Sunday, June 30, 2013

Just For Laugh- Top 10 funny pranks

புகைப்படம் கொடுக்காதீர் இளம் பெண்களே...



நான், கல்லூரி மாணவி. இரண்டு வருடத்திற்கு முன், பிளஸ் 2 முடித்து பிரியும் போது, தோழி ஒருத்தி, "என் நினைவாக போட்டோ ஒன்று வேண்டும்...' என்று கேட்டதால், நானும் என் புகைப்படம் ஒன்றை அவளிடம் கொடுத்தேன். அன்று நான் கொடுத்த புகைப்படம், என் தோழியின் அண்ணன் கையில் கிடைத்திருக்கிறது. என்னுடைய பெயர், விலாசம் அனைத்தையும் எப்படியோ அறிந்து கொண்டு, என்னிடம் பேச ஆரம்பித்தார். என் தோழியின் அண்ணன் என்ற முறையில், நானும் அவருடன் சகஜமாக பேசினேன்.

திடீரென்று, ஒரு நாள் அவர் என்னிடம், "ஐ லவ் யூ' என்று சொல்லி விட்டார். அதிர்ச்சியடைந்த நான், அன்றிலிருந்து அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். ஒரு முறை கல்லூரியிலிருந்து வீட்டிற்கு திரும்பும் போது, என்னை வழி மறித்து, தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தினார். நான் மறுக்கவே, தன் சட்டை பையிலிருந்து என்னுடைய புகைப்படத்தை எடுத்துகாட்டி, "என்னுடன் பேசாவிட்டால், இந்த புகைப்படத்தை நீ தான் எனக்கு கொடுத்தாய் என்று, உன் பெற்றோரிடம் கூறி விடுவேன். அதுமட்டுமல்ல, வலைதளத்தில் போட்டு, நாறடித்து விடுவேன்...' என்று பயமுறுத்தினார். வேறு வழியின்றி, விருப்பமில்லாமல் அவருடன் பேசத் தொடங்கினேன், நான் பேசின மகிழ்ச்சியில், அவரும் என் வீட்டு விலாசத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து மடல் அனுப்பி விட்டார். இது என் பெற்றோர் கண்ணில் பட்டு, நடக்கக் கூடாத விவகாரமெல்லாம் நடந்து, நான் கல்லூரிக்கு செல்வது தடை செய்யப்பட்டது. படிப்பில் ஆர்வம் உள்ள நான், படிப்பையும் பாதியில் நிறுத்தி, பெற்றோரின் அன்பையும் இழந்து, அனாதையாக நிற்கிறேன்.

சகோதரிகளே... உங்கள் நினைவாக உங்கள் தோழியிடம் புகைப்படம் கொடுக்கும் போது, சற்று சிந்தித்து செயல்படுங்கள். இல்லையேல், எனக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்!

Matrimonial listing for the week ended 30/06/2013

For Details, Please Click on Profile Number

Hindu, M.Sc., M.Phil., Ph.D, 5'5", Madurai, 30 yrs, Further details requested,  E-Mail id: meena lochani visa091983@gmail.com, Contact Number 9965386289, 0452-2459574 Looking for Groom. Profile No.: G062601,

Hindu, Pillai, Tamil, Chithirai, Kanni, Divorced, No Issues, 24 yrs, 155 cms, 50 kgs, Slim, Fair, MBA, Working Professional, 1.0 Lakh p.a., Sivakasi, Looking for Groom in same caste, below 32 yrs, any marital status, 160-170 cms, Tamil, Coimbatore, any degree, profession or business, 1.8 Lakhs p.a., Good Character. Profile No.: G062505,

Hindu, Vaniya Chettiar, Tamil, Mrigasirisham, Rishabam, B.Com, Theni, Looking for Groom in same caste, in Tamilnadu, government employed with good charactor. Profile No.: G062407,

Hindu, Nadar, Tamil, Moolam, Dhanus, 27 yrs, 4'2", 52 kgs, Fair, B.A., W0rking in private company, 1.0 Lakh p.a., Madurai, Looking Groom in same caste, 28-33 yrs, 5.0 to 5.5 ft, Tamil, living in Madurai, Dindugul, Virudhunagar or Sivakasi, understanding and adjustable character. Profile No.: G062404,

Hindu, Pillai, Saiva Pillai, Gothram - Siva, Tamil, Swathi, Tula, 28 yrs, 5'2", 50 kgs, Slim,Wheatish, MCA, Profession - Software Engineer, 2.0 Lakhs p.a., Chennai, Looking for Groom in same caste, 29-32 yrs, Slim, employed at private or government. Profile No.: G062304,

Hindu, Naicker, Gothram - Siva, Tamil, Divorced - No issues, Hastham, Kanni, 33 yrs, 5'2", 68 kgs, Fair, BBM, Tiruppur, Looking for Groom in Hindu, any caste, 35-40 yrs, Divorced, No Horoscope match, Tamil, any city in Tamilnadu, Profile No.: G062204,

Hindu, Maruthuvar, Kongu, Tamil, Aswini, Mesham, 35 yrs, 145 cms, 56 kgs, Wheatish, M.Sc., M.Phil., Profession Teacher, 4.5 Lakhs p.a., Tiruppur, Looking for Groom in same caste, 36-38 yrs, 165 cms and above, should be affectionate and hard worker. Profile No.: G061904,

Hindu, Pillai, Tirunelveli Saiva Pillai, Tamil, Puram, Simham, Chevva Dosam, 25 yrs, 160 cms, 47 kgs, Very Fair, M.Sc., Computer Science, Profession - E-Book, Tirunelveli, Looking Grooms in same caste, 27-31 yrs, 165 cms, Tamil, B.E., or Master Degree, Profile No.: G061703, 

 Hindu, Sozhia Vellalar, Gothram - Siva, Tamil, Uthram, Simham, 24 yrs, 158 cms, 55 kgs, Very fair, M.B.B.S., Profession - Doctor in Private Hospital, 4 Lakhs p.a., Coimbatore, Looking Groom in same caste, age 26-30 yrs, 160-170 cms, Tamil, within Tamilnadu, BE, ME, MCA, or MBBS, middle class family with good habits, good family background. Profile No.: G061702, 

Hindu, Kongu Vellalar Gounder, Tamil, Swathi, Tula, Chevva Dosam, 22 yrs, 5'2", 48 kgs, Fair, B.E., Computer Science, Profession Software Engineer, Coimbatore, Looking for Groom in same caste, age 24-28, Chevva Dosam, B.E., and above, software profession, from good family background and disciplined family.  Profile No.:G061303C

 Hindu, Mudaliar, Thondaimandala, Tamil, 52 yrs, 5'0", 70 kgs, Diploma in Commercial Practice, Chennai, Looking for Groom, 52 yrs and above, well settled, Religion/Caste/Horoscope no bar, good human beingProfile No.: G061201

Hindu, Agamudiar, Siva Gothram, Tamil, Uthradam, Makara, 23 yrs, 5'0", 50 kgs, slim, fair, MCA, Coimbatore, Looking for Groom age between 25-29 yrs, 5'4" to 6'0", in same religion and caste, vegetarian, any P.G. Degree, Profession Government Service, Good Character, Profile No.:G060902

Hindu, Devanga, Telugu, Mandilya Maharishi, Makam, Simham, 41 yrs, 152 cms, 63 kgs, slim, PG degree, Profession Lecturer, Coimbatore, Looking for Groom at 45-50 yrs, any Hindu, education well qualified, decent profession, Profile No.: G060402

Hindu, Pillai, Vellalar, 27 yrs,5' 6", 60 kgs, Fair, Tamil, Anusham, Vrichigam, BE, SAP Functional Consultant, Chennai, looking for groom from same caste, education BE, ME, MBA, Working for I.T in Coimbatore/Chennai/Bangalore, Profile No.: G060204

