Tuesday, October 30, 2012

இங்கே பாசம் வழுக்கும்

ஸ்ரீதரன் என்னும் மாணவன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி விடுமுறையில் இருந்தான். நன்றாகப் படிப்பவன். பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் நல்ல மரியாதை கொடுப்பான்.


வயது வந்த பல மாணவர்களுக்கு இருப்பது போன்று இவனுக்கும் தன்னுடன் படிக்கும் ஸ்வேதா என்னும் மாணவி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதை அவன் காதல் என்று நினைத்தான்.


தேர்வு முடிவு வந்தது. மாவட்டத்திலேயே முதல் மாணவனாக ஸ்ரீதரன் தேறியிருந்தான். அதைத் தொடர்ந்து பொறியியற் கல்விக்கான நுழைவுத் தேர்வு முடிவும் வெளியாகியது. ஸ்ரீதரன் ..ட்டி-ல்[IIT ] சேருவதற்கு தகுதி பெற்றிருந்தான். வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி.


ஸ்ரீதரனுக்கோ, ஒரு புறம் மகிழ்ச்சி. வீட்டை விட்டு, ஊரை விட்டு வெளியூரில் படிக்க வேண்டுமே என்கிற கவலை மறுபுறம். முக்கியமாக ஸ்வேதாவை பிரிய வேண்டும் என்கிற வருத்தம். எப்படியாவது, என்ன காரணம் சொல்லியாவது ..ட்டி. செல்லுவதை தவிர்க்க வேண்டும் என்று யோசித்தான்.


மறுநாள் காலை ஆற்றிற்கு குளிக்க சென்றான். அங்கே ஒரு  சிறுவன் கரையில் அமர்ந்து, ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் தனது தந்தையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.


ஸ்ரீதரன், தனது குழப்பத்திலேயே, அந்தச் சிறுவன் அருகிலேயே அமர்ந்து இருந்தான். ..ட்டி. க்கு போகலாமா? இங்கேயே இருக்கலாமா? எது சரி என்று முடிவெடுக்க முடியாமல் குழம்பியிருந்தான்.


அப்பொழுது அந்தச் சிறுவன் திடீரென்று, ஆற்று நீருக்குள் இறங்க எத்தனித்தான். அவனது அப்பா, "இங்கே பாசம் வழுக்கும், வெளியே போ, மேலே போ" என்றார்.

இந்தப் பேச்சினால் சிந்தனை கலைந்த ஸ்ரீதரன் இது தனக்காக சொல்லப்பட்ட தகவலாக நினைத்தான்.


அவர் சொன்னது, "வழுக்கிவிடுகின்ற பாசி இங்கே தண்ணீரில் இருக்கிறது, எனவே தண்ணீரை விட்டு வெளியே போ, படியில் மேலே ஏறு" என்ற பொருளில்.


இவனோ, "இங்கே நம் ஊரில் ஸ்வேதா மீது நீ வைத்த பாசம் உன்னை வழுக்கி விடும், அதனால் வெளியூருக்கு போ, போய் படித்து மேலே முன்னேறு" என்று எடுத்துக் கொண்டான்.


..ட்டி. சென்று படித்து முன்னேற முடிவு எடுத்தான்.

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.
           நாலடியார் - 46


பொருள் : குடலும், கொழுப்பும், இரத்தமும், எலும்பும், ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற நரம்பும், தோலும் இவற்றின் இடையிடையே வைத்த தசைகளும் நிணமும் ஆகிய இவைகளுள், குளிர்ந்த மாலை அணிந்த பெண் என்பவள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவள்?


இத்தகைய பொருள்களின் சேர்க்கையான உடம்பில் பற்று வைத்து நோக்கத்தை விடக் கூடாது என்பது கருத்து
.


 

வேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்

நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை!

கலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.

இசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.

''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா?'' என்று கேட்டார். ''ஆமாம்...'' என்றான் தயங்கியபடி.

உடனே அவர், ''அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் இப்பத்தான் உள்ளே போனார். வாங்க அவரைப் பார்க்கலாம்'' என்று கூற, ஆடிப்போய் விட்டான் நம்ம ஆள்!

