser like Opera Mini (available across many different devices) actually compresses the size of a website before displaying it on your handset, not only does this mean faster Web browsing but also a slimmer data bill.

Similarly, applications like Flipboard on the iPad let you download all your news and social network updates at one go and then browse them at your leisure after switching off your data connection. A sensible mix of applications that use lesser data and can work in offline mode will ensure that your bills do not go crazy.

While on the subject of apps, we would advise discretion in playing online games that have high graphics requirements, sparring online with someone on something like Word Scramble is unlikely to affect your 3G bill much, but doing the same with an arcade racing game is likely to have the opposite effect.

All in all, 3G's greatest strength, its ability to give you really fast browsing speeds on the move, can turn out to be a financial pain, if not used with discretion. It all boils down to just how wisely you use it. Just like on the road, browsing speed does thrill. Alas, its cost can be just as lethal.

 

ஐயையோ ரிசல்ட்..!

பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. தெரிஞ்சா, 108 தேங்காய் உடைக்கணும் - அவர் தலை மேல.!

பின்ன என்ன சார்.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!

பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, டிவி பாக்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.

பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும்.
எட்டாவது நிமிஷம் டீ வரும்.

அம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' எம்ஜியார் (சயின்டிஸ்ட் முருகன்!) லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.

பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு டிவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.

எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.? சினிமா பாட்டு கேக்கணும்னு ஏன் அவ்ளோ ஆசையா இருக்குது?

ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், சினிமா, ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..

காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து டிபன், மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி எவன் வீட்டுக்காவது போய் செஸ் இல்லாட்டி கேரம் போர்டு ஆடிகிட்டே அரட்டை, டிவி, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.

"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் மே மாதம்.. " ஐயையோ.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே..

நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.

இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை.. ?"னு அப்பா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். அப்பா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை அப்பாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?

அப்பா நகர்ந்ததும் அம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? உங்க அத்தை ஏற்கனவே என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா உங்க அப்பா பக்கத்து உறவுக்காரங்களுக்கு ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!

மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த அப்பா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!

அப்பா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத அப்பாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!


கடவுளே.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு.. உன் உண்டியல்ல 10 ரூபா போடறேன்.

எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. ஐயையோ.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு மகேஷ் மட்டுமாவது பெயில் ஆயிடணும்.. அவன் பிட் அடிச்சிருப்பானோ.. கடவுளே.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்க
மகேஷையும் பெயில் ஆக்கிடு.. 20 ரூபா டீலிங்..!

அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.

பஸ்ல போயிட்டிருக்கும்போது, கோவில், சர்ச், மசூதி எதையும் விடலை.. என் ரிசல்ட்டுக்காக எல்லா சாமிகிட்டயும் சொல்லி வெச்சாச்சு.. என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.

ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. அம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. அப்பா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. கடவுளே.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. உண்டியல் அக்கவுண்ட்டில் இன்னும் ஒரு 5 ரூபாய் கூடியது.

ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.
பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..

என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..

நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..

திடீர்னு மகேஷ் வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. மகேஷை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!

மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க மகேஷ் வீட்டு கிட்ட போனேன்.  " பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "

என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?

அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா மகேஷ் நம்பரை பேப்பர்ல தேடியிருக்கேன்.

பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.

அப்பா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத அப்பாவின் முகம் இப்ப அழகா இருந்தது.

மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.

இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!

ஒரு மனைவி மனது வைத்தால் ..!

சிகரெட்... சீக்ரெட்...
எஸ்.கே.நிலா

'அமெரிக்க அதிபர் ஒபாமா, சிகரெட் பழக்கத்தை விட்டுவிட்டார். பதின்பருவ வயதிலிருந்தே ஒபாமாவைப் பிடித்தாட்டிய புகைப் பிசாசு, தற்போது

தலைதெறிக்க ஓட்டமெடுக்கக் காரணம், ஒபாமாவின் மனைவி மிச்சேல்!'

- உலகம் முழுக்க இல்லத்தரசிகளிடம் ஹிட் ஆகியிருக்கிறது இந்தச் செய்தி!


''புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவதென 'மறுபடியும்' நான் முடிவு செய்திருக்கிறேன்...'' - 2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது இப்படி ஓபன் டாக் விட்டார் ஒபாமா! அதிபர் நாற்காலியில் அமர்ந்ததும், பொறுப்பு உணர்வோடு புகையைக் குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்த்தார் மனைவி மிச்சேல். ஆனால், முன்னைவிட டென்ஷன் கூடிப்போனதாகச் சொல்லி, சிகரெட்களின் எண்ணிக்கை யையும் ஒபாமா கூட்டியதுதான் மிச்சம்!

வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் அதிகாரம் மற்றும் அரசியல் தொடர்பான பல முக்கிய முடிவுகளில் அதிபரின் மனைவிக்கும் பங்கு உண்டு என்பது அமெரிக்கா அறிந்த ரகசியம். அப்படித்தான், கிடப்பிலிருந்த 'புகையிலை பொருட்கள் கட்டுப் பாடு மசோதா'வை தூசுதட்டி எடுத்து, அதிபரைக் கையெழுத்திட வைத்துவிட்டார் மிச்சேல்.