Hindu, Naidu, Janakala, Telugu, Aswini, 28 yrs, 157 cms, 50 kgs, MBA, MPhil, Coimbatore, Looking Groom from same caste, good job and education, Profile No.: G060203

Hindu, Devanga, Telugu, 25 yrs, 5'4", 40 kgs, slim, Chithirai, Tula, B.Tech (I.T), Working as Testing Engineer, looking for educated with good job in same community. Profile No. G060101

Hindu, Brahmin - Iyers, 26, 142 cms, 48 Kgs, Fair, MS, Biological Sciences, Tamil, Hindi, Kannada, English, Bangalore, Naidrupa Kashyapa, Mrigashiras, Looking for Mature, Post graduate, preferably in the USA. Profile No. G050201,  

 

 

 

For Details, Please Click on Profile Noumber:

Hindu, Reddy, Caste no bar, Tamil, Telugu, Puratathi, Kumba, 29 yrs, 174 cms, 73 kgs, B.E., MBA, Business Analyst in MNC, Chennai, 5.4 Lakhs p.a., Looking for Bride caste no bar, 23-28 yrs, 155-173, Horoscope no bar, any city in India, should be nice looking and nice character. Profile No.: B063001, 

Hindu, Arunthathiar, Tamil, Swathi, Tula, 32 yrs, 165 cms, 60 Kgs, Slim, M.A., M.Phil., Ph.D, 1.0 Lakh p.a., Madurai, Looking for Bride in same caste, 27 yrs, 168 cms, Tamil, Living anywhere, M.A., B.Ed, M.Sc.,  Prodession in education field only,  Profile No.: B062902, 

Hindu, Caste no bar, Reddy, Telugu, Tamil, Horoscope no bar, 35 yrs, 5'9", 70 kgs, B.Com,. Assistant Director in Tamil Film Industry, 1.5 Lakhs p.a., Chennai, Looking for bride in Hindu, Caste no bar, 28 yrs, 5'5", Horoscope no bar, Mother Tongue Any, City living Any, Education/Profession - Doesn't matter, Expectations - Doesn't matter. Profile No.: B062901,

Caste and Religion No Bar, Gothram - Siva, Punarpoosam, Katagam, Horoscope No Bar, 29 yrs, 166 cms, 70 kgs, Fair, MCA, M.Tech, Profession - Software, 1.2 Lakhs p.a., Namakkal, Chennai, Looking for Bride in any caste (except Adhi Dravida), 24-30 yrs, 155-170 cms, Tamil, Telugu, Broadminded girl without caste religion feeling. Profile No.: B062806,

Hindu, Brahmin - Brahacharanam, Githram - Kashyap, Tamil, Uthratadhi, Meena, 38 yrs, 175 cms, 62 kgs, Horoscope no bar, B.Com, Manager in Private company, 4.8 Lakhs p.a., Chennai, Looking for Bride in Brahmin, sub caste no bar, Horoscope no bar, Educated and adjustable. Profile No.: B062805,

Hindu, Devendra Kula Vellalar, Gothram - Siva, Tamil, Ayilyam, Katagam, 30 yrs, 5'7", 63 kgs, Wheatish, BE, ME, MBA, Assistant Professor, 2.8 Lakhs p.a., Coimbatore, Looking for Bride in same caste, 23-27  yrs, 5'3"-5'6", Tamil, BE., ME., Teaching/Lecturer, Good girl in teaching or banking professional. Profile No.: B062804,

Hindu, Pillai, Gothram - Siva, Tamil, Uthradam, Dhanus, 29 yrs, 169 cms, 75 kgs, Wheatish, B.A., Coimbatore, Looking for Bride in same caste, 20-28 yrs, 160-165 cms, any city, any degree, Profile No.:B062803

Hindu, Kongu Vellala Gounder, Gothram - Adhi Kootam, Tamil, Chithirai, Tula, Horoscope no bar, 37 yrs, 165 cms, 60 kgs, Wheatish, B.Com., Accountant, 1 Lakh pa.a., Avinashi, Looking for Bride in same caste, 27-35 yrs, 160 cms, Tamil, any city in Tamilnadu, Adjustable and good habit female. Profile No.:B062802,

Hindu, Kongu Vellala Gounder, Ponna Kulam, Tamil, Mrigasirisham, Mithunam, 42 yrs, 170 cms, 68 kgs, +2 Hr. Secondary, Gas Agency Incharge, Pollachi, 2.0 Lakhs p.a., Looking for Bride in same caste, 30-33 yrs, 5'0"-5'6", Tamil, within 50 kms radius, SSLC, Family oriented, respecting elders, good character girl. Profile No.: B062801,

Hindu, Boyer, Gothram - Aba Moongar, Telugu, Rohini, Rishabam, 34 yrs, 5'5", 70 kgs, Fair, B.A., Textile Business, 2.0 Lakhs p.a., Tiruppur, Looking for Bride in same caste, 27-32 yrs, Horoscope no bar, any mother tongue, Living in any city. Profile No.: B062702,

Hindu, Brahmin, Sadhavarsham, Tamil, Thiruvonam, Makara, 32 yrs, 5'4", 72 kgs, Fair, B.Com, Marketing Manager, 3.0 Lakhs p.a., Coimbatore, Looking for Bride in same caste, 4'5"-5'4", Tamil, Malayalam, any city, Only requirement is to make home happy. Profile No.: B062701,

Hindu, Devanga, Kannada, Gothram - Manmadha Maharishi, Tamil, Kannadam, Puratathi, Kumba, Widower, SSLC, Textile Export Business, 3.0 Lakhs p.a., Coimbatore/Colombo, Looking for Bride in Hindu, any caste, any marital status, 4'6" - 5'0", Living in any City in Tamilnadu, Tamil/Kannada/Telugu, SSLC, Family oriented, adjustable, fair lady. Profile No.: B062603,

Hindu, Viswakarma, Gothram - Siva, Tamil, Uthratadhi, Meena, 29 yrs, 5'8", 78 kgs, E-MBA, MAJM, Profession in Media, 2 Lakhs p.a., Coimbatore, Looking Bride in Hindu, any caste, 20-28 yrs, 5'0", Tamil, any city except Chennai, any degree, No Expectation. Profile No.: B062602,

Hindu, Achaari, Telugu, Appojala vaarlu, Chithirai, Tula, 30 yrs, B.Com., Accountant in private company, 2.4 Lakhs p.a., Coimbatore, Looking for Bride in same caste, any degree, software professional preferred, Profile No.: B062504,

Hindu, Naidu, Sadayam, Kumba, Own Business, Tambaram, Chennai, 29 yrs, having own house and farm land, Looking for Bride. For further details contact 9092318113, 9566840264. Profile No.: B062503,

Christian, Adi Dravida, Rohini, Rishabam, Horoscope Match, Tamil, Divorced, No issues,  35 yrs, 168 cms, 68 kgs, M.Sc., B.Ed., D.T.Ed., Profession - B.T. Assistant, Valparai, 5.0 Lakhs p.a., Coimbatore, Looking Bride in same caste, 28-32 yrs, 155-160 cms, Tamil, any degree with B.Ed., Government Teacher, Family oriented girl with adjustable charactor. Profile No.: B062502,

Hindu, Brahmin, Bharatwaja, Tamil, Thiruvonam, Makara, 33 yrs, 152 cms, 55 kgs, Very fair, ITI, Archagar, Kallidaikuichi, Horoscope no bar, Looking for Bride in same caste, 25-32 yrs, below 152 cms, Tamil, a good family girl. Profile No.: B062501,

Christian, Catholic, Malayalam, Syro Malabar, 32 yrs, 167 cms, 71 kgs, Divorced, Athletic, Very fair, Hr. Sec., Profession - Business, 4.0 Lakhs p.a., Coimbatore, Looking for Bride in Christian, 25-31 yrs, Marital status - Any, Malayalam, Education - any, Simple, Beautiful, Loving and Supportive. Profile No.:B062409,