'இனி, பின்வாங்க முடியாது... என்ன நடக்கப் போகிறதோ? தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ? இசை நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதே' - தயக்கமும் குழப்பமுமாக அவரைப் பின்தொடர்ந்தான்.

அவர்... முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் பவ்யமாக, ''ஐயா! ஒரு சந்தேகம்...'' என்றார் இவனை அழைத்துச் சென்றவர்.

'என்ன?' என்பது போல் பார்த்தார் அவர்!

''
இவரை உங்களுக்குத் தெரியுமா?''

உடனே, நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், நம்ம ஆளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏன், எதுக்குக் கேட்கறீங்க?'' என்றார் அழைத்து வந்தவரிடம்!

''
இல்ல... இவர், உங்க பத்திரிகையின் ஓவியரான்னு தெரிஞ்சுக்கணும்?''

''
ஆமாம்... இல்லேன்னு யார் சொன்னது?'' - கோபத்துடன் பதில் சொன்னார் அவர்!

அவ்வளவுதான்... நம்ம ஆளை சந்தேகப்பட்டவர், இருவரிடமும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு விட்டு, ''உங்க ஆசிரியர் பக்கத்துலேயே நீங்களும் உட்கார்ந்துக்கோங்க'' என்று இவனிடம் கூறிவிட்டு வாசலுக்கு நகர்ந்தார்.

நம்ம ஆளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.

மெள்ள ஆசிரியரின் பக்கம் திரும்பி, ''ஐயா... என் மானத்தைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி!'' என்றான் நெகிழ்ச்சியுடன்.

உடனே அவர், ''இதுக்கு எதுக்கு தம்பி நன்றி? ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது!'' என்றார்.

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்: ''என்ன புரியலையா? நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான்!'' என்றார் சிரித்தபடி.


நண்பர்களே! இன்றைய ஆன்மிக உலகமும் இப்படித்தான் உள்ளது.

சீடர்களாக வேடம் தரித்தவர்கள், குருவாக வேடம் தரித்தவர்களிடம் சென்று ஆசி வாங்குகிறார்கள்.  

வேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும். அப்போதுதான் உண்மையை அடையாளம் காண முடியும்.



நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

(The above picture is from a Telugu film "Ayyer' and not anyone from real life)


Monday, October 29, 2012

அணுகுமுறைதான் வெற்றியை நிர்ணயிக்கிறது.

ந்துப் புராணங்களின்படி, இந்தப் பிரபஞ்ச வெளியைக் காத்து வருபவர் ஸ்ரீமகாவிஷ்ணு. அந்த பாகத்தை அவர் ஏற்றுக்கொண்டிருப்பதால், அடிக்கடி அவர் பலருடன் போராட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அசுரர்களிடம்! ஏன்... சில நேரங்களில் மனிதர்களிடமும்தான்! அவர், ஒவ்வொரு போரையும் ஒவ்வொரு வகையான அரக்கர்களுடன் செய்ய வேண்டியிருந்தது. அதனால், அவரும் அதற்குத் தகுந்த மாதிரி வெவ்வேறு வடிவங்கள், அவதாரங்கள் எடுக்க வேண்டியிருந்தது.


ஹிரண்யாட்சன் பூமியைக் கடலுக்கு அடியில் இழுத்துக்கொண்டு போனபோது, வராக அவதாரம் எடுத்தார் விஷ்ணு. கடலுக்குள் நுழைந்து அந்த அசுரனை அழித்து, பூமிப் பந்தை தன் கொம்பில் வைத்துத் தூக்கிக்கொண்டு வந்து, பழையபடி அதன் இடத்தில் வைத்தார். இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க உடல் திறனால் மட்டுமே முடிந்தது.