இதைச் சாதிக்க, ஓராண்டு காலமாக பிரம்மப் பிரயத்தனமே செய்திருக்கிறார் மிச்சேல் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் ஜிம்மில் 45 நிமிடங்கள், வாரத்தில் இருமுறை ஒபாமாவுக்குப் பிடித்த பேஸ்கட் பால் விளையாட்டு என்று கட்டாயமாக்கிய மிச்சேல், தானும் கணவருடனேயே ஜிம்மிலும், கிரவுண்டிலும் பழியாகக் கிடந்தார். 'உடற்பயிற்சியும், பிடித்தமான விளையாட்டுகளும் ஒருவரை எப்படியான மன அழுத்தத்திலிருந்தும் விடுவித்துவிடும்' என்பதைத் தீவிரமாக மிச்சேல் நம்பியதுதான் இதற்குக் காரணம்!

அடுத்து... புகைக்கு மாற்றாக டாக்டர்கள் பரிந்துரைக்கும் 'நிக்கோடின் சூயிங்க'த்தை ஒபாமா வின் கோட் பாக்கெட்டுகளில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். புகைப்பதற்கென்றே ஒபாமா வலிய உருவாக்கி வைத்திருந்த 'பிரேக்' நேரங்களை நாசூக்காக நறுக்கினார். முக்கியமாக, அதிபரின் பிரத்யேக மருத்துவரை புகைப் பழக்கம் இல்லாத ஒருவராக தேர்ந்தெடுத்து மாற்றினார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, ஒபாமாவின் தினசரி சிகெரெட்டுகள் ஐந்தாக குறைந்தன. இதையடுத்து, வெள்ளை மாளிகை வட்டாரத்துக்குள்ளேயே புகைக்கும் வழக்கம் குறைய ஆரம்பித்ததுதான் ஹைலைட்!

க்ளைமாக்ஸாக, 'புகைப் பழக்கத்தை விட்டொழித்து விட்டேன்' என்று பகிரங்கமாக கணவரை விட்டே மீடியாவில் அறிவிக்க செய்த மிச்சேல், ''இந்த விஷயத்தில் என்னையே நீங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு, உங்கள் கணவர்களைக் காப்பாற்றுங்கள்'' என்று அமெரிக்க இல்லத்தரசிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்!

சூப்பர்ல?!


30 நிமிட அடிமை!

 

''ஒருவரின் புகைப் பழக்கத்தை மாற்ற, அவருடைய மனைவி கட்டாயம் மனது வைக்க வேண்டும் என்பது உண்மை. அதைத்தான் நிரூபித்திருக்கிறார் மிச்சேல் ஒபாமா'' என்று சொல்லும் புதுச்சேரியைச் சேர்ந்த நுரையீரல் நோய் நிபுணர்களான டாக்டர் வெங்கடேஷ்வர பாபு - டாக்டர் மஞ்சு தம்பதியர்,

''காலையில் கண் விழித்ததிலிருந்து சுமார் 30 நிமிடத்துக்குள் புகைக்கும் கணக்கை ஒருவர் துவக்கினால்... அவர் புகைக்கு அடிமை. 15 நிமிடங்களிலேயே அது துவங்கினால்... நிலைமை ரொம்ப சீரியஸ்! கட்டுப்படுத்தவில்லை என்றால்... உயிருக்கே ஆபத்துதான்.

புகைப் பழக்கம், கணவனை மட்டுமல்ல... குடும்பத்தையே பாதிக்கக்கூடிய மோசமான நோய். புகைப் பழக்கத்தின் காரணமாக கணவனுக்கு ஏற்படும் எல்லா பாதிப்புகளும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வந்து சேரும். குறிப்பாக... குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு வரும். மனைவி கர்ப்பமாக இருந்தால்... வயிற்று சிசுவின் ரத்த ஓட்டக்குறைவு, நுரையீரல் செயல்பாட்டுக் குறைவு போன்றவையும் ஏற்படும். எனவே, புகைக்கு எதிரான விழிப்பு உணர்வு மனைவிக்கு அதிஅவசியம். ஹார்ட் அட்டாக், கேன்சர் அறிகுறி போன்றவை தென்பட்ட பிறகு விழிப்பு உணர்வு அடைவதில் எந்த பிரயோஜனமும் இல்லை!'' என்று எச்சரிக்கைக் குறிப்புகளைத் தந்தனர்.

Monday, April 25, 2011

30 வகை தயிர் -மோர் ரெசிபி !

நாக்குக்கு ருசியாக என்பதோடு... உடலுக்குப் பொருத்தமானதாகவும் சாப் பாடு இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமல்லவா! அதனால், அதீத குளிர்ச்சி தேவைப்படும் இந்தக் கோடைக்கேற்ப 30 வகை தயிர்-மோர் ரெசிபிகளை இங்கே சமைத்திருக்கிறார் 'சமையல் கலை வித்தகி' கிருஷ்ண குமாரி ஜெயக்குமார்!

ருசியாக சமைப்பதோடு, அதை ரசனையுடன் பரிமாறுவதிலும்தான் இருக்கிறது நளபாக சூட்சமம். அந்த வகையில், நாவில் நீர் ஊறவைக்கும் இந்த 30 வகை ரெசிபிகளை இங்கே அழகாக அலங்கரித்திருக்கிறார் 'செஃப்' ரஜினி (சென்னை அருகேயுள்ள பள்ளிக்கரணையில் 'ஸ்டார் கார்விங்' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வரும் இவர், திருமண வைபவங்கள், விழாக்கள், வீட்டு விசேஷங்களில் காய்கறி மற்றும் பழங்களை அலங் கரித்துத் தருவதோடு, காய்கறி, பழங்கள், ஐஸ், பட்டர், சாக்லேட் மற்றும் தெர்மகோலில் கார்விங் செய்வது பற்றிய பயிற்சியையும் கொடுக்கிறார்).