Hindu, Mudaliar, Sengunthar, Gothram - Siva, Tamil, Avittam, Kumbha, 32 yrs, 5'11", 70 kgs, Very fair, B.A., C.A (incomplete) PGDCA, NCFM, Profession - Branch Incharge, 4.8 Lakhs, Chennai, Looking for Bride in same caste, 24-30 yrs, 5'0" - 5'6", Tamil, any city in Tamilnadu, Good looking, good family background, +2 Hr. Sec to any Diploma, Degree. Profile No.: B062408,

Hindu, Vannar, Tamil, Widowed, 43 yrs, 5'10", Tiles Mason, 1.5 Lakhs p.a., Coimbatore, Looking for Bride in Hindu, any caste, 30-32 yrs, widow, Horoscope no bar, Tamilnadu. Profile No.: B062406,

Hindu, Naidu, Gavara, Gothram - Vishnu, Tamil, Puram, Simham, 29 yrs, 5'8", 70 kgs, Slim, Fair, B.Sc., DIT, MCA, Profession - DBA / Software / Bank of America, 9.0 Lakhs p.a., Chennai, Looking Bride in any Naidu caste, 23-27 yrs, 5'2" - 5'8", Tamil or Telugu, in Tamilnadu, any degree, good looking and respectful to elders. Profile No.: B062405,

Hindu, Viswakarma, Gothram - Siva, Tamil, Puradam, Dhanus, 34 yrs, 5'9", 66 kgs, Fair, DEEE, Profession - Maintenance Engineer, Chennai. Looking for Bride in any Viswakarma caste, 28 to 30 yrs, 4.6 to 5.8 ft, Tamil, any city, Indian cultured girl. Profile No.: B062403,

Hindu, Adi Dravidar, Sangu Parayar, Tamil, Waiting Divorce, No Issues, 36 yrs, 109 cms, 38 kgs, Slim, Wheatish, Physically Challenged, MCA,  MTS in ESI Corporation, Pollachi, 1.8 Lakhs p.a., Coimbatore, Looking for bride in any religion and caste, 18-30 yrs, above 145 cms, Horoscope no bar,  any city, SSLC, Cute and calm, Faith in God. Profile No.: B062402,

Hindu, Vanniyar, Chettiar, Gothram - Kutumutaian Makaarichi, Tamil, Makam, Simham, 26 yrs, 5'7", 60 kgs, Wheatish, DEEE, Air Hoster, INDIGO Aviation, 1.5 Lakhs p.a., Coimbatore, Looking for Bride in same caste, 20-23 yrs, near Coimbatore, Diploma or Degree, Profile No.: B062401,

Hindu, Kongu Vellala Gounder, Tamil, Puratathi, Kumba, 36 yrs, 175 cms, 65 kgs, Fair, DME, BCA, Profession - Buying Office, Tirupur, 5.0 Lakhs p.a., Looking for Bride in same caste, above 30 yrs, Horoscope no bar, +2 Hr Sec or Degree, good bride. Profile No.: B062306,

Hindu, Adi Dravidar, Gothram - Siva, Tamil, Waiting Divorce, Aswini, Rishabam, 28 yrs, 170 cms, 60 kgs, Wheatish, B.Sc., Profession - Tamilnadu Police, 3.0 Lakhs p.a., Chennai, Looking for Bride in Hindu, any caste, 22-25 yrs, widow, Tamil, any city, Profile No.: B062305,

Hindu, Baligia Naidu, Gothram - Bala, Telugu, Puratathi, Kumba, 29 yrs, 5'7", 78 kgs, MBA, B.Com, ICWA Inter, CIMA, Profession - Business Associate, 8.0 Lakhs p.a., Chennai, Looking for Bride in same caste, 24-28 yrs, any city in Tamilnadu, UG/PG education, Kind and homely. Profile No.: B062303,

Hindu, Kongu Vellala Gounder, Gothram - Semban Kootam, Tamil, Krithigai, Rishabam,  Chevva Dosam, 33 yrs, 5'9", 60 kgs, Fair, +2 Hr. Sec., Profession - Owner of Travel Business, 4.0 Laks p.a., Coimbatore, Looking for Bride in same caste, 22-32 yrs, Horoscope no bar, Chevva dosam, Tamil, any city in Tamilnadu, a girl with good nature. Profile No.: B062302,

Hindu, Parkavakulam, Gothram - Siva, Tamil, N.R.I., Hastham, Horoscope no bar, 36 yrs, 163 cms, 61 kgs, Fair, M.Sc., M.Phil., Profession - Retail industry in U.K., 12,000 British Pounds p.a., ( Rs. 11 Lakhs), Living in Oxfordshire, U.K., Looking for Bride in Hindu, any caste, 25-33 yrs, 157 cms, Tamil, from Tamil cultured families. Profile No.: B062301,


FULL LISTING


Saturday, June 29, 2013

Marriage – the facts you need to know - 48

Marriage – the facts you need to know - 48

 

·         You need to know he likes to be hugged even though he'd never tell you.

·         You need to know he has a fascination for bodily noises. Don't ask why.

·         You need to know nagging isn't sexy or effective.

·         You need to know he doesn't need a mother. Even if he leaves his underwear lying around.

·         You need to know he's counting on you to not finish your dinner. So he can. Assuming it's not pimento cheese.

·         You need to know he really doesn't know how to change a diaper.

·         He never played with dolls.

·         You need to know men aren't into "sharing the moment." They're worrying about paying the mortgage next month.

·         You need to know all men need tools. An electric drill. A chain saw. A 2000 piece tool set. He may never use them. But he needs to know they're in the garage.

·         You need to know he'll never feel he's making enough money.

·         You need to know if you make more money than he does, his ego may not recover. Men are weird that way.

·         You need to know eating off your plate uninvited is his way of saying he trusts you.

·         You need to know you could be married to him for fifty years and still not know he's always hated Grey's Anatomy.

·         You need to know he ranks golf right below food, clothing, and shelter. Arguing with him about this will just make him want to go to the driving range.

·         You need to know he will be furious if your cell phone is turned off or uncharged. Just a hint.

·         You need to know that unless he does the shopping—for food, diapers, and medicine—he'll never know how much things cost.

·         You need to know he views the bathroom the way you might view a library. It's a place to get serious reading done.

·         You need to know the reason he hasn't picked up his shoes is because he's lost them.

·         You need to know he doesn't think a pile of laundry is that important. Yelling at him will just make him think your hormones are acting up.

·         You need to know that most men can live with dirty clothes piled to the ceiling until he runs out of underwear. That's when he'll think about washing them.

·         You need to know men lose things. Cell phones. Wallets. Keys.  Sometimes their cars. Criticizing won't help.

 

Wednesday, June 26, 2013

கூகுள், யாஹூ, பிங் உங்களை வேவு பார்த்தல்

PRISM விவகாரம் வெளிவந்ததில் இருந்து தனிப்பட்ட பயனீட்டாளர்கள் தமது பிரத்யேகத் தகவல்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பதைப் பற்றிய விவாதங்கள் நடப்பதைப் பார்க்க முடிகிறது. அரசாங்க அமைப்புகள் உங்களை வேவு பார்ப்பதற்கு முன்னால், இணையப் பயனீட்டாளராகச் சில முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு, இரண்டு நடவடிக்கைகளைப் பார்க்கலாம்.