ஹிரண்யகசிபு வேறு மாதிரியான அசுரன். அவன் பெற்று வந்த வரம் விசித்திரமானது. தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்பதற்காக வாங்கிவந்த வரம் அது. அவன் போட்ட பட்டியலைப் பாருங்கள்:


மனிதனோ, மிருகமோ அழிக்க முடியாது;
பகலிலோ, இரவிலோ அழிவு வரக்கூடாது;
இருப்பிடத்தின் உள்ளேயோ, வெளியேயோ அழிக்கக் கூடாது;
தரையிலோ அதன் மேலோ அழிவு நிகழக்கூடாது;
எந்த ஆயுதமும், கருவியும் உபயோகிக்கக் கூடாது.


- இப்படியெல்லாம் வரம் கேட்ட அந்த அசுரனை அழிக்க, நரசிம்மராக அவதாரம் எடுத்தார் விஷ்ணு. பாதி மனிதன், பாதி மிருகம் கலந்த உருவம்; சந்தியா காலம் - பகலும் இரவும் சந்திக்கும் நேரம்; இருப்பிடத்தின் உள்ளேயுமல்ல, வெளியேயுமல்ல; வாசற்படியில்; தரையிலோ, மேலோ அல்ல; தன் தொடையிலேயே! எந்த ஆயுதமோ, கருவியோ இல்லாமல் தன் விரல் நகங்களையே ஆயுதமாக்கி, அவனை அழித்தார் விஷ்ணு.



ஹிரண்யகசிபு போட்ட எந்த நிபந்தனையையும் விஷ்ணு மீறவில்லை. புத்திசாலித்தனத்தால் இந்தப் போரில் அவனை வென்றார்.

அப்புறம் வந்தார், மகாபலி சக்ரவர்த்தி என்ற அசுரர். அவர் புனிதமானவர்; வாரி வழங்குபவர். அவருடைய ராஜ்யம் எல்லையற்றுப் பரந்து விரிந்திருந்தது. வானமும் பூமியும் அவர் வசம் இருந்தன. அவரை அவருக்குரிய இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காகவே மகாவிஷ்ணு வாமன வடிவம் எடுத்தார்.  மகாபலியிடம் மூன்றே மூன்று அடி இடம்தான் கேட்டார். மகாபலியும் அதைக் கொடுக்க இசைந்தார். 



வாமன அவதாரம் எடுத்திருந்த விஷ்ணு, விஸ்வரூபம் எடுத்து ஆகாயத்தையும், பூமியையும் இரண்டே அடிகளில் அளந்துவிட்டு, மூன்றாவது அடி வைக்க இடம் கேட்டார். இந்தப் போராட்டத்தில், மகாவிஷ்ணுவுக்கு எதிரியைத் தோற்கடிப்பது என்ற அடிப்படை இல்லை. ஒருவருக்கே பிரபஞ்சம் முழுக்க உரிமையானதாக இருப்பதை மாற்றி, உலகில் சமநிலையை உருவாக்க, தன்னை ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவுக்கு மாற்றுவது அவருக்கு முக்கியமானதாக இருந்தது.   



போர்களின் கோணத்தில் இருந்து பார்த்தால், விஷ்ணுவின் அவதாரங்கள் எல்லாம், அவர் எவ்வாறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு உத்திகளை மாற்றிக்கொண்டே இருந்தார் என்பதைக் காண்பிக்கும். முதலில் வராகத்தில் இருந்து நரசிம்மருக்கு! அடுத்து நரசிம்மரில் இருந்து வாமனருக்கு! முதலில் ஆக்ரோஷமான சக்தியைப் பயன்படுத்தியவர், அடுத்து புத்தியைப் பயன்படுத்தினார். முடிவில், புத்தியை உபயோகிப்பதைவிட உருவத்தையே மாற்றிக்கொள்வது நல்லது என்று வடிவத்தை மாற்றிக்கொண்டார். அவருக்குத் தெரியும்; அசுரர்கள் கெட்டிக்காரர்கள், விஷயத்தைச் சிக்கலாக்கி விடுவார்கள் என்று!


ஹிரண்யாட்சன் வன்முறையாளன். ஹிரண்யகசிபு புத்திசாலி. மகாபலி எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், அவனுடைய நல்ல குணம் பிரபஞ்சவெளியின் சமநிலையை பாதித்தது.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விஷ்ணுவை மாறச் செய்தார்கள். 