இருவரின் கை வண்ணத்தில் இங்கே மிளிரும் தயிர்-மோர் ரெசிபி கள், 'ஜில்லுனு ஒரு கோடைக்காலத்தை' உங்களுக்கு உரித்தாக்கட்டும்!

எப்போதும் காரசாரமாக சாப்பிடுபவர் கள், இந்த சீஸனில் காரத்தை முற்றிலும் குறைத்துக் கொள்வது நல்லது.

 வெங்காயம் உடலைக் குளிர்ச்சியாக் கும் தன்மை கொண்டது.

 வெயில் காரணமாக நாம் அதிக அளவில் இழக்கும் சக்தியை திரும்பவும் மீட்டுத் தருவதில் எலுமிச்சைக்கு நிகர் இல்லை.

 தக்காளி ஜூஸில் சிறிது தேன் கலந்து பருகும்போது வெயிலால் உண்டான உடல் உஷ்ணம் தணியும்.

 கோடை வெயிலில் தவிர்க்க முடியாமல் சுற்ற வேண்டியிருந்தால்.. கையோடு இஞ்சியை அரைத்து சாறெடுத்து சிறிது தேன், தண்ணீர் ஊற்றி கலந்து பாட்டிலில் எடுத்துச் செல்லுங்கள். பயணத்துக்கு ஏற்ற பானம் இது.

 சூரிய உஷ்ணத்தால் உடலிலிருந்து வெளியேறக்கூடிய தாது உப்பு மற்றும் சக்தியை ஈடு செய்ய உதவுகிறது வெள்ளரிக்காய்.

 உடல் சீதோஷணத்தை சீராக வைத்துக் கொள்வதில் வாழைப்பழத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

 உடல் உஷ்ணத்தையும், தாகத்தையும் தணித்து, வயிற்றைக் குளுமையாக்கும் தர்பூசணி, கண்ணுக்கும் நல்ல குளிர்ச்சியைத் தரும்.

அதிக அளவு தாது உப்புக்கள் நிறைந்த இளநீர், தாகத்தை தணிப்ப துடன், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

 ஸ்ரீகண்ட்

தேவையானவை: கெட்டித் தயிர் - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 25 கிராம், குங்குமப்பூ (பாலில் ஊற வைக்கவும்) - கால் டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி தண்ணீர் வடியும் வகையில் 2 மணி நேரம் வைக்கவும். தண்ணீர் முழுவதுமாக வடிந்ததும் தயிரை ஒரு பாத்திரத்தில் போடவும். இதில் பொடித்த சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை சிறிய கப்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

 பூசணி - தயிர் பச்சடி

தேவையானவை: வெண் பூசணி - ஒரு கீற்று, தயிர் - 100 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூசணிக்காயைத் துருவி நீரை வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பூசணித் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பச்சை மிளகாய், சீரகம் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும். வதக்கிய பூசணியை, தயிர் கலவையுடன்  கலந்து பரிமாறவும்.

 மின்ட் கூலர்

தேவையானவை: மோர் - 150 மில்லி, புதினா இலை - 12, இஞ்சித் துருவல், மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினா, இஞ்சி, மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, மோரில் கலக்கவும். நன்றாக குளிர வைத்துப் பரிமாறவும்.

 மாம்பழ ஸ்மூத்தி

தேவையானவை: மாம்பழம் - 1, பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், கெட்டித் தயிர் (துணியில் கட்டி நீரை வடித்து எடுக்கவும்) - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - சிறிதளவு.

செய்முறை: மாம்பழத்தை நறுக்கி துண்டுகளாக்கவும். கொஞ்சம் துண்டுகளை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதியை கூழாக்கவும். இதில் சர்க்கரை, வடிகட்டிய தயிர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிய கப்களில் மாம்பழக் கலவையை ஊற்றி, மாம்பழத் துண்டுகளை மேலாகத் தூவி, குளிர வைத்துப் பரிமாறவும்.

வெள்ளரி மோர்

தேவையானவை: தயிர் - 100 கிராம், சிறிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் - தலா 1, நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக் காயை நறுக்கி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு முறை சுற்றி... தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். வடிகட்டி குளிர வைத்துப் பரிமாறவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

 இஞ்சி - தயிர் பச்சடி

தேவையானவை: இஞ்சித் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தயிர் - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந் ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப் பிலை சேர்த்து தாளிக்கவும். துருவிய இஞ்சியை அதில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். தயிரில் உப்பு சேர்த்துக் கலக்கி, வதக்கிய இஞ்சித் துருவல் கலவையுடன் கலந்து பரிமாறவும்.

இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.

 கார்ன் தயிர் வடை

தேவையானவை: சோள முத்துகள் - 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, தயிர் - 100 கிராம், பெருங்காயத் தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய கறிவேப்பிலை கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோளத் துடன் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பது போல் அரைக்கவும். அரைத்த மாவை வடை போல் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தயிருடன் உப்பு சேர்த்து அடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து தயிரில் சேர்க்கவும். வடைகளின் மேலாக தயிரை ஊற்றி... மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 சேமியா பகாளாபாத்

தேவையானவை: சேமியா - 100 கிராம், தயிர் - 50 கிராம், பால் - 50 மில்லி, இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, திராட்சை, மாதுளை முத்துக்கள் - ஒரு கைப்பிடி, ஆப்பிள் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, ஒரு நிமிடம் வைத்திருந்து வடிகட்டவும், கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும். இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தயிர், உப்பு ஆகியவற்றை தாளிப்புடன் சேர்த்துக் கலக்கவும். இதை சேமியாவில் சேர்த்துக் கலந்து... பால், பழங்களை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

அப்படியே சாப்பிடலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.