கேமரா வசதி இல்லாத கணினிகளே இல்லை என்ற நிலை வந்து விட்டது. வலைதளங்களைப் பயன்படுத்தத் தேவையான Internet Explorer, Firefox ப்ரவுசர் மென்பொருட்களை வீடியோ, ஆடியோ போன்றவற்றைக் கேட்க/பார்க்க உதவும் Flash தொழில்நுட்பம் மூலமாக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வலைப்பக்கத்தின் மூலம் கணினியில் இருக்கும் கேமராவை இயக்கி உங்களைப் பார்க்க முடியும். இது எப்படி நடக்கிறது என்பதை விளக்க, டெக் ஆசாமி ஒருவர் வலைப்பக்கம் தயாரித்திருக்கிறார். அந்தப் பக்கத்துக்குச் செல்பவர்களின் கேமரா இயக்கப்படும் சாத்தியக்கூறு இருப்பதால், அதைப் பகிரங்கமாக இந்தக் கட்டுரையில் கொடுக்க விரும்பவில்லை. உங்களுக்குத் தேவையெனில் @antonprakashக்கு ட்வீட் அனுப்புங்கள். நான் Direct Message ஆகத் தருகிறேன்.விமான நிலையங்கள் போன்ற இடங்கள் மட்டுமல்ல... உங்களது நண்பர் வீட்டில் இருக்கும் கணினியில் உள்ள இமெயிலோ, ஃபேஸ்புக்கோ எதைப் பயன் படுத்தினாலும், உங்களது கடவுச்சொல்லைச் சேமித்துவைத்துக்கொள்ள இருக்கும் வசதியைப் புறக்கணித்துவிடுங்கள்.

அரசாங்க வேவு பார்த்தல் விவகாரத்துக்கு வருகிறேன்.

தேடல் இயந்திரமான கூகுள், யாஹூ, பிங் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தும்போது, உங்களைப் பற்றிய விவரங்களை உங்களுக்குத் தெரியாமலேயே கொடுத்தபடி இருப்பீர்கள். 'நான் எனது பிரவுசரில் இருக்கும் Incognito போன்ற ரகசிய வசதியைப் பயன்படுத்தித்தான் இணையத்தைப் பயன்படுத்துகிறேன். நான் என்ன தளங்களுக்குச் சென்றேன் என்பது எனது கணினிக்கே தெரியாதே' என்று மேற்படி வசதியைப் பயன்படுத்துபவர்களுக்குத் தோன்றலாம். ஆனால், நீங்கள் எந்தவிதமான வசதியைப் பயன்படுத்தினாலும், நீங்கள் செல்லும் தளத்தை இயக்கும் பெருங்கணினிக்கு உங்கள் விவரங்கள் தெரியும். நீங்கள் தேடல் இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது, அதன் பெருங்கணினிக்கும் உங்களது கணினிக்கும் இடையே குக்கி எனப்படும் வடிவத்தில் தகவல் பரிமாற்றம் நடந்த படி இருக்கும். இது இந்த நிறுவனங்களின் வணிகத்துக்கு அடிப்படை. இந்தத் தகவல்களை வைத்துதான் எந்த விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட வேண்டும். காட்டினால், அதிகமான விருப்பம் இருக்கும் என்பதை முடிவுசெய்ய முடியும். பிரச்னை என்னவென்றால், பலம் பொருந்திய அமெரிக்க அரசாங்கம் போன்றதொரு அமைப்பு, இந்த நிறுவனங்களின் உள்கட்டமைப்பில் சேகரமாகியிருக்கும் உங்களது தகவல்களை அவர்களிடம் கொடுக்க வேண்டும் என வற்புறுத்த முடியும். உங்களது தேடல் இயந்திரப் பயன்பாடு யாருக்கும் தெரிந்துவிட வேண்டாம் எனக் கருதினால், https://duckduckgo.com/ என்றதொரு தேடல் இயந்திர சேவை இருக்கிறது. அவர்களது தொழில்நுட்பம் உங்களிடமிருந்து எந்தத் தகவலையும் சேகரிக்காது. PRISM விவகாரம் வெடித்ததும் இந்தத் தளத்துக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. இதுபோலவே, https://ixquick.com/  என்ற தளமும் பிரபலமாகி வருகிறது.

அடுத்தது இமெயில்....

இமெயிலில் அனுப்பும் தகவல்களை Encryption செய்து அனுப்பும் பழக்கத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். Encryption பற்றித் தெரியாதவர்களுக்கு, க்விக் அறிமுகம். இணைய உலகில் இப்போது அழுத்தந்திருத்தமாகப் பயன்படுத்தப்படுவது Public Key Encryption என்ற முறை. நீங்களும் நானும் ரகசியமாகத் தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்றால், எனக் குச் சொந்தமான சங்கேத பதத்தை (Public Key)  உங்களுக்குக் கொடுத்துவிடுவேன். இதைப் பயன்படுத்தி நீங்கள் எனக்கு அனுப்ப வேண்டிய தகவல்களைக் கொத்துப் பரோட்டாவாக ஆக்கி அனுப்பிவிடுவீர்கள். அதைப் பெற்றுக்கொண்ட நான் எனது பிரத்யேக பதத்தைப் (Private Key)  பயன்படுத்தி மாற்றிக்கொள்வேன்.

Encryption செய்வதற்கு Pretty Good Privacy,  சுருக்கமாக PGP என்ற தொழில்நுட்பம் இருக் கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில், அதுவும் தகவல் பாதுகாப்புத் துறையில் வித்தகர்களாக இருக்கும் சண்முகவேல் சங்கரன் போன்றவர்களால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது அப்படி இல்லை; சற்றே முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் இதைத் தெளிவாகத் தெரிந்து பயன் படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது. PRISM விவகாரத்துக்குப் பின்னர், பயனீட்டு எளிமையைக் கொண்டுள்ள http://www.enlocked.com/ போன்ற சேவைகள் பிரபலமாகி வருகின்றன.

Instant messaging, Video chatting போன்றவற்றுக்கு ஸ்கைப், கூகுள் சேட் போன்றவற்றைப் பயன் படுத்தாமல் https://jitsi.org/ சேவையைப் பயன்படுத்தலாம்.

கடைசியாக, அலைபேசியில் இருந்து செய்யப்படும் பேச்சு மற்றும் குறுந்தகவல்களை ஒட்டுக்கேட்பதில் இருந்து தப்பிப்பது எப்படி? அதற்கும் டெக் தீர்வுகள் வந்தபடி இருக்கின்றன. சைலன்ட் சர்க்கிள் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் தொழில்நுட்பம், அலைபேசியில் நடக்கும் உரையாடல்களை முழுக்க Encryption செய்துவிடுகிறது. அதிகத் தகவல்களுக்கு நிறுவனத்தின் தளத்தைப் பாருங்கள் www.silentcircle.com

இந்திய அரசு தேசிய இணைய ஒருங்கிணைப்பு மையம் (National Cyber Coordination Center) என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கி, இந்தியாவில் இருந்து உள்ளும் புறமும் செல்லும் இணையப் போக்குவரத்துத் தகவல்களை மோப்பமிட்டு தெரிந்துகொள்ளப்போவதாகச் சொல்லியிருந்தேன். சாதாரணப் பயனீட்டாளர்கள் Encryption போன்றவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், இத்தகைய மோப்பமிடும் அமைப்புக்கு உருப்படியாக எதுவும் கிடைக்கப்போவதில்லை! 

என் மகள் தான் நாளை எனக்காக......

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.

அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே "என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது" என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.

கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .

நாட்கள் உருண்டோடின. அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

அவள் கணவர் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார். மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.

அன்று இரவு அவர் மனைவி,

"நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த‌ கணவர் சொன்னார்,

"என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள்"

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்!!!

குணவதியான மனைவி அமைந்தால் குடும்பமே கோயிலாகும்

னக்கே ஆயிரம் பிரச்னைகள் இருக்க, மற்றவர் பிரச்னைகளிலும் தலையிட்டு அவர்களை மேலும் குழப்பும் சந்தர்ப்பம் சிலருக்கே வாய்க்கும். அப்படியான ஒரு 'பொக்கிஷ தருணம்' அன்று எனக்கும் வாய்த்தது.

