Wednesday, December 21, 2011

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?‏ (கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பதும் கூட)

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?‏ (கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பதும் கூட)

 

 

எப்போதும் சிரித்த முகம்.

எப்போதும் சிரிப்பதற்கு நாங்கள் என்ன காமெடி பீஸ்சா ?
   
மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்

அவர்கள் எங்களை மகளாக நினைபதில்லையே !
  

காலையில் முன் எழுந்திருத்தல். 

இப்போ மட்டும் என்ன நீங்களா எழுந்திருகிரிங்க ?
   
பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.

எப்போ சேவல் கூவும் முன்பேவா ?
   
நேரம் பாராது உபசரித்தல்.

உங்களுக்கே இது ஓவரா தெரியல ?
   
கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.

அப்போ எங்க குடும்பத்தரோடு நீங்கள் அனுசரிக்க தயாரா ?   

 

எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.

குறை சொல்லற போல ஏன் நடகுரீங்க ?   

 

அதிகாரம் பண்ணக் கூடாது.

பண்ணிட்டா மட்டும் !   

 

குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.

பார்டா...பெரிய மாயாண்டி குடும்பத்தார்,பிரிக்கிரோமாம் !அப்போ எங்களையும் அம்மா வீட்டில் இருந்து பிரிக்க கூடாது சொல்லிட்டேன் !   

 

கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

எவ்ளோ நாளைக்கு தான் அன்பாவே சொல்றது, அதிரடி தான் வேலைக்கு ஆகும் !   

 

கணவனை சந்தேகப்படக் கூடாது.

ஹி ஹி ஹி அப்போ போன் கால் வந்தா வெளியே போய் தனியா பேச கூடாது !   

 

குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.

அதை எதுக்கு சொல்லணும், அதான் ஊருக்கே தெரியுமே !   

 

பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

நீங்களும் நண்பரோடு வெளியே சுத்துவதை குறைக்கணும் !   

 

வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது

அப்போது தானே வாயை திறக்காமல் கேட்பீர்கள் !    

 

கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

உங்க குடும்பத்தை உபசரிப்பதே பெருசு, இதுல உறவினர் வேற ?   

 

இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

என்ன இருக்கு திருப்தி அடைய ?   

 

அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

ஏன் அதற்கு மேல் சம்பாதிக்க முடியாதா 

  

குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்ளோ நாள் அதானே நடக்குது.   

 

கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.

அதெப்படி சொல்லி கொடுங்களேன் !   

 

கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.    

ஏன் வேறு ஏதாவது மேட்டர் தெரிஞ்சிடும்னு பயமா ?

 

தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

எப்போ ஒரு வருசத்துக்கு முன்னாடியே வா ?   

 

எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.

ஒ எதிர்கால திட்டம் கூட இருக்கா ! சொல்லவே இல்லை !   

 

தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

ஏன்,அப்போ தானே கதையை கேட்டு நல்லா குறட்டை விட்டு தூங்க முடியும் !   

 

தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும். 

உண்மையை சொன்னால் ஏன் மறுக்கனும் ?

 

அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.   

உடைகளை கூட எங்கள் விருபடிற்கு உடுத்த கூடாதுன்ணா....என்ன வாழ்க்கைடா !

 

குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

நாங்களும் அதையே தான் சொல்றோம் !   

 

சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

அதுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிடுங்க !   

 

கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க முதலில் பழகுங்கள் !   

 

பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏன் உங்களுக்கு இல்லைன்னா ?   

 

உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில்

எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.   

தெளிவா சொல்லிட்டா செஞ்சிடுவீங்களாக்கும் !

 

தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

முதலில் தம், தண்ணி இதை நீங்கள் விடுங்கள் !   

 

உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆமா இவங்க பெரிய 6 pack வச்சிருகாங்க பாரு.முதலில் தொந்தியை குறைங்க பா !

 

இந்த எதிர்பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும். பின்பற்றித்தான் பாருங்களே உங்களுக்கே எல்லாம் புரியும்.   

நானும் இதையேதான் சொல்றேன் எல்லா ஆண்களுக்கும் !