 பழ தயிர் பச்சடி

தேவையானவை: ஆப்பிள், வாழைப்பழம் - தலா 1, கறுப்பு, பச்சை திராட்சை (சேர்த்து) - 50 கிராம், மாதுளை முத்துக்கள் - 2 டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு சுளைகள் - 10, பப்பாளி - ஒரு பெரிய துண்டு, ஸ்ட்ராபெர்ரி - 4, தயிர் - 100 கிராம், தேன் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை: பழங்களைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் எல்லாப் பழங்களையும் போட்டு, தயிர் சேர்த்து நன்றாகக் கிளறவும். மேலாக தேனை ஊற்றிப் பரிமாறவும்.

விருந்தில் பரிமாறுவதற்கு ஏற்ற ரிச்சான பச்சடி இது!

 வெந்தய தயிர் பச்சடி

 

தேவையானவை: முளைகட்டிய வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன், தயிர் - 100 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய வெந்தயத்தை ஆவியில் 5 முதல் 8 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். வேக வைத்த வெந்தயத்தை சேர்த்துக் கிளறி... தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு ஏற்ற குளுமையான பச்சடி இது.

 டிரை ஃப்ரூட்ஸ் ரெய்தா

தேவையானவை: முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் (பொடியாக நறுக்கவும்) - தலா 2 டீஸ்பூன், பேரீச்சம்பழத் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், தயிர் - 100 கிராம், காய்ந்த திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: நெய்யில் திராட்சையை வறுக்கவும். தயிரில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட்டை தயிர் கலவையுடன் சேர்க்கவும். பேரீச்சம்பழத் துண்டுகள், வறுத்த திராட்சையையும் அதில் சேர்த்துக் கலக்கவும்.

விருந்துக்கு ஏற்ற சுவையான டிரை ஃப்ரூட்ஸ் ரெய்தா ரெடி!

 மலாய் லஸ்ஸி

தேவையானவை: தயிர் - 100 கிராம், பால் ஏடு, பொடித்த சர்க்கரை - தலா 2 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,  ரோஸ் வாட்டர் - 3 சொட்டு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: தயிருடன் உப்பு, சீரகத்தூள், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். இதை டம்ளரில் ஊற்றி மேலாக பால் ஏடு, ரோஸ் வாட்டரை சேர்த்துப் பரிமாறவும்.

இது... ஜீரண சக்தியைக் கூட்டும்.

 தயிர் மினி இட்லி

தேவையானவை: மினி இட்லி - 20, தயிர் - 100 கிராம், சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு - தலா கால் டீஸ்பூன், மாதுளை முத்துக்கள், முளைகட்டிய பயறு - தலா 4 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை: தயிருடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், சாட்மசாலா சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மாதுளை முத்துக்கள், முளைப்பயறு, மினி இட்லி சேர்த்துக் கலந்து, கொத்துமல்லி தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் ஆப்பிள், திராட்சை, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் சேர்க்கலாம்.

சத்தான, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு இது.

 ஜவ்வரிசி மோர் தோசை

தேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், புழுங்கலரிசி - 150 கிராம், பச்சை மிளகாய் - 8, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மோர் - 100 மில்லி, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியைத் தண்ணீரிலும், ஜவ்வரிசியை மோரிலும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, முதலில் அரிசியைத் தனியே அரைக்கவும். மோரில் ஊறிய ஜவ்வரிசியுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து... வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.

காரச் சட்னி இதற்கு சரியான ஜோடி

 புளி சேரி

தேவையானவை: தயிர் - 100 கிராம், வெண் பூசணி - ஒரு கீற்று, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், சீரகம், துருவிய இஞ்சி - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 6, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூசணியைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீர்,

மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். தேங்காயுடன் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைத்து, வெந்த பூசணி, சின்ன வெங்காயம் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். தயிர் சேர்த்துக் கிளறவும். தேங்காய் எண்ணெயைக் காய வைத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வெந்த பூசணி-தயிர் கலவையில் சேர்த்துப் பரிமாறவும்.

கேரளாவில் விருந்து, பண்டிகை நாட்களில் இந்த பதார்த்தம் கட்டாயம் இடம் பெறும், பெரிய வெள்ளரி அல்லது சுரைக்காய் பயன்படுத்தியும் செய்யலாம்.

 கத்திரிக்காய் - தயிர் கிரேவி

தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ (நீளமாக நறுக்கவும்), தயிர் - 100 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கவும்),

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கிரேவிக்கு அரைக்க: பட்டை, இஞ்சி - தலா ஒரு சிறிய துண்டு, சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், மிளகு - 8, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 6.

செய்முறை: தயிருடன் இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ளதை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி... அரைத்த விழுதைச் சேர்த்து, அடுப்பை 'சிம்'மில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தயிர் கலவை, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து வரும்போது வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்'மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

 உருளை - தயிர் கிரேவி

தேவையானவை: சிறிய உருளைக்கிழங்கு - 12, தயிர் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 5, சோம்பு - கால் டீஸ்பூன்,  பட்டை - ஒரு சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 1, நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். தேங்காயுடன் பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கி உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் தயிர் சேர்த்துக் கலந்து இறக்கி, கொத்தமல்லி, புதினா தூவவும்.