நண்பர்கள் இருவருக்கிடையில் விவாதம். என்ன ஏதென்று நான் விசாரிப்பதற்குள், தானாகவே முந்திக்கொண்டு சொன்னார் முதல் நண்பர்: ''வாரக் கடைசியாச்சே! வாடா, சினிமாவுக்குப் போகலாம்னு கூப்பிட்டான். ஒரு வார்த்தை என் மனைவிகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்னேன். அதுக்குக் கேலி பண்றான்!''

''இதுல கேலி பண்றதுக்கு என்ன இருக்கு... மனைவி சொல்தானே மந்திரம்?'' என்றேன் நான்.

நான் யாருக்கு சப்போர்ட் செய்கிறேன் என்று புரியாமல் குழப்பமும் கடுப்புமாக என்னைப் பார்த்தார்கள் நண்பர்கள் இருவரும். நான் சிரித்தபடி விவரிக்க ஆரம்பித்தேன்.

''பூலோகத்துல மட்டுமில்ல, தேவலோகத்திலும் மனைவிக்குத்தான் முதலிடம். சிவனார் தன் உடம்பின் இடப்பாகத்திலும், விஷ்ணு தன் மார்பிலும், பிரம்மன் தன் நாவிலும் மனைவிக்கு இடம் கொடுத்திருக்காங்கன்னா பார்த்துக்கோங்க. இன்னொரு தகவலும் சொல்றேன், கேட்டுக்கோங்க!

ஒருத்தனுக்கு நான்கு புருஷார்த்தங்கள் அவசியம்னு புராண- இதிகாசங்கள்ல சொல்லப்பட்டிருக்கு. அவை என்னென்ன தெரியுமா? மோட்சம், அர்த்தம், காமம், தருமம். மோட்சம் என்பது இறைவனின் திருவடியைப் பற்றிக்கொள்ளும் மேலான தகுதி. அர்த்தம்- பொன் பொருள் சேர்ப்பதைக் குறிக்கும். காமம்- விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வது. தர்மம்- நாம் செய்யும் தான தருமங்களைக் குறிக்கும். இதுல, மோட்சமானது பூர்வ ஜன்மத்துக் கொடுப்பினை இருந்தால்தான் வாய்க்கும். அது நம்ம கையில இல்லையாம். சரி... மத்த மூணும்? அவற்றில் இரண்டை இழந்தால்தான் ஒன்று கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள்.

அதாவது, ஒருத்தன் பொருள் சேர்க்கணும்னு நினைத்தால், தான தர்மம் செய்வதோ, நமது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதோ  இயலாமல் போகும்; தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைந்தால், அர்த்தமும் தருமமும் அடிபட்டுப் போகும். அதேபோன்று தருமத்தில் நாட்டமுள்ளவனுக்குக் காமமும் அர்த்தமும் வாய்க்காமல் போகும்'' என்றேன்.

''அப்படின்னா அர்த்தம், காமம், தர்மம் இந்த மூன்றும் ஒருசேர ஒருத்தனுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லையா? நீ என்னடான்னா நாலு புருஷார்த்தங்களும் அவசியம்கிறே! பின்னே எப்படித்தான்..?'' என்றார்கள் நண்பர்கள்.

''அதைத்தான் சொல்ல வரேன்... ஒருத்தனுக்குக் குணவதியான மனைவி அமைந்தால், மேலே சொன்ன மூணும் வாய்க்குமாம். குணவதியான மனைவியானவள் தகுந்த நேரத்தில் நம்மைச் சேமிக்க வைப்பாள்; அர்த்தம் நிறைவேறும். நமது விருப்பத்தை நிறைவேற்றவும் துணை புரிவாள்; காமம் வாய்க்கும். இல்லாள் நல்லாளாய் இருக்கும்போது நமது தான தருமத்துக்கும் குறைவிருக் காது. ஆக, குணவதியான மனைவி அமைந்தால் குடும்பமே கோயிலாகும். புரிஞ்சுதா?'' என்றேன்.

நான் பேசி முடித்ததும், கேலிக்கு உள்ளான நண்பர், ''நல்லா புரிஞ்சுதுப்பா! இவனுக்குப் புத்தியில உறைக்கிற மாதிரி அருமையான தகவலைச் சொல்லியிருக்கே! மனைவியோட மகத்துவம் அறிஞ்சவன் நான். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... கல்யாணம் ஆகி 16 வருஷம் ஆகுது; இதுவரைக்கும் என் மனைவியை ஒரு தடவை கூட கைநீட்டி அடிச்சதில்லை!'' என்றார் பெருமிதமாக.

உடனே, அடுத்த நண்பர் சொன்னார்... ''அட, இதென்ன பிரமாதம்! எனக்குக் கல்யாணம் ஆகி 23 வருஷம் ஆகுது. இதுவரைக்கும் ஒருதடவை கூட என் மனைவியைத் திருப்பி அடிச்சதில்லை, தெரியுமா?!''

இவருக்கு என் மேலே என்ன வெறுப்பு, எதுக்காக ஒதுக்கறார்

'தீபக் பிறப்பதற்கு முன்னாலே நிறைய இடங்களுக்கு என்னை இவர் பைக்ல அழைச்சிட்டுப் போயிருக்கார். இப்போ குழந்தைக்கு மூணு வயசாச்சு. குழந்தையை வீட்டிலே பார்த்துக்க அம்மா இருக்காங்க. ஆனாலும்கூட இப்பெல்லாம் என்னை எங்கேயும் வெளியே அழைச்சுட்டுப்போக மாட்டேங்கிறார். இவருக்கு என் மேலே அப்படி என்ன வெறுப்பு, எதுக்காக என்னை ஒதுக்கறார்னு தெரியலே!''

கண்ணீர் பொங்க ரம்யா என்னிடம் புகார் செய்தாள். 'உங்கள் நண்பர்தானே, நீங்களே நியாயத்தைச் சொல்லுங்கள்' என்பதைச் சொல்லாமல் சொன்னாள்.

முடிவெடுப்பதற்கு முன்னால், இரு தரப்பையும் அறிந்துகொள்வதுதானே முறை? மோகனைத் தனியே சந்தித்தேன்.

'ரம்யா சொல்வது உண்மைதானா?'' என்று கேட்டேன். தயக்கத்துடன் ஒப்புக்கொண்டான்.

'அவ மேலே உனக்கு என்ன வெறுப்பு?''

'யார் சொன்னது வெறுப்புன்னு? நான் அவளை உயிரா நேசிக்கிறேன்!''

'பின்னே... எதுக்காக அவகூட வெளியே போவதைத் தவிர்க்கிறே?''

மோகன் உடனடியாக பதிலளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கேட்ட பிறகு, 'நான் சொல்லும் பதிலைக் கேட்டு நீ சிரிக்கக்கூடாது. கேலி செய்யக்கூடாது!'' என்று நிபந்தனைகள் போட்டுவிட்டுப் பிறகு விஷயத்துக்கு வந்தான்.

'சாலை விபத்தில் மோட்டார் பைக்கில் சென்ற கணவன், மனைவி இரண்டு பேருமே மரணம்கிற மாதிரியான செய்திகள் அடிக்கடி பேப்பரிலே வருது. போதாத காலம், எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆச்சுன்னா எங்க குழந்தை அனாதை ஆயிடுமே! அதனாலேதான், இரண்டு பேரும் ஒரே நேரத்துல வெளியே போவதை முடிந்தவரை தவிர்க்கிறேன். இதை ரம்யாவிடம் சொன்னா ஏத்துக்கமாட்டா.  அல்லது, அச்சானியமா சொன்னதா நினைச்சுக் கண்கலங்குவா. அதனாலதான் காரணத்தை அவளிடம் சொல்ல முடியாம தவிக்கிறேன்.''

