Saturday, February 4, 2012

இட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன்

இட்லி, தோசை கடை மாவு:

ஒரு ஸ்லோ பாய்ஸன்

என்ன தலைப்பைப் பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது பெரிய உண்மை. பரோட்டா மைதாவினால் செய்த பண்டம் அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரிதளவில் பேசப்பட்ட செய்தி. பரோட்டாவது நமது பாரம்பரய உணவு அல்ல, மேலும்
அதை இளைஞர்கள்தான் உண்ணுவார்கள், ஆனால் இப்பொழுது ஒரு வயது குழந்தை முதல் 80 வயது வயாதனவர்கள் வரை உண்பது "இட்லி" எனப்படும் ஒரு தமிழனின் உணவு.


இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி என்னததான் பிரச்சினை என்கிறீர்களா, அதற்குத் தேவையான் மாவு பற்றி தான் இந்த ஆய்வு கட்டுரை.

ஆம் ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் எலக்ட்ரானிக் கிரைன்டர்ஸ் வந்தது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிப் போனது. சமீபமாக ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டி தொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை விற்கப்படுகிறது. மக்களும் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மெல்ல மறந்து வருகின்றனர்.


முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமாதான் இப்போது நம்ம வாண்டுகளிடம் " தம்பி ஒடி போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு தெருமுனை கடையில வாங்கி வா" அப்ப்டின்னு சொல்லி வாங்கிவந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது முடியும் இட்லி தோசை சாம்ராஜ்யம் நடக்கும். ப்போது இந்தமாவால் பேச்சலர்ஸ் கூட இட்லி தோசை செய்கின்றனர்.


இந்த மாவு ஒரு உயிர்கொல்லி - ஸ்லோ பாய்ஸ்ன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இப்பொழுது கூறுகிறேன். உங்கள் பங்கிற்கு நீங்களும் இந்த விழிப்புனர்ச்சியை உங்கள் உற்றார் உறவினர்களிடையே கொண்டு செல்லுங்கள்.

1.
நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI தர சான்றிதழ் கிடையாது. அதனால் இது எந்த ஒரு தரக்கட்டுப்பாட்டு கூடத்திலும் சோதனை செய்யப் படுவதில்லை. எனவே சுத்தம் சுகாதாரம் பற்றியெல்லாம் கவலைப் படாமல் எங்கெங்கோ தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

2.
இந்த மாவு சில மட்ட்மான அரிசியும் உளுந்தும் பயன்படுத்தப் படுவது மட்டுமல்லாமல், முக்கியமாக மாவுக்கு தோலில் வரும் காயத்திற்கு பயன்படுத்தபடும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போடுவதால் மாவுக்கு புளிப்பு வாசனை கண்டிப்பாக வராது. அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை கலக்கின்றனர்.  இதே மாதிரி வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூனாவது நாள் முகர்ந்து பாருங்கள் புளிப்பு வாசைனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்க்கத்தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரன்டி அளித்தும் ஒரு வாசனை வராமல் இருக்க காரணம் இந்த போரிக் பவுடர் மற்றும் ஆரோட் மாவுதான்.


3.
முக்கியமாக இந்த மாவை அரவை செய்யும் கிரைன்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் மட்டுமே அரைக்க வேண்டும். ஆனால் இவர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு பல சமயம் இந்த சிறு கருங்கல் துகள்களால் நிறைய பேருக்கு சிறு நீரகத்தில் கல் உண்டாகிறது.


4.
உங்களுக்கு நன்கு தெரியும் சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி அலம்ப வேன்டும் மற்றும் நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேனுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில்கெட்ட பேக்டிரியாக்கள் மற்றூம் கிருமிகள்  ஈஸியாக சேர்ந்து உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம்.

5.
கிரைன்டரை எனக்கு தெரிந்து தாய்மார்கள் பயன்படுத்த தயங்கும் இரண்டு விஷயங்கள். 1. கிரையன்டரை சுத்தம் செய்ய கஷ்டம் 2. கல்லை துக்கி போட வேண்டும். ஆனால் இவர்கள் கிரைன்டரை ஒவ்வொரு முறையும் அரைத்து முடிந்ததும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைன்டரின் கிருமிகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வெண்ணீர் (Hot Water) ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திர்க்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், கிரைண்டரில் ஒட்டி இருக்கும் மாவுப் பொருட்களினால் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்ததன்மையை கெடுத்துவிடுகிறது.

6.
என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர்தான் ஊற்றி மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப் படுத்துகின்றனர் என்பது நமக்குத் தெரியாது. பொதுவாக இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றும் காரணம் உப்பு போட வேண்டிய வேலை இல்லை என்பதுதான்.

7.
அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டிபயாடிக், உடம்பு உஷ்னம், வாய் நாற்ற்ம், அல்சர்க்கு இது ஒரு நல்ல மருந்து ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8.
கிரையன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள் அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில் சேர்ந்து கொள்ளும்.

9.
கிரையன்ட்ர் ஒட அந்த மத்திய குழவியை இனைக்கும் ஒரு செயின். அந்த செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள் ஒன்று சத்தம் வராமல் இருபதற்க்கும் மற்றூம் மாவு கை தள்ளி விடாமல் அரையும் டெக்னிக்குககாக. அந்த பெல்ட் தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் அந்த மாவில்தான் கலக்கிறது.

10.
இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட்படி இதை ஃப்ரீஜ்ஜில் தான் வைக்க வேண்டும் அப்பொழுது தன் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் கடைகளில் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும் வீட்டிலுள்ள பிரிஜ்ஜில் வைத்திருந்தாலும் இப்போது இருக்கிற மின்வெட்டு பிரச்சனையில் இந்த மாவு குளிர்விக்கப் படாத்தால் மெல்ல மெல்ல பாய்ஸ்னாகிறது.

இந்த மாவை சோதனை செய்ததில் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா இருப்பது தெரியவந்தது. இதனால் சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாகவும் மாற வாய்ப்புள்ளது. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுப்படும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரன்டியில் எவ்வளவு பாக்டீரியா பல்கிபெருகி இருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். எனவே ஈரமான இட்லி தோசை மாவு வாங்குவதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.