 தஹி பிண்டி

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, தயிர் - 100 கிராம், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு 3 நிமிடம் வதக்கி தனியே வைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி... சீரகத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, இஞ்சித் துருவல், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். வதக்கிய வெண்டைக்காய், தயிர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

இது, சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்!

 தஹி பக்கோடா

தேவையானவை: பச்சைப் பயறு - 100 கிராம், கறுப்பு உளுந்து - 50 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தயிர் - 150 கிராம், மிளகாய்த்தூள், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பயறு, உளுந்து இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து... இஞ்சி, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக் கவும். இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரித்த வற்றை தண்ணீரில் போட்டு தனியே எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில், தயிரை விட்டு உப்பு, சேர்த்துக் கலக்கவும். இதில் பக்கோடாக் களைப் போட்டு... மிளகாய்த் தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 தஹி பூரி

தேவையானவை: மைதா - 50 கிராம், ரவை, கேரட் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், வேக வைத்த உருளைக்கிழங்கு - 2, சாட் மசாலா - அரை டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், தயிர் - 100 கிராம், நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதாவில் ரவை, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து... சிறு சிறு பூரிகளாக இட்டு, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெந்த உருளைக்கிழங்கை மசித்து... கேரட் துருவல், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். தயிரில் மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா சேர்த்துக் கலக்கவும்.

பூரிகளின் நடுவே சிறு ஓட்டை போட்டு, அதனுள் மசித்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து, மேலாக தயிர் ஊற்றி... கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.

 மார்வாரி கடி

தேவையானவை: புளித்த தயிர் - 100 கிராம், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பிரிஞ்சி இலை - 2, கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தயிருடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு கலந்து, மிதமான தீயில் 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். மற்றொரு கடாயில் நெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள், பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும். மிளகாய்த்தூளை ஒரு டீஸ்பூன்

தண்ணீரில் கரைத்து, தயிர் கலவையில் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.

சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.

 உருண்டை மோர்க்குழம்பு

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 50 கிராம், சோம்பு, மஞ்சள்தூள், கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மோர் - 200 மில்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து... சோம்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தேங்காயுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து, தண்ணீர் விட்டு நீர்க்க கரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து... உப்பு, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை 'சிம்'மில் வைத்து ஒவ்வொரு உருண்டைகளாகப் போடவும். எல்லாம் சேர்ந்துக் கொதித்ததும், மோரில் சிட்டிகை உப்பு,

மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி, குழம்புடன் சேர்த்து, கொதித்து வரும்போது இறக்கவும். தேங்காய் எண்ணெயை மேலாக ஊற்றவும்.

 ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி

தேவையானவை: தயிர் - 100 கிராம், ஸ்ட்ரா பெர்ரி பழம் - 4, பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாக நுரை வரும்வரை மிக்ஸியில் அடிக்கவும். குளிர வைத்துப் பரிமாறவும்.

 சூரத் கடி

தேவையானவை: தயிர் - 150 கிராம், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, சர்க்கரை, நெய், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தயிரை நன்றாகக் கடைந்து, கடலை மாவு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர், சீரகம், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய், எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கறிவேப்பிலை தாளித்து, தயிர் கலவையை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து வரும்போது கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். சூடான சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

 தஹி ரிங் சாட்

தேவையானவை: அரிசி மாவு - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சாட் மசாலா - அரை டீஸ்பூன், ஓமப்பொடி - 2 டேபிள்ஸ்பூன், கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தயிர் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை கையில் எடுத்து சிறு சிறு வளையம் போல் வட்ட வடிவமாக (ரிங்) சுற்றிக் கொள்ளவும். இதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெந்த ரிங்க் துண்டுகள், கேரட் துருவல், வெங்காயம், சிறிதளவு உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், சாட் மசாலா, தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஓமப்பொடி, கொத்த மல்லியை மேலாகத் தூவி பரிமாறவும்.

 இன்ஸ்டன்ட் தயிர் வடை

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 8, தயிர் - 50 கிராம், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி விழுது - தலா ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பிரெட் துண்டுகளின் ஓரத்தை வெட்டி எடுத்துவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தயிர், கேரட், வெங்காயம், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, உதிர்த்த பிரெட்டை சேர்த்துக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதில் சிறிது எடுத்து வடை போல் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். பரிமாறும்போது தயிரை சிறிது சிறிதாக ஊற்றி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 தஹி பனீர்

தேவையானவை: பனீர் - 200 கிராம், தயிர் - 100 கிராம், இஞ்சி, பட்டை - தலா ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 4, கசகசா, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, வெங்காயம் - 1 (நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, பூண்டு, சீரகம், கசகசா, பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும், கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும்  பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் பனீர் துண்டுகள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி, பனீர் கலவையுடன் சேர்த்துக் கிளறி... புதினா, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சப்பாத்தி, புலாவ் வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

 கம்பு மோர்க்கூழ்

தேவையானவை: கம்பு மாவு - 100 கிராம், மோர் - 150 மில்லி, சின்ன வெங்காயம் - 6, சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து... அதில் கம்பு மாவு, உப்பு, சீரகம் சேர்த்துக் கூழாக காய்ச்சவும். காய்ச்சிய கூழை ஆற வைத்து, மோர் சேர்த்துக் கலக்கவும். இதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துப் பருகவும்.

 மாம்பழ மோர்குழம்பு

தேவையானவை: மாம்பழம் - 1, தயிர் - 100 கிராம், இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொதிக்கவிடவும். இதில் உப்பு, கடைந்த தயிர், மாம்பழத் துண்டுகள் சேர்த்து, கொதித்து வந்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.  

