Monday, April 25, 2011

குருப்பெயர்ச்சி பலன்கள் !

09.5.2011 முதல் 16.5.2012 வரை

 'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

நிகழும் கர வருடம் சித்திரை மாதம் 25-ம் தேதி திங்கட்கிழமை (9.5.2011) சுக்ல பட்சத்து சஷ்டி திதியில் புனர்பூசம் நட்சத்திரம் சூலம் நாமயோகம் தைத்துலம் நாமகரணம் நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில் குரு ஹோரையில் சூரியம் உதயம் புக பெயர்ச்சி நாழிகை 48-க்கு சரியான நேரம் அதிகாலை மணி 1.12க்கு உபயவீடான மீனத்திலிருந்து சர வீடான மேஷத்துக்குள் குருபகவான் நுழைகிறார். மெய் ஞானத்துக்கும், வேதங்களுக்கும், உபநிடதங்களுக்கும் உரிய கிரகமான குருபகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை மேஷ ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார்.

 

மேஷம்: தொலைநோக்கு சிந்தனையுள்ளவர்களே... குருபகவான் ராசிக்குள்ளேயே ஜென்ம குருவாக அமர்வதால், எதிர்பார்த்தவை தாமதமாகும். குரு உங்களின் 7-ம் வீட்டையும், 5-ம் வீட்டையும் பார்ப்பதால், ஓரளவு நிம்மதி உண்டு. குரு உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால், பணவரவு ஏற்படும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், அந்த நட்சத்திரக்காரர்களுக்கு உடல் உபாதை வந்து செல்லும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை குருபகவான் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், அந்த நட்சத்திரக்காரர்களுக்கு வீண் விரயம் ஏற்படக்கூடும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், அந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு தூக்கமின்மை, விரக்தி வரக்கூடும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் சம்பளம் உயரும்.  

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவாலயத்திலுள்ள ஸ்ரீதட்சணாமூர்த்தியை வியாழக் கிழமையில் சென்று வணங்குங்கள்.

ரிஷபம்: கூடி வாழ்பவர்களே... குருபகவான் உங்கள் ராசிக்கு விரய வீடான 12-ம் வீட்டில் அமர்வதால், குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அஷ்டமதியாபதியான குருபகவான் 12-ல் மறைவதால், செலவுகள் அதிகரிக்கும். குருபகவான் உங்கள் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். குரு 6-ம் வீட்டையும், 8-ம் வீட்டையும் பார்ப்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், உடல் உபாதை வந்து செல்லும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால்... ஆடை, ஆபரணம், சொத்துச் சேர்க்கை உண்டு. 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் உங்கள் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிட்டும்.  

பரிகாரம்: அருகிலிருக்கும் ஸ்ரீபெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்குங்கள்.

மிதுனம்: சமாதானத்தை விரும்புபவர்களே... குருபகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் தொடர்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மகளுக்கு உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டையும், 7-ம் வீட்டையும் குரு பார்ப்பதால், தைரியம் கூடும். உடல் நலக் கோளாறு நீங்கும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், வீடு, வாகன வசதி பெருகும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால்... உங்களின் கௌரவம் உயரும். வியாபாரத்தில்  புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்துக்கு சென்று நெய் விளக்கு ஏற்றுங்கள்.

கடகம்: கடமை தவறாதவர்களே...  உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமரும் குரு பகவான், உங்களை திடமான முடிவுகளை எடுக்க வைப்பார். உங்கள் ராசிக்கு 2-ம் வீடான தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். உங்கள் ராசிக்கு சுக வீடான 4-ம் வீட்டையும், 6-ம் வீட்டையும் குரு பார்ப்பதால், உடல் உபாதை நீங்கும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், வீண் அலைச்சல் ஏற்படலாம். என்றாலும், பணவரவு அதிகரிக்கும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை குருபகவான், பரணி நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்ப்புகள் அடங்கும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோக ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். சம்பளம் உயரும்.

பரிகாரம்: குலதெய்வ கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

சிம்மம்: வாய்மையாளர்களே...  உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குருபகவான் உங்கள் ராசியையும், 3-ம் வீட்டையும் பார்ப்பதால், தோற்றப் பொலிவு கூடும். தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும். குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மகனுக்கு வேலை கிடைக்கும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், மகம் நட்சத்திரக்காரர்களுக்கு  உடல் உபாதை வந்து நீங்கும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால், மகம் நட்சத்திரத்திரக்காரர்களுக்கு சொத்து சேரும். ஆனால் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு காரியத் தடங்கல் வந்து செல்லும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிநாதனான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும்.  

பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயம் சென்று நவக்கிரக வரிசையில் உள்ள குரு பகவானை வணங்குங்கள்.

கன்னி: கலகலப்பாக பேசுபவர்களே... உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குருபகவான் நுழைவதால், குடும்பத்தில் நல்லது நடக்கும். உங்கள் ராசிநாதனான புதனுக்கு பகைவரான குரு 8-ல் மறைவதால், எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத நிலை இருக்கும். குரு பகவான் உங்களது 2-ம் வீட்டையும், சுக ஸ்தானத்தையும் பார்ப்பதால், உடல் நலம் சீராகும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால், குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், போராட்டமாகவே இருக்கும். என்றாலும், வெற்றி பெறுவீர்கள். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் தனபாக்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், பிரபலங்கள் அறிமுகமாவார்கள். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், உறவினருடன் கருத்து மோதல் வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள்.    

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்குங்கள்.

துலாம்: நடுநிலையாளர்களே... 9.5.2011 முதல் 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் தொடர்வதால். எதிர்பாராத பணவரவு உண்டு. குரு உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால், கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உரியவரான குரு பகவான் 7-ம் வீட்டில் நுழைவதால், கணவருக்கு உடல் உபாதை வரக்கூடும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டையும், லாப வீட்டையும் குரு பார்ப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், தடைகள் நீங்கும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், அடிப்படை வசதிகள் பெருகும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில், சக ஊழியர்கள் மதிப்பார்கள்.  

பரிகாரம்: அருகிலுள்ள புற்றுமாரியம்மனை வணங்குங்கள்.

 விருச்சிகம்: மனசாட்சி உள்ளவர்களே... குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் நுழைவதால், தடைகள் இருந்தாலும் ஓயமாட்டீர்கள். குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை பார்ப்பதால், வருமானம் உயரும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குரு பகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு மறைமுக விமர்சனங்கள் வந்து செல்லும். ஆனால்... விசாகம் 4-ம் பாதம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால், கணவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மற்றவர் களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

பரிகாரம்: அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று வணங்குங்கள்.

 

தனுசு: தாராள மனது கொண்டவர்களே... 9.5.2011 முதல் 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் தொடர்வதால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவர் அன்பாக இருப்பார். குரு உங்கள் ராசியை பார்ப்பதால், புதுத் தெம்பு பிறக்கும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டையும், லாப வீட்டையும் பார்ப்பதால், வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வீடு கட்டுவது, வாங்குவது லாபகரமாக முடியும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால், பணத் தட்டுப்பாடு ஏற்படும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் உங்கள் பாக்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.

பரிகாரம்: ஸ்ரீகாலபைரவரை வணங்குங்கள்.

மகரம்: பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே... உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். 4.11.11 முதல் உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைவதால்... மருத்துவச் செலவுகள் வந்து செல்லும். குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால், சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். உங்களின் 10-ம் வீட்டையும், விரய வீடான 12-ம் வீட்டையும் குரு பார்ப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால்... மன உளைச்சல், காரியத் தடை வந்து போகும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால்... திடீர் பணவரவு, சொத்து சேர்க்கை உண்டு. 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

பரிகாரம்: ஸ்ரீலஷ்மி நரசிம்மரை வணங்குங்கள்.  

கும்பம்: கொடுத்துச் சிவந்த கரத்துக்குச் சொந்தக்காரர்களே... குருபகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், ஓரளவு நிம்மதி கிட்டும்.  உங்களின் 7-ம் வீட்டை குரு பார்ப்பதால், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டையும், லாப வீட்டையும் பார்ப்பதால், பணவரவு திருப்தி தரும். 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். என்றாலும்... வீண் செலவுகள், டென்ஷன், வந்து செல்லும். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. தங்க ஆபரணம் வாங்குவீர்கள். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

பரிகாரம்: ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்குங்கள்.                

மீனம்: யதார்த்தவாதிகளே... உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குரு பகவான் உங்களின் ஆறாவது வீட்டையும், 8-வது வீட்டையும் பார்ப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குரு உங்களின் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. 9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால், பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். 22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு. 2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், பணப்பற்றாக்குறை, அலைச்சல் வந்து செல்லும். வியாபாரத்தில் புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றமும், சம்பள உயர்வும் கிட்டும்.  

பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை வணங்குங்கள்