எனக்குச் சிரிப்பு வரவில்லை; அதே நேரம், கேலி செய்யவும் தோன்றவில்லை. ஆனால், திகைப்பாக இருந்தது. மோகன் எப்போதுமே கொஞ்சம் எதிர்மறையாகச் சிந்திப்பவன்தான். ஆனால், இந்த அளவுக்கு அவன் சிந்தனைகள் நெகடிவ்வாகவே இருந்தால்... அவன் வாழ்க்கை என்ன ஆவது?

அப்போதுதான் புராணப் பாத்திரமான நளன் என் நினைவுக்கு வந்தான். தமயந்தியின் கணவன் அல்ல; ராமாயணத்தில் இடம்பெற்ற வேறொரு நளன். அந்த நளனின் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். இப்போது எதற்கு கதை என்கிற முகக்குறிப்பு அவனிடம் தெரிந்தாலும், பொறுமையாகவே கதையைக் கேட்டான்.    

சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்திருந்தான். அதனால், வானரப் படையுடன் இலங்கைமீது போர் தொடுத்து சீதையை மீட்க முடிவெடுத்தார் ராமர். ஆனால், இலங்கை செல்ல வேண்டுமானால் மாபெரும் கடலைக் கடக்க வேண்டும். அதற்குப் பாலம் அமைக்க வேண்டும்.

பாலம் அமைக்க வானர சேனை உற்சாகமாக முன்வந்தது. மாபெரும் கற்களைக் கொண்டுவந்து கடலில் போட்டது. ஆனால், அவையெல்லாம் கடலில் மூழ்கின. பின்பு எப்படிப் பாலம் கட்டுவது? சமுத்திரராஜனை நோக்கித் தியானம் செய்தார் ராமர். ஆனால், பலனில்லை. ஒருகட்டத்தில் கோபமடைந்த ராமர், தன் அஸ்திரத்தால் கடலையே வற்ற வைக்க முடிவெடுத்தார். நடுநடுங்கிய சமுத்திரராஜன் மன்னிப்பு கோரினான். 'ராமபிரானே! நளன் என்ற வானரத்தின் தலைமையில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடக்கட்டும். அப்போது பாலத்தை எளிதாக எழுப்பலாம்'' என்று ஒரு ஆலோசனையும் கூறினான்.

அதுபோலவே நளன் தலைமையேற்றான். அவனது ஆணைப்படி பாலம் கட்டுவதற்கான எல்லாப் பொருள்களும் பிற வானரங்களால் குவிக்கப்பட்டன. பாறைகளும், கற்களும் கொண்டுவரப்பட்டன. மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டன. சிறு குன்றுகள்கூடப் பெயர்த்து எடுக்கப்பட்டன. அனைத்தையும் கொண்டு, மொத்தப் பாலமும் ஐந்தே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது.

அதுசரி, எத்தனையோ வானரங்கள் இருக்க நளனின் தலைமையை ஏற்குமாறு சமுத்திரராஜன் ஏன் ஆலோசனை கூறவேண்டும்? அதற்குக் காரணம் உண்டு.  

விஸ்வகர்மாவின் புத்திரனான நளன் என்ற அந்த வானரம், தன் குலத்திற்கேற்ப சிறு வயதில் துடுக்குத்தனமாக இருந்தது. ஒருநாள், கங்கைக்கரையில் ஓர் உத்தமமான பிராமணன் தன்னுடைய சாளக்கிராமங்களை வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தான். அந்த வழியே சென்ற சிறுவன் நளன், அந்த தெய்வ உருவங் களை எடுத்துக் கங்கையில் வீசினான்.

பதறிய பிராமணன், அந்த உருவங்களைத் தேடிப் பார்த்தபோது, அவை கிடைக்கவில்லை. உடனே அவன் நளனைப் பார்த்து, 'உன் கையால் நதியிலோ கடலிலோ எதைப் போட்டாலும் அது மிதக்கும்'' என்று சாபமிட்டான்.  

இந்தச் சாபத்தை நினைவுகூர்ந்த சமுத்திரராஜன், நளனால் கடலில் வீசப்படும் கற்களும் பாறைகளும் ​மூழ்காமல் மிதக்கும் என்பதால், எளிதில் பாலம் அமைக்க முடியும் என்பதை உணர்ந்து, அந்த ஆலோசனையைக் கூறினான். பாலமும் விரைவில் எழும்பியது.

'நளனுக்குக் கிடைத்த சாபத்தையே பாலம் எழுப்பச் சாதகமாக்கிக் கொண்டனர். இப்படித்தான் நெகட்டிவ்வான விஷயங்களைக் கூட நாம் கையாள வேண்டும். மிகவும் அபூர்வமாக நடக்கக்கூடியதை எல்லாம் அனுமானம் செய்துகொண்டு கஷ்டப்படுவதை தவிர்க்கப் பார்!'' என்றேன் நண்பனிடம்.

'எனக்குப் புரியாமல் இல்லை. ஆனா, ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிட்டால் என்ன பண்றதுன்னு என்னால் இப்படி நெகடிவ்வாகத்தான் நினைக்க முடியுது. அதை மாற்றிக்கொள்ள முடியலை!'' என்றான், பரிதாபமாக.

ஆறுதலாக அவன் தோளைத் தட்டியபடி ஒரு கேள்வி கேட்டேன்... 'ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தது எந்த மாதிரி மனிதனாக இருக்க வேண்டும்? பாஸிடிவ்வான எண்ணம் ​கொண்டவனா? அல்லது, நெகட்டிவான எண்ணம் கொண்டவனா?''

'இதிலே என்ன சந்தேகம்? நமக்கு இறக்கை கிடையாது. அப்படி இருந்தும் நம்மால் பறக்க முடியும்னு நினைத்தவன் பாஸிட்டிவ் எண்ணம் ​கொண்டவனாகத்தானே இருந்திருப்பான்?'' என்றான் மோகன்.

'சரி, இன்னொரு கேள்வி. பாரசூட்டைக் கண்டுபிடித்தவன் பாஸிட்டிவ் எண்ணம் கொண்டவனா? அல்லது, வேறு மாதிரியா?''

மோகனின் முகத்தில் ஒரு சின்னக் குழப்பம். பிறகு, நான் சொல்ல நினைத்ததைப் புரிந்துகொண்டதால், ஒரு மலர்ச்சி. மேலும் தெளிவாக்க விளக்கினேன்.  

'விமானத்தில் போகும்போது விபத்து உண்டாகலாம். பயணிகள் அதில் இறந்துவிடலாம். இப்படி எதிர்மறையான, நெகட்டிவ் சிந்தனைதான் பாரசூட் கண்டுபிடிக்க வழிவகுத்திருக்க வேண்டும். ஆனால், அதற்காக விமானத்திலேயே போகக்கூடாது என்று அவன் முடிவெடுக்கவில்லை. மாறாக, அப்படி விபத்து நேர்ந்தாலும், அதிலிருந்து தப்ப என்ன செய்யலாம் என்று யோசித்தவன்தான் பாரசூட்டைக் கண்டுபிடித்து பெரிய சமூக சேவை செய்திருக்கிறான்.

இப்படி எதிர்மறையான விஷயங்களையே ஆக்கபூர்வமான முடிவுக்குக் கொண்டுவரலாமே! விபத்தில் மாட்டிக்கொண்டு தவறான மருத்துவ சிகிக்சையால் ஒரு காலையே இழந்தார் சுதா சந்திரன். ஆனாலும், அப்படியே தேங்கிப் போகாமல் அந்தச் சோதனையையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு ஒற்றைக்காலில் அவர் பரத நாட்டிய நிகழ்ச்சி செய்ததுதானே அவருக்கு உலகப் புகழ் தேடித் தந்தது?