 மோர் வடை

தேவையானவை: புழுங்கலரிசி, புளித்த மோர் - தலா 200 கிராம், ஜவ்வரிசி - 50 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 5, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை மோரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து... இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து மீண்டும் அரைக்கவும். ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து, அரைத்த மாவுடன் சேர்க்கவும். இதனுடன் உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து, சிறிய வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கிளிப்பேச்சு...மொழி போச்சு !

 குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி

ராகுல் சென்... கொல்கத்தாவைச் சேர்ந்த இந்த நான்கு வயது சிறுவனை என்னிடம் அழைத்து வந்தார்கள். ''குட்டி ராகுலுக்கு என்ன ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும்?'' என தமிழில் கேட்டேன். பதில் சொல்லத் தடுமாறினான். அதையே ஆங்கிலத்தில் கேட்டேன். அதற்கும் பதிலில்லை. அவன் தாய்மொழியான பெங்காலியில் கேட்டபோதும் தடுமாற்றமே!

''இப்படித்தான்... அவனுக்குப் பேச்சும் சரியா வரல... நாம பேசறதைப் புரிஞ்சுக்கவும் சிரமப்படறான். பேச்சுலயே இவ்வளவு பிரச்னை இருந்தா, பாடமெல் லாம் எப்படிப் படிப்பான்..?'' என்றார் அவனுடைய அம்மா மனதெல்லாம் தவிப்புடன்.

அவரிடம், ''குழந்தைகிட்ட வீட்ல என்ன மொழியில பேசுவீங்க..?'' எனக் கேட்டேன். ''எங்க தாய்மொழியில தான் பேசுறோம் டாக்டர்...'' என்றார். ''அவனுடைய அப்பா அவனிடம் என்ன மொழியில பேசுகிறார்?'' என்றதற்கு, ''இங்கிலீஷ், பெங்காலினு ரெண்டு மொழி யிலயும் பேசுவார்'' என்றார். ''அக்கம் பக்கத்துல அவன் வயசு குழந்தைங்க அவன் கூட விளையாடும் போதும், ஸ்கூல்லயும் என்ன மொழியில பேசுவாங்க..?'' என்றேன். ''நாங்க இருக்கறது கொஞ்சம் வசதியான அபார்ட் மென்ட். அங்க எல்லா குழந்தைகளும் இங்கிலீஷ் மீடியத்துல படிக்கறதால பெரும்பாலும் இங்கிலீஷ்தான். ஸ்கூல்லயும் அதேதான்'' என்றார் அவனுடைய அம்மா பயத்துடனும் குழப்பத்துடனும்!

அங்குதான் பிரச்னையே! குழந்தை, தான் வளரும் சூழ்நிலையில் தமிழ், ஆங்கிலம், பெங்காலி என்று மூன்று மொழிகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறான். அங்கே, பெரும்பாலானவர்களால் பேசப்படும் மொழி ஆங்கிலம். ஆனால், அவனுடன் அதிகம் பேசும் அம்மா, பெங்காலியில் பேசியிருக்கிறார். அதனால் எந்த மொழியையும் முழுமையாக கற்றுக் கொள்ள முடியாமல் போனதால், பள்ளியிலும் சரியாகப் படிக்க முடியவில்லை; தான் பேச நினைக்கும் விஷயங்களைச் சரியாகவும் முழுமையாகவும் சொல்ல முடியவில்லை அவனால்.

மாநிலம் விட்டு மாநிலமோ, வெளிநாடு சென்றோ வாழும் இளம் பெற்றோர்களின் சிறுவயது பிள்ளைகள் சந்திக்கும் பெரும் பிரச்னை இது. இதற்கு தீர்வு..?! வாழிடத்திலும் சுற்றுப்புறத்திலும் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியையே பேசுவதுதான் குழந்தையின் பகுத்தறிவை வளர்க்கும்; நட்பு வட்டமும் விரிவடையும். இல்லையென்றால், 'எனக்கு அவங்ககிட்ட என்ன பேசுறதுனு தெரியலையே...' என்று வீட்டுக்குள்ளயே சுருங்கிவிடும். அது, குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் தடுக்கும்.

க்ருஷாங்கினியின் கதையைப் பார்ப்போம். உலக மேப்பில் எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும், சரியாகக் காட்டுவாள். ஒரு நாட்டின் கொடியைக் காண் பித்தால்... எந்த நாட்டுக் கொடி என்பதை அழகு மழலையில் அடுத்த நொடியே சொல்லி விடுவாள். வீட்டுக்கு யார் வந்தாலும் இவளைக் கூப்பிட்டு 'அதை சொல்லும்மா... இதை சொல்லும்மா' என்று பெருமைப்படுவார்கள் பெற்றோர். ஆனால், அவளிடம் வேறு எந்த விஷயங் களைச் சொன்னாலும் உடனே புரிந்து கொள்ள மாட்டாள். காரணம், சொன்னதைச் திருப்பி சொல்லும் கிளிப்பிள்ளையாகத்தான் க்ருஷாங்கினி வளர்க்கப்பட்டிருக்கிறாள். பெற்றோர் திரும்பத் திரும்பச் சொல்லித் தந்தவற்றை மனப்பாடமாக வைத்துக் கொண்டு, யார் கேட்டாலும் 'கடகடவென' ஒப்பித்திருக்கிறாள்.