எல்லோருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை உதவாது.  ஒவ்வோர் அணுகுமுறையும் 'கஸ்டமைஸ்ட்' என்பார்களே, அது போல ஒவ்வொருவருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அதைப் புறக்கணித்தால் தோல்விதான்! 



இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன?


அணுகுமுறை மாறுபாடுதான் வாழ்க்கை, வணிகம், போர் என எல்லாவற்றிலும் வெற்றியை நிர்ணயிக்கிறது.






Source: Sakthi Vikatan

FIXING SUBHA MUHURTHAMS - POINTS TO BE CONSIDERED

FIXING SUBHA MUHURTHAMS - POINTS TO BE CONSIDERED


Suitable Months, Days, Thithi, Star, Lagnam, and other aspects are to be considered for fixing muhurthams.

1. Months


Chithirai - Vaikasi - Aani - Avani - Iyppasi - Karthigai - Thai - Panguni.


 2.Days

 

Monday - Wednesday - Thursday - Friday – Sunday


3. Thithi


Thithis considered for Muhurtham. (11)


Dhuthiyai - Thrithiyai - Chathurthi - Panchami - Shashti - Sapthami - Dasami - Ekadasi - Dwathasi - Thrayodasi – Chathurdhasi


Thithis NOT suitable for Muhurthams (5).


Pournami - Prathamai - Ashtami - Navami – Amavasai



4.Nakshathram (Star)


Rohini - Uthiram - Uthradam - Utthirattathi - Revathy - Makam - Swathi - Anusham - Mirugaseersham - Hastham - Moolam - Aswini - Punarpoosam - Thiruvonam - Avittam.


Note:- Muhurtham Star should not be the 3rd, 5th, or 7th, when counted from the Birth Star of the Bride and Bridegroom.

Muhurtha Lagnam is the most important aspect in a marriage ceremony. If it is good the couple will lead a long, happy married life and be blessed with prosperity and good children. We say Marriages are made in heaven. Similarly, with HIS blessing alone, One can get a Good date and time for the Muhurtha Lagnam. Pray and fix Lagnam carefully.

Lagnam

Ist, Choice

Rishabam - Mithunam - Katakam - Kanni - Thulam - Dhanusu – Makaram

 
IInd Choice.

Simmam - Makaram - Meenam - Vrichikam - Mesham.

 
OTHER ASPECTS


Horai - Avoid Sani, Suryan, & Chevvai Horai.


Date - Avoid the Date & Day of Birth of both Bride and Bridegroom.


Time - Avoid Fixing Muhurtham time before Sunrise and after 12 Noon.


Avoid Yemaghandam.


Day - Avoid Karinal.


Number - The total number of the Muhutham date should not be 4, 5 or 8.Example- 10-7-2007=17=8

 

FIX SUBHA MUHURTHAMS IN CONSULTATION WITH YOUR PUROHIT OR ASTROLOGER ONLY.


NEVER DO THAT ON YOUR OWN.

 

I can only be..............

 

I can't give solutions to all of life's problems, doubts, or fears.
But I can listen to you and together we will search for answers.

I can't change your past with all its heartache and pain,
Nor the future with its untold stories.
But I can be there now when you need me to care.

I can't keep your feet from stumbling.
I can only offer my hand that you may grasp it and not fall.

Your joys, triumphs, success, and happiness are not mine;
Yet I can share in your laughter.

Your decisions in life are not mine to make, nor to judge;
I can only support you, encourage you, and help you when you ask.

I can't prevent you from falling away from friendship,

From your values, from me.
I can only pray for you, talk to you, and wait for you.

I can't give you boundaries which I have determined for you,
But I can give you the room to change, room to grow,

Room to be yourself.

I can't keep your heart from breaking and hurting,
But I can cry with you and help you pick up the pieces

And put them back in place.

I can't tell you who you are.
I can only be your friend.

,



Old Age - The Best & Highly Valuable Secrets to Follow


The Secrets of Old Age

Some great advice from the elder generation, who have been through it all, seen it all and did it all, and have learned a lot along the way...

old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
old age advice
 
--