இப்படி நெகட்டிவை பாஸிட்டிவாக மாற்றிக்கொள்ளக் கற்றுக் கொள். எதிர்மறையாகத்தான் சிந்திக்க முடிகிறது என்கிறாய். இருக்கட்டும்; ஆனால், அதிலிருந்து மீள்வதும், மாற்றிக்கொள்வதும் உன் கையில்தான் இருக்கிறது. லட்சக்கணக்கானோர் தினமும் தத்தமது துணையோடு வாகனங்களில் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். விபத்து ஏற்படுமே என்று அவர்கள் எல்லாம் வீட்டிலேயா முடங்கிவிட்டார்கள்?! எனவே, மனைவியோடு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டாம். மறக்காமல் ஹெல்மெட் அணிந்துகொள். பின்னால் உட்காரும் உன் மனைவி தன் துப்பட்டாவை சரியாக முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கிறாளா என்பதை உறுதிசெய்து கொள். கவனமாக வண்டியை ஓட்டு. இந்தப் பொறுப்பு உணர்வு விபத்து வாய்ப்பை மிகவும் குறைத்துவிடும்'' என்றேன் நான்.

நான்கு நாட்களுக்குப் பிறகு, கடைத்தெருவில் நடந்துகொண்டிருந்தபோது, எதிரே பைக்கில் வந்துகொண்டிருந்த மோகன் என்னைப் பார்த்ததற்கு அடையாளமாகத் தலையசைத்தான். அவன் பின்னால் உட்கார்ந்திருந்த ரம்யாவும் புன்னகைத்தாள். 

திருமணத் தடை நீங்கும்; கல்யாண மாலை தோள் சேரும்

புதுக்கோட்டை மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள பல ஊர்களில், புதுக்கோட்டை தேவஸ்தான கோயிலுக்கு உட்பட்ட கோயில்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றான, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் கீழராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயில், புராதனமான அழகிய திருக்கோயிலாகும்.

குலோத்துங்க சோழன், புதுக்கோட்டை நகரில் ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி ஆலயம் கட்டினான். சிவனாருக்குக் கோயில் எழுப்பும் அதே வேளையில், அருகிலேயே ஸ்ரீஅம்பிகைக்கும் தனியே ஓர் ஆலயம் அமைப்பது என முடிவு செய்தான். அதன்படி சிவன் கோயிலுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டது ஸ்ரீஅரியநாச்சி அம்மன் ஆலயம்.

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்தான் என்றாலும், அதையடுத்து இந்தப் பகுதியை ஆட்சி செய்த பாண்டியர்களும் இந்தக் கோயில் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர்; நிவந்தங்கள் அளித்துள்ளனர். எனவே, பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அம்மனின் அருளைக் கண்டு வியந்த பல்லவ மன்னர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, பல்லவர்களும் இந்தக் கோயில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது ஸ்தல வரலாறு. 

இங்கே... தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் வாரி வழங்கும் அன்னையாகத் திகழ்கிறாள் ஸ்ரீஅரியநாச்சி அம்மன். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து அம்மனைத் தரிசித்துப் பிரார்த்திக்கும் பக்தர்கள் ஏராளம்.

குறிப்பாக, ராகு கால வேளையில் ஸ்ரீஅரியநாச்சி அம்மனுக்கு அரளிமாலை சார்த்தி, நெய்தீபமேற்றி வழிபட்டால்... விரைவில் திருமணத் தடை நீங்கும்; கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்!

மேலும், திருமணத் தடை நீங்க, தங்கம் அல்லது வெள்ளியில் பொட்டு வாங்கி, அம்மனிடம் வேண்டிப் பிரார்த்தித்து, கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, ஆலமரம் மற்றும் வேம்பு மரம் ஆகியவை சேர்ந்திருக்கும் மரங்களைச் சுற்றிப் பிராகாரம் வந்து, மஞ்சள் சரடை மரத்தில் கட்டிவிட்டு மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் திருமணத் தடை அகலும் என்கின்றனர் பக்தர்கள்.  

பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்குவோர், அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்து தொட்டிலும் வளையலும் கட்டி வேண்டினால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கப் பெறுவார்கள்.

ஆடி மாதம் வந்துவிட்டால், செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். மேலும், இந்த மாதத்தில் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

பௌர்ணமிதோறும் லட்சார்ச்சனையும் திருவிளக்கு பூஜையும் இங்கு நடைபெறுவது சிறப்பு.

இங்கே உள்ள நாகர் விக்கிரகத்துக்குப் பாலபிஷேகம் செய்து அம்மனை வேண்டிக்கொண்டால், தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.


, மூல நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்தால் ?!

ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்! ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் நிலவிவரும் தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. 'மூல நட்சத்திரப் பெண்ணா? வேண்டவே வேண்டாம்!' என்று நட்சத்திரத்தைப் பார்த்ததுமே அவர்களின் ஜாதகத்தை ஒதுக்கித் தள்ளும் வேதனையான வழக்கம் இன்றும் தொடர்கிறது.

இது தவறு எனில், இப்படியான நம்பிக்கை ஏற்படக் காரணம் என்ன? நெருப்பில்லாமல் புகையாதே?!

இதற்கான பதிலை மிக நுணுக்கமாக ஆய்ந்தறிய வேண்டும்.

ஜோதிட சாஸ்திரத்தில் மிதுன ராசியில் சூரியன் இருக்கும் மாதமே ஆனி மாதம். மிதுனம் ஆண் ராசி. இந்த மாதத்தில் வரும் மூல நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமி திதியை ஒட்டியே வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் மாதம் புரட்டாசி. கன்னி- பெண் ராசியாகும். இந்த மாதத்தில் வரும் மூலநட்சத்திரம் பெரும்பாலும் அஷ்டமி திதியுடன் சேர்ந்து வரும்.

எப்போதுமே நல்ல காரியங்களுக்கு பௌர்ணமி திதியே ஏற்றதாகக் கொள்ளப்படும்; அஷ்டமி திதியை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள். ஆக, பௌர்ணமி திதியை ஒட்டி ஆனி மாதம் மிதுன (ஆண்) ராசியில் சூரியன் இருக்கும்போது வரும் மூல நட்சத்திரம் சுப திதியில் வருவதால், ஆனி மூலத்தை ஏற்றனர். அதுவே ஆண் மூலம் எனப்பட்டது. பௌர்ணமி என்பது யோக திதி என்பதால், இன்னும் திரிபு ஏற்பட்டு 'ஆண் மூலம் அரசாளும்' என்றாகிவிட்டது.

அதேபோன்று, கன்னி மாதமாகிய புரட்டாசியில், மூல நட்சத்திரம் அஷ்டமியோடு சேர்ந்து வருவதால், அந்த நாளில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட்டது. அன்று துவங்கும் நற்காரியங்கள் விருத்தியாகாது எனும் பொருள்படும்படி 'கன்னி மூலம் நிர்மூலம்' எனச் சொல்லி வைத்தார்கள். இதில் கன்னி ராசி மறக்கப்பட்டு, கன்னிப் பெண்கள் எனத் தவறாகப் பொருள் கொண்டு 'பெண் மூலம் நிர்மூலம்' என்றாகிவிட்டது.

எனவே, மூல நட்சத்திரம் என்பது இருபாலருக்கும் பெருமை சேர்க்கும் நட்சத்திரமே! அதேபோன்று, மூல நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்தால் மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்பதுவும் தவறான வாதம் ஆகும்.

ராகு காலம் கேது காலம்

பஞ்சாங்கத்தின் ஐந்து முக்கிய உறுப்புகள் வாரம், திதி, கரணம், நக்ஷத்திரம், யோகம் ஆகியவை. இவற்றை விரிவாக அறிவது அவசியம். முதலில், வாரம் பற்றி பார்ப்போம்.