உண்மையான மொழியறிவு என்பது சொன்னதைத் திருப்பிச் சொல்லும் 'கிளிப் பேச்சு' அல்ல. ஒரு விஷயத்தைக் காதால் கேட்டு, கண்ணால் பார்த்து, அறிவால் புரிந்து கொண்டு பேசுவதுதான் குழந்தையின் பகுத்தறிவை ஒழுங்காகவும் சரியாகவும் வளர்க்கும். அது இருந்தால்தான் எங்கும் எதிலும் உச்சத்தை தொட முடியும்.

அறிவார்ந்த மொழிப்பேச்சு இருக்கும் குழந்தைதான் தான் நினைக்கும், உணரும் விஷயங்களைச் சரியாகச் சொல்லும். அந்தத் திறன் இருக்கிற குழந்தையால்தான் பள்ளியில் என்ன சொல்லித் தருகிறார்கள் என்பதை முழுமையாகப் புரிந்து படிக்க முடியும். அப்படியான திறன் இல்லாத குழந்தைகள், பிராக்டிகல் நாலெட்ஜில் பின்தங்குவார்கள். உதாரணமாக, 'ரைட்டிங்' என்ற ஆங்கில வார்த்தையின் ஸ்பெல்லிங்கை மனப்பாடம் செய்து 'டிக்டேஷன்'ல் சரியாக எழுதி விடுவார்கள். ஆனால், வகுப்பில் 'ரைட்டிங்' என்ற வார்த்தையை வைத்து ஐந்து வரிகள் சுயமாக எழுதச் சொன்னால்... விழிபிதுங்கி நிற்பார்கள்.

மாறாக, 'ரைட்டிங்' என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை புரிந்து வைத்திருக்கும் குழந்தை, அழகான கட்டுரையையே எழுதி மிஸ்ஸிடம் 'வெரிகுட்' வாங்கி, அந்த நிமிட ஸ்டார் ஆகிவிடுவாள்.

ஆகையால், உங்கள் குழந்தை சொன்னதைச் சொல்லும் 'கிளிப்பிள்ளை'யாக இருக்கிறதா..? அறிவார்ந்த 'மொழிப்பிள்ளை'யாக இருக் கிறதா என்பதை கூர்ந்து கவனியுங்கள். உங்கள் கவனிப்புதான் குழந்தையை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற வைக்கும் ஏணி!

குருப்பெயர்ச்சி பலன்கள் !

09.5.2011 முதல் 16.5.2012 வரை

 'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

நிகழும் கர வருடம் சித்திரை மாதம் 25-ம் தேதி திங்கட்கிழமை (9.5.2011) சுக்ல பட்சத்து சஷ்டி திதியில் புனர்பூசம் நட்சத்திரம் சூலம் நாமயோகம் தைத்துலம் நாமகரணம் நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில் குரு ஹோரையில் சூரியம் உதயம் புக பெயர்ச்சி நாழிகை 48-க்கு சரியான நேரம் அதிகாலை மணி 1.12க்கு உபயவீடான மீனத்திலிருந்து சர வீடான மேஷத்துக்குள் குருபகவான் நுழைகிறார். மெய் ஞானத்துக்கும், வேதங்களுக்கும், உபநிடதங்களுக்கும் உரிய கிரகமான குருபகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை மேஷ ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார்.

 

மேஷம்: தொலைநோக்கு சிந்தனையுள்ளவர்களே... குருபகவான் ராசிக்குள்ளேயே ஜென்ம குருவாக அமர்வதால், எதிர்பார்த்தவை தாமதமாகும். குரு உங்களின் 7-ம் வீட்டையும், 5-ம் வீட்டையும் பார்ப்பதால், ஓரளவு நிம்மதி உண்டு. குரு உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால், பணவரவு ஏற்படும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், அந்த நட்சத்திரக்காரர்களுக்கு உடல் உபாதை வந்து செல்லும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை குருபகவான் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், அந்த நட்சத்திரக்காரர்களுக்கு வீண் விரயம் ஏற்படக்கூடும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், அந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு தூக்கமின்மை, விரக்தி வரக்கூடும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் சம்பளம் உயரும்.  

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவாலயத்திலுள்ள ஸ்ரீதட்சணாமூர்த்தியை வியாழக் கிழமையில் சென்று வணங்குங்கள்.

ரிஷபம்: கூடி வாழ்பவர்களே... குருபகவான் உங்கள் ராசிக்கு விரய வீடான 12-ம் வீட்டில் அமர்வதால், குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அஷ்டமதியாபதியான குருபகவான் 12-ல் மறைவதால், செலவுகள் அதிகரிக்கும். குருபகவான் உங்கள் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். குரு 6-ம் வீட்டையும், 8-ம் வீட்டையும் பார்ப்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், உடல் உபாதை வந்து செல்லும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால்... ஆடை, ஆபரணம், சொத்துச் சேர்க்கை உண்டு. 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் உங்கள் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிட்டும்.  

பரிகாரம்: அருகிலிருக்கும் ஸ்ரீபெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்குங்கள்.

மிதுனம்: சமாதானத்தை விரும்புபவர்களே... குருபகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் தொடர்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மகளுக்கு உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டையும், 7-ம் வீட்டையும் குரு பார்ப்பதால், தைரியம் கூடும். உடல் நலக் கோளாறு நீங்கும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், வீடு, வாகன வசதி பெருகும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால்... உங்களின் கௌரவம் உயரும். வியாபாரத்தில்  புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்துக்கு சென்று நெய் விளக்கு ஏற்றுங்கள்.

கடகம்: கடமை தவறாதவர்களே...  உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமரும் குரு பகவான், உங்களை திடமான முடிவுகளை எடுக்க வைப்பார். உங்கள் ராசிக்கு 2-ம் வீடான தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். உங்கள் ராசிக்கு சுக வீடான 4-ம் வீட்டையும், 6-ம் வீட்டையும் குரு பார்ப்பதால், உடல் உபாதை நீங்கும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், வீண் அலைச்சல் ஏற்படலாம். என்றாலும், பணவரவு அதிகரிக்கும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை குருபகவான், பரணி நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்ப்புகள் அடங்கும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோக ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். சம்பளம் உயரும்.

பரிகாரம்: குலதெய்வ கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

சிம்மம்: வாய்மையாளர்களே...  உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குருபகவான் உங்கள் ராசியையும், 3-ம் வீட்டையும் பார்ப்பதால், தோற்றப் பொலிவு கூடும். தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும். குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மகனுக்கு வேலை கிடைக்கும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், மகம் நட்சத்திரக்காரர்களுக்கு  உடல் உபாதை வந்து நீங்கும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால், மகம் நட்சத்திரத்திரக்காரர்களுக்கு சொத்து சேரும். ஆனால் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு காரியத் தடங்கல் வந்து செல்லும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிநாதனான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும்.  

பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயம் சென்று நவக்கிரக வரிசையில் உள்ள குரு பகவானை வணங்குங்கள்.

கன்னி: கலகலப்பாக பேசுபவர்களே... உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குருபகவான் நுழைவதால், குடும்பத்தில் நல்லது நடக்கும். உங்கள் ராசிநாதனான புதனுக்கு பகைவரான குரு 8-ல் மறைவதால், எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத நிலை இருக்கும். குரு பகவான் உங்களது 2-ம் வீட்டையும், சுக ஸ்தானத்தையும் பார்ப்பதால், உடல் நலம் சீராகும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால், குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், போராட்டமாகவே இருக்கும். என்றாலும், வெற்றி பெறுவீர்கள். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் தனபாக்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், பிரபலங்கள் அறிமுகமாவார்கள். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், உறவினருடன் கருத்து மோதல் வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள்.    

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்குங்கள்.

துலாம்: நடுநிலையாளர்களே... 9.5.2011 முதல் 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் தொடர்வதால். எதிர்பாராத பணவரவு உண்டு. குரு உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால், கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உரியவரான குரு பகவான் 7-ம் வீட்டில் நுழைவதால், கணவருக்கு உடல் உபாதை வரக்கூடும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டையும், லாப வீட்டையும் குரு பார்ப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், தடைகள் நீங்கும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், அடிப்படை வசதிகள் பெருகும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில், சக ஊழியர்கள் மதிப்பார்கள்.  

பரிகாரம்: அருகிலுள்ள புற்றுமாரியம்மனை வணங்குங்கள்.

 விருச்சிகம்: மனசாட்சி உள்ளவர்களே... குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் நுழைவதால், தடைகள் இருந்தாலும் ஓயமாட்டீர்கள். குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை பார்ப்பதால், வருமானம் உயரும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குரு பகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு மறைமுக விமர்சனங்கள் வந்து செல்லும். ஆனால்... விசாகம் 4-ம் பாதம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால், கணவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மற்றவர் களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

பரிகாரம்: அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று வணங்குங்கள்.

 

தனுசு: தாராள மனது கொண்டவர்களே... 9.5.2011 முதல் 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் தொடர்வதால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவர் அன்பாக இருப்பார். குரு உங்கள் ராசியை பார்ப்பதால், புதுத் தெம்பு பிறக்கும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டையும், லாப வீட்டையும் பார்ப்பதால், வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வீடு கட்டுவது, வாங்குவது லாபகரமாக முடியும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால், பணத் தட்டுப்பாடு ஏற்படும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் உங்கள் பாக்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.

பரிகாரம்: ஸ்ரீகாலபைரவரை வணங்குங்கள்.

மகரம்: பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே... உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். 4.11.11 முதல் உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைவதால்... மருத்துவச் செலவுகள் வந்து செல்லும். குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால், சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். உங்களின் 10-ம் வீட்டையும், விரய வீடான 12-ம் வீட்டையும் குரு பார்ப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால்... மன உளைச்சல், காரியத் தடை வந்து போகும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால்... திடீர் பணவரவு, சொத்து சேர்க்கை உண்டு. 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

பரிகாரம்: ஸ்ரீலஷ்மி நரசிம்மரை வணங்குங்கள்.  

கும்பம்: கொடுத்துச் சிவந்த கரத்துக்குச் சொந்தக்காரர்களே... குருபகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், ஓரளவு நிம்மதி கிட்டும்.  உங்களின் 7-ம் வீட்டை குரு பார்ப்பதால், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டையும், லாப வீட்டையும் பார்ப்பதால், பணவரவு திருப்தி தரும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். என்றாலும்... வீண் செலவுகள், டென்ஷன், வந்து செல்லும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. தங்க ஆபரணம் வாங்குவீர்கள். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

பரிகாரம்: ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்குங்கள்.                

மீனம்: யதார்த்தவாதிகளே... உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குரு பகவான் உங்களின் ஆறாவது வீட்டையும், 8-வது வீட்டையும் பார்ப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குரு உங்களின் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு. 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், பணப்பற்றாக்குறை, அலைச்சல் வந்து செல்லும். வியாபாரத்தில் புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றமும், சம்பள உயர்வும் கிட்டும்.  

பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை வணங்குங்கள்