வாரம் என்பது ஏழு கிழமைகளாகும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களுக்குரிய நாட்களாக அமைந்துள்ள ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு நாட்களைக் கொண்டது ஒரு வாரமாகும். நவக்கிரகங்கள் என ஒன்பது கிரகங்களைக் குறிக்கிறோம். அதில் ஏழு கிரகங்கள் ஆட்சி செய்யும் ஏழு நாட்களை மட்டுமே ஒரு வாரம் என்கிறோம். அப்படியானால், மற்ற இரண்டு கிரகங்களுக்கு நாட்களின்மீது ஆதிக்கம் கிடையாதா என்ற கேள்வி எழலாம். இதற்கு விடைதரும் ஒரு புராணக் கதை உண்டு.

சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கு வார நாட்களைப் பிரித்துத் தந்தார் பிரம்மா. ராகு கேதுக்களான சாயா கிரகங்களை அதில் சேர்க்கவில்லை. ராகுவும் கேதுவும் தவம் செய்து பிரம்மனை தரிசித்தனர். நவக்கிரகங்களில் இடம்பெற்ற தங்களுக்கு வார நாட்கள் ஏன் ஒதுக்கப்படவில்லை என்று கேட்டனர். வாரம் என்பதை ஒன்பது நாட்கள் என நிர்ணயித்து தங்களுக்கும் இரண்டு நாட்களை ஒதுக்கி, ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தைத் தரும்படிக் கேட்டனர்.

அதற்கு பிரம்மன், 'நீங்கள் இருவரும் இரண்டு கிரகங்கள் அல்ல. ஒரே கிரகம்தான். பாம்பின் தலையையும், வாலையும் உடலின் பகுதியாகக் கொண்ட நீங்கள் ஒரே கிரகம்தான். ஒரு நாளை உங்களுக்காக ஒதுக்கினால் வார நாட்கள் எட்டாகும். இது 52 வாரங்களை கொண்ட ஒரு வருடக் கணக்கில் சிக்கலை உண்டாக்கும். எனவே, உங்கள் விருப்பத்தை வேறு விதமாகப் பூர்த்தி செய்கிறேன்'' என்று கூறி, ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரத்தை ராகுவுக்கும், ஒன்றரை மணி நேரத்தைக் கேதுவுக்கும் தந்து, அந்தக் காலத்தை ராகு காலம், கேது காலம் என்று பிரித்து அருள்புரிந்தார்.

இப்போது மற்ற ஏழு கிரகங்களும் தங்கள் ஆட்சிக் காலமான 24 மணி நேரத்தில் 3 மணி நேரம் குறைந்துவிட்டதே என்றும், ராகு, கேதுக்களுக்கு ஆட்சி நேரம் அதிகமாகிவிட்டதே என்றும் எண்ணினர். அப்போது பிரம்மா இந்த ராகுகாலம், கேதுகாலம் பற்றிய கணக்கை விவரித்தார். ஒரு நாளின் 24 மணிநேரத்தில் ராகு, கேது காலம் 3 மணி நேரம் போக, அந்தக் கிரகத்தின் மீதி ஆட்சி நேரம் 21 மணிநேரம். ராகு, கேதுக்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 3 மணி வீதம் 7 நாட்களுக்கு 21 மணி நேரம். எனவே, ஒரு வாரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் தலா 21 மணி நேரம் ஆட்சிக் காலம் ஆகிறது என்று விளக்கினார்.

பிரம்மனின் கணித யுக்தியைப் பாராட்டினார்கள் நவக்கிரக தேவர்கள். ஒவ்வொருநாளும் ராகு காலம் எப்போது, கேது காலம் எப்போது என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். கேதுவின் காலத்தைதான் எமகண்டம் என்று குறிப்பிடுகிறார்கள். அதனால், அது எமனுக்குரிய காலம் என்றும், அதில் ஆபத்துகள் நேரும் என்றும் தவறாக எண்ண வேண்டியதில்லை. ராகு காலத்தில் புதிய காரியங்களைத் தொடங்கக்கூடாது என்றும், திருமணம் போன்ற சுபகாரியங்களின் முகூர்த்தத்தை வைக்கக்கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது. மற்றபடி நமது தினசரிக் கடமைகளைச் செய்யவும், கர்மாக்களைச் செய்யவும் ராகு காலம், எமகண்டம் ஒரு தடையில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கிரகங்களின் தலைவன் சூரியன். எனவே, வாரத்தின் கிழமைகளில் முதல் கிழமை ஞாயிறுதான். மேலை நாட்டவர்கள் பல நூற்றாண்டுகள் நம்மை ஆண்ட காலத்தில், அவர்கள் கலாசாரத்துக்கு ஏற்ப ஞாயிற்றுக்கிழமையை விடுமுறையாக்கி, திங்கட்கிழமையை வார முதல்நாள் என்று சிந்திக்கும்படிச் செய்துவிட்டனர். மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்தால், அறிவாற்றலால் ஏற்படும் சக்தி அதிகமாகி, அதனால் நல்ல பலன்கள் ஏற்படும் என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை.

ஞாயிற்றுக்கிழமைகளில் சோம்பேறித்தனமாக ஓய்வெடுத்துக் கழிக்கும் பழக்கத்தை மாற்றி, ஆக்கப்பூர்வமான அறிவுப் பணிகளைச் செய்துபார்த்தால், அதன் பலன் தெரியும். மத்தியக் கிழக்கு நாடுகளிலும், வேறு சில மேலை நாடுகளிலும் வெள்ளிக்கிழமைதான் விடுமுறை; ஞாயிற்றுக்கிழமை வேலை நாள்!

ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு நவக்கிரக நாயகன்தான் தேவதை. அந்த நவக்கிரகத்துக்கு ஒரு அதிதேவதை (மூலாதார தேவதை உண்டு). அதனாலேயே அந்தந்த நாட்களில் அந்த கிரகத்துக்குரிய அதிதேவதையை பூஜித்துப் பலன்பெறும் பழக்கம் இந்து தர்மத்தில் உள்ளது.

Sunday, June 23, 2013

பிராய்லர் சிக்க‍ன் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் கெடுதல்கள் – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்

பிராய்லர் சிக்க‍ன் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் கெடுதல்கள்  ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்

பிராய்லர் கோழி தற்போது கிலோ 
Rs.450 க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ?

பிறந்து 
55 நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...

இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 
Rs.120 இல் இருந்து  Rs.40  நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ,  இவர்களின் திட்டத்தின் படி Rs.180 என்று விலையை உயர்த்தி , பிறகு Rs.120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர் 

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது,,,
 மஞ்சள் காமாலை ,இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் ... .ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்.... 

நாமக்கலின் 
HEALTH CARE ORGANIZATION  எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது ..... 

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு,  மாடு
,  கோழி,  காடை,  கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்;  மூளை வளராது
;  சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய்,கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!

அசைவம் சாப்பிட்டால், 
மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில்  99 சதவிகிதத்தினரும்,  உலகை உலுக்கி மாற்றிய  'மைக்ரோசாஃப்ட்', 'ஆப்பிள்'  முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய்,  கனிகளில்  குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000  மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில்  300  மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்?  எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான்,  முக்கியமான ஒரு கேள்வி!



ஏனென்றால், 
போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில்  'ஃபிஷ் ஃப்ரை' ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால்,  இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், 
மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத்  தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்து வைத்திருக்கிறோம்?

மாமிசம் சாப்பிடும்போது, 
நிச்சயம் இஞ்சி,  பூண்டு,  சீரகம்,  மல்லி,  பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும்  இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால்,  புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா?  சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?  தெரிந்து கொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக,புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.

கோழி நல்ல உணவு. ஆனால்
, அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி,  இருமல்,  மந்தம் போக்கக் கூடியது;  உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.

நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், 
பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லி வருகிறது.  நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சியின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்' என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.

'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும்  
'ரோக்ஸார்சோன்' (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன!''  என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது.