Monday, September 30, 2013

Your Reward - Here or There?

Tara was a good woman. Everybody said so, She even said so herself. If anyone was in difficulty she always helped the person and did not forget to tel her and neighbours afterwards. She found a job for the son of a widow. And the whole town praised her for it. She even sheltered poor people in her house. She gave money to beggars outside the temple where everyone could see, but not to those who come to her house. For no one could see her kindness there. Tara was, everybody agreed, a very good person.

 

Vinita, on the other hand, was seldom seen giving money or helping anybody. She did go a lot among the poor and in hospitals and prisons. But she never told anybody what she did there. All her neighbours including Tara thought her a bit queer and not very good at all.

 

They both died and went to the gates of heaven. To tara's surprise she had to wait, while Vinita was let in at once. She was very angry.

 

"What is the meaning of this?" she said to the One at the gate. "I have been so kind, I have helped so many people. Everybody called me good. Yet before me you let in that Vinita who has done nothing."

 

"Vinita has not done anything", said the One. "She was kind to everyone she met.She was not rich but she visited and helped poor and the sick and the imprisoned in many ways. But she took pains to hide her goodness from others, so that her neighbours thought her bad and called her names. She did good and suffered so much on earth. So now she has come to her everlasting reward."

 

"And what about me?" asked Tara.

 

There came a stern reply, "Whatever good you did was only to be seen and praised by others. And when they praised you, you liked it, didn't you?"

 

"Yes," admitted Tara.

 

"That was your reward. You have received your reward. There is no reward for you here." And he went inside and closed the gate in Tara's face.

 

 

 

Sunday, September 29, 2013

A Treasure for Worryfree Happy Life

The king of certain country had a treasurer called Amrit. Amrit was a very good treasurer and very honest. The king trusted him, until one day someone told the king that Amrit was not so honest as he seems. "For" said the informer, "he has a treasure hidden in his cellar."

 

The king knew that Amrit had no money of his own and he could hardly have saved enough from his pay to make a treasure. How then had he come by this treasure? The king said he would look into this matter.

 

The king came to Amrit's house. When the treasurer saw the king he came out and bowing low said, "What can I do for Your Mesjesty?"

 

"I hear you have a treasure hidden in your cellar." The king came straight to the point. "I must see it and you must tell me how you got it."

 

"Certainly, Your Mejesty," replied Amrit, and led the way down to the cellar. There was a window in the cellar and by the light from that the king could see that in the corner of the room were some rough clothes, a shepherd's stick and a flute. There was nothing else in the room.

 

"But this is not my treasure," said the king.

 

"No, Your Majesty, but it is mine," replied Amrit. "Your Majesty may remember that when you found me I was a poor shepherd boy. You brought me here and gave me a big house and a good salary. But it has not made me any happier. It has only meant that I have had to bear part of your burden. When I am especially weighed down by worries I come down here, I put on these rough clothes and take the shepherd's stick in my hand and play on the flute the happy songs I used to play when I was a shepherd boy and I took through the window at the lovely meadows yonder and I feel I am back to those days when I was not a treasurer but a king."

 

"A king! How?" asked his Majesty.

 

"Yes Sire," continued Amrit, "for then the sun shone for me even more than for your Majesty, who have to live in a great palace; the meadows blossomed for me more than for you who never walk on them; the birds sang for me much more sweetly  than your caged birds can never sing for you. I had enough food to eat and clothes to wear. No wonder I spent all day singing songs of love and praise of God who gave me all this. Can you say I was less well off than a king?"

 

"No!" answered the king, "you were even better off than a king who has so many worries and fears. I envy your treasure, my friend."

 

 

 

 

சொந்த வீடு - வில்லங்க விஸ்வரூபம்!

ஆவணங்கள் எல்லாம் பக்காவாக இருக்கிறது என வழக்கறிஞர் சொல்லிவிட்டார்; அதனால் நம்பி இடத்தை வாங்கிவிடலாமா என்றால்... கூடாது. காரணம், வில்லங்கம் எந்த ரூபத்தில் வருமென்று தெரியாது. நாம் நினைத்துப் பார்த்திராத வடிவில், நினைத்துப் பார்த்திராத நேரத்தில் வந்து நிற்கும். ஏனென்றால், ரியல் எஸ்டேட் தொழில் அப்படிப்பட்டது.  

நீதிமன்றத்தில் தேங்கி நிற்கும் வழக்குகளில் முக்கால்வாசி சிவில் வழக்குகள்தான். சொத்து அபகரிப்பு, நில மோசடி என அதிலும் நிலம், மனை தொடர்பான வழக்குகள்தான் அதிகம். ரியல் எஸ்டேட் தொழிலின் கிடுகிடு வளர்ச்சி காரணமாக பலதரப்பட்டவர்களும் இத்தொழிலில் நுழைந்ததன் விளைவு, இப்படியான தில்லாலங்கடி வேலைகளும் இத்தொழிலுக்கே உள்ள குணமாகிவிட்டது. இதுதவிர, நிலங்களின் மதிப்பும் உயர உயர எப்படியாவது, யாரையாவது ஏமாற்றி சம்பாதித்துவிட வேண்டும் என்பவர்களின் ஆதிக்கமும் இத்தொழிலில் நிறைந்துவிட்டது. இதை சம்பந்தப்பட்டவர்களே ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர்.  

சாதாரணமாக இத்தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கும் இதர தொழிலில் உள்ளவர்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கும். நிலத்தின் உரிமையாளரிடமிருந்து குறைந்த விலைக்கு பேரம் பேசி வாங்குவது, அந்த இடத்திற்கு சுற்றுச்சுவர், அலங்கார வேலைகள் செய்து மனைப் பிரிவுகளாக பிரித்து பன்மடங்கு விலைக்கு விற்பதுதான் ரியல் எஸ்டேட்காரர்களின் இலக்கு. ஒரு சில மாதங்களிலேயே கொள்ளை லாபம். இதுதான் ரியல் எஸ்டேட் துறையில் இவ்வளவு பேர் ஈடுபடக் காரணம். இத்துறையில் மோசடிகள் அதிகரிக்கவும் இதுதான் காரணம்.

காஞ்சிபுரம் அருகில் ஒரு கிராமத்தில் ஒரு குரூப் புது மனைப் பிரிவு போடுகிறது. தனித்தனியாக  மனையை விற்பனை செய்வதைவிட, மொத்தமாக ஏமாந்தவர்கள் தலையில் கட்ட பெரிய பெரிய அலுவலகங்களை மட்டுமே குறிவைக்கின்றனர். அதாவது, கம்யூனிட்டி லே-அவுட் என்கிற கான்செப்டில் ஆள் தேடுகின்றனர். பூந்தமல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தின் பணியாளர்கள், அவர்களது  நண்பர்கள், உறவினர்கள் சேர்ந்து மொத்தமாக அந்த மனைப் பிரிவில் இடம் வாங்குகின்றனர். ஆவணங்கள் எல்லாம் பக்காவாக இருக்கிறது என்று நம்பி வாங்கினார்கள்.

இடம் வாங்கியவர்கள் சில மாதங்களுக்குப் பிறகு வங்கிக் கடன் வாங்கி வீடு கட்ட அங்கு போனால், இடத்தைச் சுற்றி வேறொருவர் காம்பவுண்ட் சுவர் எழுப்பி இருக்கிறார். என்ன ஏதென்று விசாரித்தபோது, டபுள் டாக்குமென்ட் மோசடியில் இவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிந்தது.  

ஆவணங்கள் தருகிறபோதே 'மூலப்பத்திரத்திற்கு ஒரிஜினல் இல்லை சார், ஓனரிடமே இல்லை. ஆனா, பத்திரப்பதிவு அலுவலகத்திலிருந்து வாங்கிய நகல் பத்திரம் இருக்கிறது' என்பார்கள். நகல் பத்திரமும் நம்பிக்கையானதுதான். ஆனால், இந்த நம்பிக்கை என்பது ரியல் எஸ்டேட் நிறுவனங்களை பொறுத்ததுதான். நிலத்தை அடமானமாக வைத்து கடன் வாங்கி, அதற்கு ஈடாக மூலப்பத்திரத்தைத் தந்திருப்பார்கள். நாலாவட்டத்தில் மூலப்பத்திரம் தொலைந்துவிட்டது என்று திட்டமிட்டே நிலத்தை விற்பதற்கும் முயற்சி நடக்கும். காவல் நிலையத்தில் புகார் தந்துவிட்டு, அவர்களிடமிருந்து நான் டிரேஸபிள் சான்றிதழ் வாங்கிக்கொண்டு, தினசரி செய்தித்தாள்களில் மூலப்பத்திரம் காணவில்லை என ஒரு விளம்பரமும் தந்துவிடுவார்கள். அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் பத்திரம் வாங்கி, அந்த நகல் பத்திரத்தைக் காட்டியே நம் தலையில் கட்டுவதும் நடக்கும். சென்னையை அடுத்துள்ள மீஞ்சூரில் மளிகை கடை நடத்திவரும் ராமலிங்கம் இப்படிதான் ஏமாற்றப்பட்டார்.  

போலி ஆவணம் மூலம் ஏமாற்றுவது ஒருபக்கம் என்றால், ஆவணங்களில் உள்ள ஒரு சில குளறுபடிகள் காரணமாகவும் வில்லங்கம் நம்மை தேடிவரும் வாய்ப்புகள் உள்ளது. மூலப்பத்திரத்தில் சர்வே எண்ணை ஆங்கிலத்திலும், பத்திரப்பதிவில் தமிழிலும் குறிப்பிட்டிருப்பார்கள். குறிப்பாக, சர்வே எண் 4பி என்று தமிழிலும், 4றி என்று ஆங்கிலத்திலும் குறிப்பிட்டு விற்றுவிடுவார்கள். இதுவும் பின்னாட்களில் சிக்கல்களைக் கொண்டு வந்துவிடும். மனையைச் சுற்றிலும் நான்கு எல்லை சர்வே எண் வேறொன்றாகவும், மனையின் சர்வே எண் வேறொன்றாகவும் குறிப்பிட்டு குளறுபடிகள் செய்து விற்பனை செய்ய வாய்ப்புகள் உள்ளது.

எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கிறது, தவிர நாம் வாங்குவது ரீசேல் என்கிற வகையில் கைமாறும் இடம்தான். எனவே, நம்பி வாங்கலாம் என்று உடனிருப்பவர்கள் ஆலோசனை கூறலாம். ஆனால், புதிய மனைப் பிரிவோ அல்லது மறுவிற்பனையில் வரும் இடமோ, மனை வாங்குவது என்று முடிவு செய்துவிட்டால் முதலில் கவனிக்க வேண்டியது நிறுவனத்தின் நம்பகத்தன்மை. இதற்குமுன் அவர்கள் மேற்கொண்ட வீட்டுமனைத் திட்டங்கள், அங்கு பயனடைந்தவர்கள், இதர நிறுவனத்திற்கும் இவர்களுக்கும் உள்ள விலை வித்தியாசம் போன்றவைகளைக் கவனியுங்கள். மனைப் பிரிவு அலங்காரமாக இருக்கிறது என்பதை வைத்து மட்டும் நாம் முடிவெடுக்கக் கூடாது. வந்தவரை லாபம் என்கிற ஆட்களிடம் சிக்காமல் இருக்க வேண்டும்.

சரி, இப்படியான மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி? நாம் வாங்கும் இடத்தின் ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திக்கொள்ள வழக்கறிஞரை நாடினாலும், சம்பந்தப்பட்ட ஆட்களைச் சந்திப்பது, அலுவலகங்களுக்கு நேரில் செல்வது என சில வேலைகளை முக்கியமான வேலைகளைச் சோம்பேறித்தனம் பார்க்காமல் செய்தே ஆகவேண்டும். இந்த வேலைகளுக்கு சில நாட்களானாலும் பொறுமையாகச் செய்யவேண்டும். 'சார், சட்டுன்னு பதிலைச் சொல்லுங்க. நீங்க வேணாமின்னா உடனே வாங்க ஆள் ரெடி' என்று புரோக்கர்கள் அவசரப்படுத்தினால் தயக்கமில்லாமல் வேண்டாம் என்று சொல்லிவிடுவது நல்லது.  

ஆவணங்களை வாங்கியதும், உரிமையாளரே அந்த நிலத்தை மனையாகப் பிரித்து நேரடியாக விற்கிறாரா அல்லது நிலத்தின் உரிமையாளரி டமிருந்து அதிகாரம் வாங்கியுள்ளாரா என்பதைக் கவனிக்க வேண்டும். பவர் பதிவு செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் இருக்கவேண்டும். அந்த இடத்தின் பொருட்டு இதற்குமுன் வேறு நபர்களுக்கு தரப்பட்டுள்ள அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். இதில் முக்கியமான இன்னொரு விஷயம், பவர் தந்தவரும், பவர் வாங்கியவரும் தற்போது உயிருடன் இருக்க வேண்டும். பவர் தந்தவர் தற்போது உயிருடன் இல்லையென்றால் அந்த பவர் செல்லாத்தன்மை அடைந்துவிடும். பவர் வாங்கியவரின் சார்பாக வேறொருவர் விற்பனை செய்ய முயலும்போது அதற்குரிய ஆவணங்கள், அது பதிவு செய்யப்பட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த விவரங்களைப் பத்திரப்பதிவு அலுவலகத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

நிலத்தின் மீது நடந்துள்ள பரிமாற்றங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ் தந்திருப்பார்கள். அதிகபட்சமாக முப்பது வருடங்களுக்கு மட்டுமே அவர்கள் தரப்பிலிருந்து ஆவணம் தந்திருப்பார்கள். ஆனால், அந்த மூலப்பத்திரம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டிலிருந்து அந்த நிலம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பார்கள். அதற்குபிறகு அந்த பத்திரப்பதிவு அலுவலகம் பிரிக்கப்பட்டிருக்கலாம். இதுபோன்ற நிலையில் இரண்டு இடங்களிலும் அந்த இடம் குறித்து வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

கைகள் மூலம் எழுதப்பட்ட ஆவணங்களை கணினி வழியாக மாற்றியபோது அதில் ஏதேனும் விவரப்பிழை, விடுபட்டுள்ளவை போன்றவற்றையும் கவனிக்க வேண்டும். ஆள்மாறாட்டம், ஆவணங்களில் பெயர் மாற்றம் என நாம் அறியாத வகையிலும் வில்லங்கம் விஸ்வரூபம் எடுக்கலாம். எல்லா வகையிலும் நாம் நம்பிக்கையில்லாத் தன்மையோடு அணுகும்போதுதான் உண்மை கிடைக்கும்.

எங்கிருந்தோ வரும் யாரோ ஒருவர் நமது கனவை காவு வாங்கிச் செல்ல நாம் ஏன் அனுமதிக்க வேண்டும், இதற்குத்தான் இவ்வளவு முன் எச்சரிக்கைகளும்.

Saturday, September 28, 2013

'வெள்ளைச் சர்க்கரை’ தடைசெய்யப்பட வேண்டிய பொருள்

கூவாத, பறக்காத பிராய்லர் கோழிகளை உருவாக்குதல், கார்னெட் தாதுக்களைக் கழுவிக் களவாடிவிட்டு வெற்றுக் கடல் மண்ணை வீசுதல், கொழுப்பில்லா கூடுதல் புரதம் உள்ள பாலை, மரபணு மாற்றிய கால்நடையில் இருந்து கறப்பது என நவீன அறிவியலும் தொழில்நுட்பமும், 'வளர்ச்சி' என்ற பெயரில் இந்தப் புவியின் மீதும் பிற தாவர உயிரினங்களின் மீதும் நடத்தும் வன்முறை உச்சத்தில் இருக்கும் காலம் இது!

'இந்தப் பழம் ஏன் மேலே போகாமல் கீழே வருகிறது?' என்ற நியூட்டனின் சிந்தனையிலும் சரி, 'கறந்த பால் முலை புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா' என எழுதிய சிவவாக்கியரின் சிந்தனையிலும் சரி, அறிவியலே அடித்தளம். நியூட்டன் தொடங்கிய புள்ளிக்கு நியூகோமனும் ஜேம்ஸ் வாட்டும் வரைந்த கோலங்கள்தாம், நீராவி என்ஜினில் இருந்து தொழில் புரட்சி வரையிலான வளர்ச்சி!  

ஆனால், அதே 'வளர்ச்சி' என்ற பெயரில் தொழில்நுட்பம் கொண்டுவந்ததுதான் 'வெள்ளைச் சர்க்கரை'. உண்மையில் மதுவையும் புகையையும் போல தடைசெய்யப்பட வேண்டிய பொருள் இந்த வெள்ளைச் சர்க்கரை. ஆனால், இன்று சர்க்கரை, உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்தபடியாக உள்ளது. உலக சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியர்களை முதல் இடத்தில் தள்ளியதற்கும், பெருவாரியான பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற இடுப்பு வலிக்கும், இன்னும் பல வகையான கேன்சர் நோயின் வளர்ச்சிக்கும் வெள்ளைச் சர்க்கரை ஆற்றிய பங்கு அளப்பறியது.

நாம் இனிப்பு சாப்பிடாதவர் அல்ல. நிறையவே சாப்பிட்டிருக்கிறோம். தஞ்சை நாயக்க மன்னர் விஜய ராகவ நாயக்கர் எழுதிய 'இரகுனாதப்யுதய' நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிப்புப் பட்டியலைப் பாருங்கள். கஜ்ஜாயம், அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு (பாசந்தி), பன்னீர் பாயசம், சீரகப் பாயசம், குளிர் பாயசம், திரட்டுப் பால், சீகரணி, தேங்காய்ப் பால் என லாலா கடையில்கூட கிடைக்காத இனிப்புகள் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ளது. அந்த இனிப்புகள் அத்தனையும் அப்போது வெல்லத்திலும், பனைவெல்லத்திலும், தேனிலும்தான் செய்யப்பட்டிருந்தன. வெள்ளைச் சர்க்கரையில் அல்ல. எந்த வகையிலும் இந்த இயற்கையின் இனிப்புக்கு மாற்றாக வர இயலாத வெள்ளைச் சர்க்கரை, தொழில்நுட்ப உதவியால் ஒட்டுமொத்தமாகத் திணிக்கப்பட்டுவிட்டது.

தனக்குத் தேவையான சர்க்கரையை தினையில் இருந்தோ, அரிசியில் இருந்தோ, கிழங்கில் இருந்தோ, கீரையில் இருந்தோ நம் உடல் கிரகித்துக்கொள்ளும். தனியே வெள்ளைச் சர்க்கரை தேவையற்றது. ஆனால், இன்றைக்கு ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட நேரடியாகவோ மறைமுகமாகவோ தினசரி 30 முதல் 40 கிராம் வரை வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுகிறோம். கரும்பை, சர்க்கரை ஆலைக்கு மட்டுமே தர வேண்டும் என சட்டமிட்டு வெல்லத்தை ஒழித்து, வெள்ளைச் சர்க்கரை கோலோச்ச தொழில்நுட்பம் வழிவகுத்துவிட்டது. ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும், உண்பவர் உடலுக்கு நன்மையும் தரக்கூடிய வெல்லம் ஓரம் கட்டப்பட்டதற்கு, 'வெல்லம் சீக்கிரம் கெட்டுவிடும். நீர் உள்வாங்கும். தரமான உற்பத்தி இல்லை' என அச்சுபிச்சுக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. உண்மைக் காரணம் வெள்ளை சர்க்கரையின் பின்னணியில் உள்ள உணவு அரசியலும், ஆல்கஹால் அரசியலும்தான். இன்று இட்லிக்குப் பதிலாக சோள அவல் புகுத்தப்படுவதும், வடநாட்டு கோதுமைச் சப்பாத்தியைப் புறந்தள்ளி வெள்ளை பிரெட் வருவதும், கனிமச் செறிவான கல் உப்பை மறக்கடித்து, 'அயோடைஸ்டு சோடியம் குளோரைடு' எனும் ரசாயனத்தை 'சாப்பாட்டு உப்பு' எனத் திணிப்பதும் தொழில்நுட்ப அறிவியல் போர்வையில் உள் நுழையும் வணிகமே தவிர, வேறு என்ன?


'வளர்ச்சி' என்பது, இங்கே பரிணாமமாக இல்லாமல் வன்முறையாகத் திணிக்கப்படுகிறது. காப்புரிமைகளை கடைசிவரை காசாக்க,  மனிதம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் திறன் உருவாகாதபடி, நம் கல்வியை கொத்தடிமை, கோப்படிமை, கொள்கையடிமை என வடிவமைத்துவிட்டார்கள். 'இப்போ என்ன குறைச்சல்? எல்லாரும் சௌகரியமாத்தானே இருக்காங்க' என அன்று, 'பருத்தி வாங்க, மிளகு வாங்கத்தானே வாராங்க' என கிழக்கிந்தியக் கம்பெனியை வெள்ளேந்தியாக வரவேற்றது போல, இப்போதும் பேசச் செய்திருக்கிறது.

அன்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய 'வெள்ளை' இன்று நம் உணவுத் தட்டுகளை ஆக்கிரமித்துக் கொண்டது. கொஞ்சம் வெள்ளேந்திகள்; நிறைய வெள்ளைய(ர)டிமைகள்!

புகைப்படம் என்பது வெறும் புகைப்படம்தானா? - கோபிநாத்

டிரங்க் பெட்டியைத் திறந்தவுடன் கண்ணில் படுகிற மாதிரி தன் அம்மாவின் புகைப்படத்தை ஒட்டிவைத்திருப்பான் பொற்செழியன். பெட்டிகள் திறந்து மூடும் இரும்புச் சத்தங்கள், கடந்து போகிறவர்களின் தோள் இடிப்புகள், வார்டனின் 'சைலன்ஸ்' உத்தரவுகளுக்கு மத்தியில் 10 விநாடிகளேனும் தன் அம்மாவின் புகைப்படத்தை ஆழமான ஒரு பார்வை பார்க்கத் தவற மாட்டான். 'அந்த 10 விநாடிகள் செழியன் என்ன நினைத்துக்கொள்வான்?' என்றோர் எண்ணம் தினந்தோறும் எனக்குள் எழும். பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தின் சிறிய சைஸ் போட்டோ ஒன்று, செழியனின் பர்ஸில் இருக்கும். சாப்பிடுவதற்கு முன், இரவு உறங்கப் போகுமுன்... என அவ்வப்போது பர்ஸைத் திறந்து அம்மாவின் போட்டோவை செழியன் பார்த்துக்கொள்வான். ஐந்து வயது வரை தன்னோடு வாழ்ந்த அம்மாவின் நினைவாக செழியனிடம் இருக்கும் ஒரே விஷயம் அந்தப் புகைப்படங்கள் மட்டும்தான்!

புகைப்படங்கள் வெறும் காட்சிப் படிமங்கள் அல்ல. ஒவ்வொரு புகைப்படமும் வாழ்க்கையை, பகிரமுடியாத உணர்வை, வலியை, அருகாமையை, அன்பை, காதலை, இயலாமையை, குற்ற உணர்வை, காமத்தை, கோபத்தை, தவிப்பை அல்லது வேறு ஏதோ ஒன்றை மனதுக்குள் கொட்டிவிட்டுப் போகிறது. என் தாத்தா வீட்டின் கூடத்தில் காந்தி, நேரு, காமராஜர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்... என தேசத் தலைவர்களின் படங்கள் வரிசையாக இருக்கும். 'அவங்க எல்லாம் நம்ம சொந்தக்காரங்க' என்றுதான் என் கடைசித் தம்பி ரொம்ப நாள் சொல்லிக்கொண்டு இருந்தான்.

கல்யாண வீட்டில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் விரலால் கொம்பு வைத்து விளையாடுகிற புகைப்படம், ஒற்றை ரோஜாவின் அருகில் நின்று கொடைக்கானலில் தேனிலவு ஜோடிகள் எடுத்துக்கொள்கிற புகைப்படம், அரசியல் தலைவர்கள் நடந்துகொண்டே கை அசைப்பது போன்ற போஸ்டர் படங்கள், ஹோவென்று கொட்டுகிற அருவி நம் மீதும் சாரல் தெளிப்பது போல் நனைக்கிற படம், தாடி வைத்த சாமியார் பீடி குடிக்கும் காசி புகைப்படம்... என ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது! ஒவ்வொரு புகைப் படமும் ஒரு நாளை, ஒரு மணியை, ஒரு நிமிடத்தை, ஒரு நொடியை அதன் தன்மைக்கேற்ப தக்கவைத்துக்கொள்கிறது!

ன் அம்மா, பல்வேறு வகையான மீசைகளில் பல காலகட்டங்களில் எடுத்த அப்பாவின் போட்டோக்களைப் பத்திரமாக வைத்திருக்கிறார். ஒரு நாள் முழுக்க அது பற்றிச் சொல்லவும், கடந்தகால நினைவுகளில் கரைந்து போகவும் அவரால் முடியும். 'யே... உங்கப்பாவுக்கு 'மீசைக்காரன்'னுதான்டா பேரு. சும்மா மீசையை முறுக்கிவிட்டுக்கிட்டு செருவா வீதில வந்து இறங்குனார்னா...' என்று இளம்பருவத்து வெட்கத்துடன் பேச்சு தொடங்கி... 'கல்யாணத்துக்கு மாப்பிள்ளை மீசையை எடுத்துரணும்'னு உங்க தாத்தா சொன்னப்ப, உங்க அப்பாவுக்கு வந்துச்சு பாரு கோவம்...' என்பது வரை அந்த போட்டோ கதைகள் நீளும்.

பட்டுக்கோட்டை பக்கம் போனால், வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம் அவர்கள் வீட்டில் கடைசியாக நடந்த கல்யாண ஆல்பத்தைத்தான் முதலில் காட்டுவார்கள். அரை மணி நேரத்துக்குள் ஏகப்பட்ட உணர்வுகளைக் கொட்டித் தீர்க்க, அந்தக் கல்யாண ஆல்பத்துக்குள் அத்தனை விஷயங்கள் பொதிந்திருக்கும். 'இங்கே பாருங்க... சின்னக்கா மகன் எப்படிச் சிரிக்கிறான்!' - ஏழாவது போட்டோவில் சிரிக்கச் சிரிக்கப் பேசிய அக்கா, பதினைந்தாவது படத்தில் சமீபத்தில் செத்துப்போன பாட்டியைப் பார்த்தவுடன் குரல் கம்மி பேச்சு வராமல், 'இந்தா வந்துர்றேன்' என்று எழுந்து போகும். விருந்தாளிக்கு அது வெறும் ஆல்பம். அழுதுகொண்டு போகும் அக்காவுக்கு அவள் குடும்பத்தின், மனிதர்களின் மனதும் உணர்வுமாக கையில் இருக்கிற பொக்கிஷம் அந்த ஆல்பம்!

ஒரு சமூகம் தன் சிந்தனையில் நாகரிகம் அடைந்துகொண்டே வந்திருப்பதை, கல்வியில் உயர்ந்து நிற்பதை புகைப்படங்கள் உரக்கப் பேசுகின்றன. தாத்தா ஜம்மென்று உட்கார்ந் திருக்க, பாட்டி அவர் பின் பாவமாக நிற்கும் போட்டோ, சில வருடங்களுக்குப் பின் பாட்டி உட்கார்ந்திருக்க, தாத்தா பின் நிற்கும் படம்...  என இரண்டு படங்களையும் ஒரே வீட்டில் பார்க்க முடிகிறது. சோபாவில் மனைவி அமர்ந்திருக்க அதன் கைப்பிடியில் கணவர் அமர்ந்தபடியான இடைப்பட்ட காலத்து போட்டோ, பின்னாளில் கணவர் அமர்ந்திருக்க மனைவி கைப்பிடியில் அமர்ந்துகொண்டு கணவரின் தோள் மீது கை வைத்தபடி இருக்கும் கலர் போட்டோ... இவையெல்லாம் சமூக வரலாற்றுக்கு சாட்சிகளாக நிற்கும் படங்களே!

நம் அம்மாக்கள் அனைவரும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ஒரு போட்டோ உண்டு. அனைவரிடமும் அந்தப் பழைய போட்டோ ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். கூடை சேரில் குப்புறப் படுத்துக்கொண்டு தலையை மட்டும் திருப்பியபடி இருக்கும் அந்த போட்டோ, 30 வருடங்களுக்கு முன் குழந்தை போட்டோவுக்கான டிரேட் மார்க். அதை வைத்து யாராவது கிண்டல் செய்தால், அப்போதைக்குப் பிடிக்காதது போல நடந்துகொண்டாலும் எல்லோருக்கும் அந்த போட்டோ பிடித்துதான் இருக்கிறது.

செல்வமூர்த்தியின் அம்மா அவன் சின்னப் பையனாக 'சுச்சா' போன படத்தைக் காட்டி, 'சொன்ன பேச்சு கேக்கலைன்னா, இந்த போட்டோவை நாளைக்கு உனக்கு வரப்போறவகிட்ட காட்டிடுவேன்' என்று எட்டாம் வகுப்புப் படிக்கும் வரை மிரட்டுவார்களாம். இன்றைக்கு செல்வமூர்த்தியின் பிள்ளைகள் அந்தப் படத்தை வைத்துச் செல்லமாகக் கிண்டலடிக்கிறார்கள். 'அப்பா இதை ஃப்ரேம் போட்டு ஹால்ல மாட்டுவோம்ப்பா' என்று வம்பிழுக்கிற மகனை, அடிக்கத் துரத்துகிறான் செல்வமூர்த்தி.

சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில், அந்தக் காலத்து மெட்ராஸின் அழகிய படங்களை சுவர் முழுக்க ஒட்டி வைத்திருப்பார்கள். அங்கு சாப்பிடப் போகிறபோதெல்லாம் ராஜசேகர் மாதிரி, 'இது ஒரு பொன்மாலைப் பொழுது...' பாட்டைப் பாடிக்கொண்டு காலங்களில் கரைந்துவிடத் தோன்றும்.

பாலக்கட்டையில் உட்கார்ந்தபடி கரும்பு தின்கிற போட்டோ, டி.வி.எஸ். 50-யில் சாய்ந்தபடி துப்பட்டாவை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு நிற்கும் படம், அவள் கழுத்தை இவன் அணைத்தபடி ஆட்டோ ஃபோகஸில் எடுத்த போட்டோ, முக்கொம்பில் மாங்காய் பத்தையைச் சாப்பிடுகிற போட்டோ, மலைக்கோயில் வாசலில் பிள்ளையார் படம் வாங்குகிற போட்டோ... என தன் காதலின் அடையாளங்களாக இருந்த அத்தனை புகைப்படங்களையும், தன் காதலியின் திருமண தினத்தன்று தீயிட்டுக் கொளுத்தினான் நண்பன்.

'ஏன்டா..? அது பாட்டுக்கு இருந்துட்டுப் போவுது..!' என்று கேட்டதற்கு, 'இல்லைடா... இன்னைக்கு இது தொலையுதுன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டேன். நாளைக்கு நானே மனசு மாறிக் கோபப்பட்டா, இந்த போட்டாவால அந்தப் புள்ளைக்குப் பிரச்னை வந்துடக் கூடாது' என்றான். எரிந்துகொண்டு இருந்த போட்டோக்கள், 'அடிப்பாவி இப்படி ஒரு நல்ல மனசுக்காரனை விட்டுட்டியே' என்று கேட்டுக் கதறுவதுபோல இருந்தது எனக்கு!

ன்று ஒரு நாள், காபி ஷாப்பில் செய்தித் துறையில் பணிபுரியும் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தேன். உள்ளே வந்த கல்லூரி மாணவி ஒருவர், சே குவேரா படம் பதிக்கப்பட்ட சணல் பை ஒன்றை மாட்டியிருந்தார்.

'எங்க வாங்குனம்மா இதை?' என்று நண்பர் விசாரித்தார்.

'எங்க காலேஜ்ல எக்ஸிபிஷன் போட்டாங்க. நல்லா இருந்துச்சுன்னு வாங்கினேன்!'

'இவர் யார்னு தெரியுமா?'

'சரியா தெரியாது. ஒரு ரெவல்யூஷனிஸ்ட்னு தெரியும். ஹி இஸ் ரியலி மேக்கோ அண்ட் ஹாண்ட்ஸம். அதான் வாங்குனேன்' என்றார் அந்தப் பெண். சே குவேராவைப் பற்றி நண்பர் அந்தப் பெண்ணிடம் ஒன்றிரண்டு விஷயங்கள் சொன்னார். அந்தப் பெண்ணும் கேட்டுக்கொண்டார். அநேகமாக அந்தப் பெண்ணின் அறையில் இப்போது ஒரு சே குவேரா படம் இருக்கக்கூடும்.

ண்மையில் யாருமே புகைப்படங்களை வெறும் புகைப்படங்களாக மட்டுமே பார்ப்பதில்லை. அதற்கு ஒரு ஜீவனும் ஆன்மாவும் இருப்பதாக ஆழ்மனதில் நம்புகிறார்கள். அம்மா சேர்த்துவைத்திருக்கும் அப்பாவின் மீசைப் புகைப்படங்களில் தொடங்கி, இளைஞர்களின் ஃபேஸ்புக் போட்டோக்கள் வரை ஒவ்வொன்றும், நம் மனதின் அடி இடுக்குகளில் இருக்கும் நினைவுகளை எக்கணமும் தூசு தட்டுவதாகவே இருக்கிறது!

'அம்மா அடிச்சிட்டாங்க' என்று அழுது கொண்டே தாத்தாவிடம் போய்ச் சொல்லும் கதிரேசன் மகளிடம், 'சேட்டை பண்ணா அப்படித்தான்' என்று தாத்தாவும் ஏதோ ஒரு கோபத்தில் சொல்கிறார். தன் அழுகுரலைக் கேட்க ஆளில்லாத ஏக்கத்துடன் தேம்பித் தேம்பி அழுதபடியே அறைக்குள் சென்று தன் அப்பா கதிரேசனின் போட்டோவை எடுத்து கட்டிப்பிடித்தபடி அழுதுகொண்டே தூங்கிப் போகிறாள் ரஞ்சனி.

தந்தையின் படத்தைக் கட்டி அணைத்தபடி அழுது வீங்கிய முகத்தோடு தூங்கும் ரஞ்சனியைப் பார்த்த பிறகும் எப்படிச் சொல்ல முடியும்... 'புகைப்படம் என்பது வெறும் புகைப்படம்தான்' என்று?


Wednesday, September 25, 2013

டீச்சர் உங்களுக்கு எப்போ கல்யாணம்? - சரோஜா தேவி

டையாறிலுள்ள எங்கள் வீட்டு மாடியில் நின்று பார்த்தால், அந்தத் தெருவின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை நன்றாகத் தெரியும்.

அதோ... குனிந்த தலை நிமிராமல் அங்குமிங்கும் பார்க்காமல் நிதானமாக நடந்து வருகிறாளே ஒரு பெண்- அவளுடைய பெயர் அவள் வேலை பார்க்கும் இடம் - அது ரகசியமாக இருக்கட்டும். ஆனால், அவளது வாழ்க்கையின் ரகசியமான திருப்பத்தை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்காக அவளை அமர்த்தினோம். ஏழ்மையிலிருந்து ஒரு படி மேலே ஏறி நிற்கும் குடும்பத்துப் பெண். மாநிறம். சுமாரான அழகு. கலகலவென்று மனம்விட்டுப் பேசும் சுபாவம். இருபது வயது இருக்கும்.

குழந்தைகள் அவளை 'டீச்சர்... டீச்சர்' என்று அழைப்பதுபோல் நானும் 'டீச்சர்' என்றுதான் அழைப்பேன்.

ஒரு நாள் கேட்டேன்: 'டீச்சர்... நீங்கள் ஏன் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்?'

அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.  

'என்ன சிரிக்கிறீர்கள் டீச்சர்?'

அவள் என்னை அர்த்தத்தோடு பார்த்தாள். 'தேவி' என்று அழைத்தாள். அவள் என்னை அப்படித்தான் அழைப்பாள். 'தேவி! உங்களுக்கு அழகு இருக்கிறது, நிறைய பணமும், வசதியும், புகழும் இருக்கிறது. உங்களுக்கே இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும்பொழுது, அழகோ, பணமோ இல்லாத என்னை யார் கல்யாணம் செய்து கொள்ள முன்வருவார்கள்?' என்று கேட்டாள்.

அவள் கேள்வியில் என் மனம் நெகிழ்ந்துவிட்டது.

'டீச்சர்... உங்களுக்குப் பணம் இருந்தால் கல்யாணம் நடக்கும் அல்லவா?' என்று கேட்டேன்.

'பணம் இருந்தால் கல்யாணம் நடக்கும்.'

'சரி, வீட்டில் பெற்றோர்களிடம் சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள். நான் பணம் தருகிறேன்' என்றேன். டீச்சரின் முகம் பூவாக மலர்ந்துவிட்டது. என்னையே வியப்போடு பார்த்தாள்.

'உண்மைதான். டீச்சர்... கல்யாணத்துக்கு நான் பணம் தருகிறேன்' என்று தீர்மானமாகச் சொன்னபொழுது, ஒரு பெண்ணின் நல்வாழ்வுக்காக நான் செய்யப்போகும் உதவியை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

ஒரு வாரம் கழிந்தது. ஒரு 'இந்தி' படத்தில் நடிப்பதற்காக நான் புனாவுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்தப் பெண் வந்தாள். கல்யாணத் துக்கு அவள் தந்தை ஏற்பாடுசெய்து கொண்டிருப்பதாகச் சொன்னாள்.

'வெரிகுட்... நான் புனாவுக்குப் போய்விட்டு வந்ததும் பணம் தருகிறேன். இடையில் பணம் வேண்டுமென்றால்...?'

'வேண்டாம்... வேண்டாம். நீங்கள் வந்த பிறகே வாங்கிக்கொள்கிறேன்' என்று கூறிவிட்டாள் அவள்.

விதி, அப்போதுதான் அவள் வாழ்க்கையில் விளையாடத் தொடங்கியது. அதை அவளும் நானும் அறிந்தோமா என்ன?

புனாவில் நடந்த படப்பிடிப்பில் ஒருநாள் எனக்குத் தலையில் சரியான அடிபட்டு, காயமும் உண்டாகி விட்டது. மயக்கம், வலி. புண்ணும் புரையோடி விட்டது. சரியாகப் பேசக்கூட முடியாத நிலையில் படுத்தபடுக்கையாகச் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டேன். விஷயம் தெரிந்து பெங்களூர், மைசூரில் இருந்தெல்லாம் உறவினர்கள் வந்துவிட்டார்கள். போதும் போதாததற்கு சென்னை சினிமா உலகப் பட்டாளம் வேறு குழுமிவிட்டது. எப்போது பார்த்தாலும் கூட்டம், அமளிதுமளி.

ஆனால் நான்..? உள்ளமும் உடலும் சோர்வுற்றுப் படுத்த படுக்கையாகிவிட்டேன். யார் வருகிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்று ஒன்றுமே சரிவரத் தெரியாது.

இந்த நிலையில் அந்தப் பெண் வந்தாள். ஓரிரு நாட்கள் தயங்கித் தயங்கிப் பார்த்துவிட்டு கடைசியில் கல்யாண அழைப்பிதழை நீட்டினாள். அதைப் பார்த்துவிட்டு நான் என்ன பதில் சொன்னேன்? பணம் தருகிறேன் என்றேனா... இல்லை என்றேனா? வீட்டில் இருந்தவர்கள் என்ன சொன்னார்கள்? ஒன்றுமே எனக்குத் தெரியவில்லை.

இரண்டு மூன்று வாரம் கழிந்தது. எனக்கு உடல் நலமாகி படப்பிடிப்புக்குப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் டீச்சரைச் சந்தித்தேன்.

'டீச்சர்.. கல்யாணம் நடந்துவிட்டதா?' என்று ஆர்வத்தோடு கேட்டேன்.

'இல்லை' என்று பதில் வந்தது. 'மாப்பிள்ளைக்குப் பணம் தருவதாகச் சொல்லியிருந்தார் அப்பா. ஆனால் அதன்படி பணம் தர முடியாததால், கல்யாணமே நின்றுவிட்டது.' என்றாள் அவள்.

நான் கலங்கிப்போனேன். 'டீச்சர்... மறுபடியும் உடனே ஏற்பாடுசெய்யுங்கள். இப்போதே பணம் கொடுத்துவிடுகிறேன்' என்று பதறினேன்.

அதற்கு அவள் சொன்ன பதில்..?

'வேண்டாம் தேவி. பணத்துக்காகத்தான் என்னைத் திருமணம் செய்துகொள்ள முன்வருகிறார்கள் என்று நினைக்க நினைக்க, திருமணத்தின் மீதே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. நான் கல்யாணமே செய்து கொள்ளப்போவதில்லை.'

இதைச் சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள்.

நான் கொடுப்பதற்குத் தயாராக இருந்தேன். அவளும் வாங்கிக்கொள்ளச் சம்மதிருந்தாள். ஆனால், விதி அதைத் தடுத்துவிட்டதே!

மூன்று முதல் ஒன்பது வயது வரை. குழந்தை வளர்ப்பில் முக்கிய அம்சங்கள்.

கூட்டுக் குடும்பமாக இருந்தவரை குழந்தை வளர்ப்பு என்பது அத்தனை சிரமமாக இல்லை. ஆனால், இன்றைய நியூக்ளியர் ஃபேமிலிகளில், குழந்தையை வளர்க்கத் தெரியாமல் திணறும் அம்மாக்கள்தான் அநேகம். குறிப்பாக, மூன்று முதல் ஒன்பது வயது வரை. இந்த முக்கியமான தருணத்தில் குழந்தை வளர்ப்பில் கவனம் கொடுக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.

1 'காலையில எழுந்திருக்கவே மாட்டேங்குறான்...' என்பது பல அம்மாக்களின் புகார். குழந்தையின் தூக்கத்தில் ஓர் ஒழுங்கை கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் உறங்கும், எழும் நேரம் சரியாக இருக்கும். இரவு எட்டு மணிக்கெல்லாம் டி.வி, செல்போன், வீடியோ கேம்களுக்கு 'டாட்டா' சொல்லிவிட்டு, அதிகபட்சம் ஒன்பது மணிக்குள் குழந்தையை உறங்க வைத்துவிட வேண்டும். குழந்தைகள் உறங்கும் அறை நிசப்தமாக இருக்க வேண்டும். குறைந்தது எட்டு மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம். இதையெல்லாம் நீங்கள் சாத்தியப்படுத்திக் கொடுத்தால், காலையில் எழுவது அவர்களுக்கு சிரமமாக இருக்காது.

2 மதியம் தூங்குகிற குழந்தையாக இருந்தால், மதிய வேளையில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை மட்டுமே அவர்களை தூங்கவிடுங்கள். அதிக நேரம் தூங்கினால், இரவுத் தூக்கம் தாமதமாகும், சங்கிலித் தொடராக காலை எழுவதும் சிரமமாகும்.

3 பள்ளி செல்லும் குழந்தைகள், 'அவ தினமும் விதவிதமா சாப்பாடு கொண்டு வர்றா', 'என் ஃப்ரெண்ட் வீட்டுல கார் இருக்காம்' என்று, மற்றவர்களைப் பார்த்து தனக்கும் அது வேண்டும் என்று கேட்பது இயல்பே. 'அது அவங்க வீட்டோட சூழல், இது நம்ம வீட்டோட சூழல்' என்று அந்த வேறுபாடுகளையும், வாழ்க் கையின் யதார்த்தத்தையும் அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில், ஏற்றுக்கொள்ளும் வகையில் பேசுங்கள்.

4  பெரும்பாலான குழந்தைகள் காலையில் எழுந்ததும் பல் துலக்க, குளிக்க அடம்பிடிப்பார்கள். நீங்கள் எழுந்திருக்கும்போதே குழந்தையையும் எழுப்பி அவர்கள் முன் பல் துலக்குங்கள். அவர்களையும் அப்படிச் செய்ய பழக்குங்கள். நீங்களும் காலையிலேயே குளித்துவிடுங்கள். குழந்தைகள் பார்த்துக் கற்றுக்கொள்வதுதான் அதிகம். பழக் கங்கள்தான் பண்பாடாக மாறும் என் பதை நினைவில் வையுங்கள்.

5 குழந்தைகளுக்குப் படிக்கப் பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் முறையிலும் குறை இருக்கலாம் என்று அர்த்தம். எனவே கதை வடிவம், பட வடிவம், விடுகதை வடிவம் என்று படிப்பை சுவாரசியமாக்கி அவர்களுக்குப் பழக்குங்கள்.

6 'வீட்டுப் பாடம் செய்யவே மாட்டேங்கிறா...' என்பது பல அம்மாக்கள் சொல்லும் புகார். அட்டவணை போட்டு, இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம். அதாவது, பள்ளி விட்டு வந்ததும்... சாப்பிட இவ்வளவு நேரம், விளையாட இவ்வளவு நேரம், படிக்க இவ்வளவு நேரம், டி.வி பார்க்க இவ்வளவு நேரம் என்று பிரித்துக் கொடுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் அடம் செய்தாலும் விடாமல் பழக்கினால், ஒரே மாதத்தில் குழந்தை இந்த அட்டவணைக்குப் பழகிவிடும்.

7  'எப்பப் பார்த்தாலும் டி.வி பார்த்துட்டே இருக்கான். அந்த நேரத்துல நாம பேசுறது கூட அவன் காதுல விழறதில்ல...' - இந்த புலம்பல் உங்கள் வீட்டிலும் உண்டா..? நிச்சயமாக அதை மாற்றித்தான் ஆக வேண்டும். குழந்தையின் பெரும்பாலான பொழுதுகளைத் திருடிக்கொள்வது இந்த டி.வி-தான். அது எந்த விதத்திலும் நன்மை கிடையாது. எனவே, ஒரு நாளில் அரை மணி நேரம் மட்டுமே டி.வி பார்க்க வேண்டும் என்பதை, கண்டிப்புடன் நிறைவேற்றுங்கள். சேனலை லாக் செய்வது, மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்வது, கேபிளை டிஸ்கனெக்ட் செய்வது என்று, டி.வி அடிமைத்தனத்தில் இருந்து அவர்களை மீட்க முயலுங்கள்.

8. ரைம்ஸ், மேத்ஸ், லேங்குவேஜ் என சி.டி-க்களை வாங்கிக் கொடுத்து குழந்தைகளை புத்திசாலியாக்க நினைப்பது தவறான அணுகுமுறை. பதிவு செய்யப்பட்ட அந்த ஒலி, ஒளி நாடாவில் இருந்து ஒவ்வொரு முறையும் புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் குழந்தை கற்றுக்கொள்ள முடியாது. மாறாக, புத்தகங்களுக்கு அவர்களை நண்பர்களாக்குங்கள். அதற்காக மூன்று வயது குழந்தைக்கு ஐன்ஸ்டீன் புத்தகம் வேண்டாம். கலரிங் புத்தகங்கள், சொற்புதிர்கள், கணக்கு விளையாட்டுக்கள், நீதிபோதனைக் கதைகள் என்று அவரவர்களின் வயதுக்கேற்ப அறிமுகப்படுத்துங்கள் புத்தகங்களை.

9  பெரியவர்களுக்குத் தர வேண்டிய மரியாதை பற்றி இன்று பெரும்பாலான குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. இதை சரிசெய்ய, குழந்தைக்கு உறவுகளையும், அவர்களுக்கான முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லி, அவர்களுக்குத் தர வேண்டிய மரியாதையை உணர்த்துங்கள். வீட்டில் இருப்பவர்கள் ஒருவரிடம் ஒருவர் காட்டும் மரியாதை, குழந்தை அதை தானே கற்றுக்கொள்ள வழிவகுக்கும். மாறாக உங்கள் அம்மாவை, 'உனக்கு என்ன தெரியும்..?' என்று நீங்கள் அதட்டினால், தன் பாட்டியை அதுவும் அதட்டவே செய்யும்!

10 கையெழுத்து என்பது இந்தப் பருவத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயம். மூன்றாம் வகுப்புக்குள் அவர்களின் கையெழுத்தை சீர் செய்ய அவசியமானவற்றை செய்ய வேண்டும். தினமும் வீட்டில் நான்கு கோடிட்ட நோட்டில் எழுத வையுங்கள். அல்லது ஹேண்ட் ரைட்டிங் கிளாஸ் கூட அனுப்புங்கள். குழந்தையின் கையெழுத்தை சீர்படுத்த பணம் செலவழித்தல் தகும் என்பதை நினைவில் வையுங்கள்.

11 இப்போதுள்ள குழந்தைகளுக்கு ஓடி, ஆடி விளையாடுவது என்பதற்கான சாத்தியங்களே இல்லை. ஆனால், குழந்தையின் சீரான உடல், மன வளர்ச்சிக்கு மைதான விளையாட்டுகள் மிக மிக முக்கியம். குழு விளையாட்டு, யோகா என்று குழந்தைகளின் உடலுக்குத் தேவைப்படும் இயக்கத்தை அவர்களுக்குக் கொடுக்கத் தவறாதீர்கள்.

12 குழந்தையின் நட்பு வட்டம் மிக முக்கியம். சரியான நண்பர்கள், தோழிகளுடன் சேரும்போதுதான் உங்கள் குழந்தையின் எண்ணமும், தரமும் உயரும். எனவே, பள்ளி செல்ல அடம் செய்யும் குழந்தைகள், பிடிவாத, மூர்க்க குழந்தைகளுடன் நட்பாகி உங்கள் குழந்தையும் அதை பிரதிபலிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மனைவிக்கு மரியாதை!

மனைவிக்கு மரியாதை!
கணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை

செழித்து வளர்ந்த செடியை, வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டாலும், அது பூத்துக் குலுங்குவது போலத்தான்... திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வருகிற பெண்ணின் சிறப்பும்! குடும்பச் சூழ்நிலை, வருமானம், பிள்ளைகளின் எதிர்காலம், கணவனின் மகிழ்ச்சி என்று மற்றவர்களுக்காக தன் சொந்த ஆசைகளைக்கூட மறைத்து குடும்பத்தை உயர்த்தும் பெண்கள் இருப்பதால்தான், பல கணவன்மார்களின் வாழ்க்கை பில்டிங் ஸ்ட்ராங்காக இருக்கிறது.

மனைவியின் அன்பை கணவன்மார்களுக்கு உணர வைப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதியை 'மனைவி நல வேட்பு' நாளாக வேதாத்திரி மகரிஷியின் அறிவுத் திருக்கோயில் சார்பில் கொண்டாடுகிறார்கள். வேதாத்திரி மகரிஷி தன் மனைவி லோகாம்பாளை மதித்து போற்றி வந்ததால், லோகாம்பாளின் பிறந்த தினமான ஆகஸ்ட் 30-ல் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த முறை ராஜபாளையத்தில் நடந்த விழாவுக்கு, மூத்த பேராசிரியர் அருள்நிதி ஜி.டி.கணேசன் தலைமை தாங்கி நடத்தினார்.

''வேட்பு என்றால் விருப்பம் என்று அர்த்தம். மனைவியின் நலத்தில் கணவனுக்கு விருப்பம் இருக்கிறது... இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நிகழ்ச்சிக்கு வருகிற தம்பதிகளை கணவனும், மனைவியும் முகம் பார்த்து எதிரெதிரே அமரும் படி உட்கார வைப்போம். கணவனின் இடது கை மீது மனைவியின் வலது கையையும், வலது கையின் மீது இடது கையையும் வைத்து, இருவரும் கண்ணோடு கண் நேர் கொண்டு பார்க்கச் சொல்வோம். இதன் நோக்கம்... கைகளின் மூலம் இருவரின் உயிரும் ஆத்மார்த்தமாக கலந்து, கண்கள் வழியாக இருவரும் தங்கள் காதலைப் பரிமாறிக் கொள்வார்கள் என்பதே. அடுத்ததாக, 'பூவைப் போல மென்மையான நீ செல்லும் இடமெல்லாம் மணக்கும்' என்பதை உணர்த்தும் விதமாக, மனைவிக்கு கணவன் பூ கொடுப்பார். பதிலுக்கு, 'இத்தனை அன்பான உங்களால்தான் என் வாழ்க்கை இனிக்கிறது' என்பதை அறிவிக்கும் விதமாக கணவனுக்கு பழம் கொடுப்பார் மனைவி. இறுதியாக, கணவன் தன் மனைவியை பூரணமாக ஆசீர்வதிப்பதோடு நிகழ்ச்சி நிறைவடையும்'' என்று நமக்கு விளக்கிய ஜி.டி கணேசன், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 55 ஜோடிகளிடமும் மனைவியின் மாண்பு, விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்தல் போன்றவற்றைப் பற்றி எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில தம்பதிகளிடம் பேசினோம்.

டி.ஏ.சங்காராஜா - எஸ்.மகாலட்சுமி: ''கல்யாணம் முடிஞ்ச இந்த 47 வருஷத்துல, எல்லா விஷயத்திலேயும் நான்தான் என் கணவருக்கு முன்னுரிமை கொடுத்துட்டு இருந்தேன். ஆனா, இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதுல இருந்து அவர் சுத்தமா மாறி போயிருக்கார். எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லி, என்னோட கருத்தையும் கேட்டுத்தான் செய்றார். இத்தனை வருஷம் கழிச்சு என்னை இவர் மதிக்கிறதுல நிச்சயம் மனசு நிறைஞ்சுதான் போயிருக்கு. இதை எங்களோட பொன்விழா கிஃப்டாதான் நான் நினைக்கிறேன்''.

ரவீந்திரன் - தனலட்சுமி: ''என் கணவர் 'வியட்நாம் வீடு' படத்துல வர்ற பத்மநாபன் மாதிரி எப்போவும் விறைப்பாதான் நடந்துக்குவார். அவரோட கேரக்டர் எனக்கு பழகினதுனால அதுக்கேற்ப நான் என்னை பழக்கிக்கிட் டேன். எனக்கு மகரிஷியைப் பிடிக்கும்ங்கிறது னால இருபது வருஷமா இந்த நிகழ்ச்சிக்கு நான் மட்டும் தனியாத்தான் போய்க்கிட்டு இருந்தேன். நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு நான் அவர்கிட்ட சொன்ன விஷயங்களைக் கேட்டு ஆச்சர்யப்பட்டவர், இந்த வருஷம் என்கூட வர்றேனு சொன்னதோட இல்லாம, வந்து கலந்துக்கிடவும் செஞ்சார். அதுக்குப் பிறகு இவர் கிட்ட நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறதை என்னால கண்டுக்கிட முடியுது. பாசத்தைக் கொட்டறார். இந்த பாசத்துக்காகத்தான் இத்தனை நாளா ஏங்கிட்டு இருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு''.

ரமேஷ் - வீரஜென்னி தம்பதி: ''என் கணவருக்கு பேங்க்ல வேலை. எப்பவுமே ரொம்ப பிஸியா இருப்பாரு. ஒரு அவசரத்துக்கு போன் பண்ணினாலும் எடுக்க மாட்டாரு. அப்படியே எடுத்தாலும் வேக வேகமா பேசிட்டு வெச்சிடுவாரு. அப்போல்லாம் மன சுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா, இந்த நிகழ்ச்சிக்குப் போயிட்டு வந்த பிறகு, குடும்ப விஷயத்தை பேச அர்ஜென்ட்டா போன் பண்ணினேன். போனை எடுத்தவுடனே 'என்னம்மா... சொல்லுடா, சாப்பிட்டியா'ன்னு இவரு கேட்டதுல குழம்பி, வேற யாருக்காவது போன் பண்ணிட்டோமோனு ஒரு நிமிஷம் தடுமாறி, அப்புறம் சந்தோஷத்துல அழுதுட்டேன்''.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட    கணவன்மார்களிடம் பேசினோம். ''ரொம்ப அற்புதமான நிகழ்ச்சி. என் மனைவியோட சில மணி நேரம் மனசு விட்டு பேச, பார்க்க முடிஞ்சது. நிகழ்ச்சிக்குப் போனதுல இருந்து, இதுக்கு முன்னாடி இத்தனை வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டோம்னு தோணினாலும்... இனி வரப்போகிற வருஷங்கள் எங்களுக்குள்ள நல்ல அன்பை, காதலை, பிணைப்பை உருவாக்கும்னு அடிச்சு சொல்வோம்'' என்று வார்த்தைகளில் நெகிழ்ந்து போனார்கள்.

Tuesday, September 24, 2013

காலை எழுந்தவுடன் காபி... மாலை முழுவதும் டீ!

காலை எழுந்தவுடன் காபி... மாலை முழுவதும் டீ! 

 

காபியின் நல்ல குணங்களைப் பற்றி பார்த்தோம். http://vasukimahal.blogspot.in/2013/09/blog-post_10.html காபிக்கு பல நூற்றாண்டுகள் முந்தைய பரம்பரையைச் சேர்ந்த டீயைப் பற்றி இப்போது பார்ப்போம்.

 

உலகில் மிக அதிகம் பேர் அருந்தும் பானம், டீதான். இதில், பல வகைகள் இருந்தாலும்... மூன்றுதான் முக்கியம். கறுப்பு டீ (Black Tea), பச்சை டீ (Green Tea) மற்றும் வெள்ளை டீ (White Tea). இந்த மூன்றுமே ஒரே செடியில் விளையும் இலைகள்தான். அந்த இலைகளை நாம் என்ன செய்கிறோம் என்பதை வைத்தே டீயின் நிறம் மாறுகிறது. சற்று வெள்ளி நுனிகளையுடைய இளம் இலைகளைப் பறித்து, எவ்வித பதனிடு முறைகளும் இன்றி, வெறுமனே நிழலில் உலர்த்திப் பொடி செய்யும் டீ... வெள்ளை டீ. இதில் கேஃபின் குறைவாகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மிக அதிகமாகவும் இருக்கும். வெள்ளை டீ என்று பெயர் இருந்தாலும், கொதிக்க வைத்தால், சற்று மஞ்சள் நிற திரவமாகவே இருக்கும். விலை மிக அதிகமான இந்த டீ, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது.

 

பச்சை டீதான் மிகவும் பிரபலமான டீ. முக்கியமாக எங்களைப் போன்ற டாக்டர்கள்தான் இதை மிகவும் விளம்பரப்படுத்த உதவியவர்கள். டீ இலைகளை நீராவியில் கொதிக்க வைத்து, உலர வைத்து, பின்னர் பொடி செய்தால் கிடைப்பது பச்சை டீ.

 

பெரும்பாலானோர் குடிக்கும் டீ, கறுப்பு டீதான். உலர வைத்த இலைகளை நொதித்தல் முறையில் பதனிட்டு பொடி செய்வதே இந்த முறை. இதில்தான் அதிக கேஃபினும் குறைவான ஆன்டி - ஆக்ஸிடன்ட்ஸும் இருக்கும். ஆனாலும், மருத்துவ குணங்களில் இதுவும் சளைத்ததல்ல.

 

 

பொதுவாக டீயில் இருக்கும் கேஃபின் அளவு காபியில் உள்ளதைவிட பாதிதான். ஒரு கப் காபியில் 80 மி.கி கேஃபின் உண்டு. இதுவே ஒரு கப் கறுப்பு டீயில் 40 மி.கி; பச்சை டீயில் 25 மி.கி; வெள்ளை டீயில் 15 மி.கி-தான் (கேஃபினின் நல்ல/கெட்ட குணங்களை நாம் ஏற்கெனவே விவாதித்துவிட்டோம்).

 

டீயின் அற்புத குணங்களுக்கு அதில் உள்ள சில அரிய ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்தான் காரணம். அவற்றில் ஈஜிஸிஜி (EGCG) மிக முக்கியமானது. இந்த ஈஜிஸிஜி-க்கு பல வகை புற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு - குறிப்பாக பெண்களின் மார்பகப் புற்றுநோய் மற்றும் முட்டை - சினைப்பை புற்றுநோய். இவை தவிர வாய், இரைப்பை, குடல், கணையம், ஈரல், நுரையீரல், தோல் போன்ற உறுப்புகளின் புற்றுநோய்களும் இந்த டீக்கு அடங்கும். நுரையீரல் புற்றுநோய் தடுக்கப்படும் என்பது தவிர, சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்காமல் பாதுகாக்கும் என்றும், புற்றுநோய்களுக்குத் தரப்படும் கதிர்வீச்சு சிகிச்சையிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஈரல் புற்றுநோயைத் தடுப்பதோடு, மதுவினால் விளையும் ஈரல் பாதிப்புகளையும் டீ கட்டுப்படுத்த வல்லது.

அப்படியானால், மதுவுக்கு அடிமையானவர்களும் சிகரெட் புகைப்பவர்களும் டீ குடிப்பது அவசியம்தானே?

 

ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்க முடியும் என்றும், அதனால் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு, பக்கவாதம் முதலிய வியாதிகளைத் தடுக்க முடியும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

 

காபியைப் போலவே, முதியவர்களைத் தாக்கும் மூளை - நரம்பு பாதிப்புகளான அல்ஸைமர் வியாதியையும், பார்க்கின்ஸன் வியாதியையும் டீயால் கட்டுப்படுத்த முடியும். 'மெட்டபாலிக் சிண்ட்ரோம்' என்று அழைக்கப்படும் நோய்க்கூட்டு, சர்க்கரை நோயின் முன்னோடி என்று முன்பு குறிப்பிட்டோம். இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் டீக்கு உண்டு. அதனால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும் என்பதும் இனிப்பான செய்திதானே? சர்க்கரை நோயினால் கண்ணில் ஏற்படும் புரை நோயும் டீ சாப்பிடுவதால் தடுக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.

 

டீயால் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்பது ஒரு முக்கிய செய்தி. குறிப்பாக, உடல் பருமனைக் குறைக்கும் வைத்திய முறைகளில் பச்சை டீக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தினமும் 4 - 6 கப்கள் பச்சை டீ குடித்தால்... உடல் எடை குறையும் என்கிறார்கள்.

 

இவ்வளவு நல்ல குணங்களை உடைய டீக்கு சில கெட்ட குணங்களும் இருக்கும்தானே..?

டீ செடிக்கு, மண்ணிலிருக்கும் ஃபுளூரைட் மற்றும் அலுமினியம் ஆகிய தாதுக்களை உறிஞ்சும் சக்தி மற்ற தாவரங்களைவிட மிக அதிகம். இந்தச் செடியின் பழைய, முற்றிய இலைகளில் ஃபுளூரைட் - அலுமினியம் அதிகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இவற்றை பருகினால் நம் எலும்புகளில் ஃபுளூரைட் - அலுமினியம் தாதுக்களின் தாக்கம் அதிகமாகி, எலும்புச் சிதைவு நோய் ஏற்படும் ஆபத்து உண்டு. டீ இலைகளைக் கைகளால் பறிக்கும் வழக்கம் உள்ள நம் ஊரில் இந்தப் பிரச்னை வராது. ஏனென்றால், இளம் தளிர் இலைகளையே பெண்கள் பறிப்பது வழக்கம். முற்றிய இலைகளைப் பறிப்பதில்லை. ஆனால், இயந்திரங்களையே பயன்படுத்தும் பெரிய பண்ணைகளில் இது சாத்தியமில்லை. நீங்கள் குடிக்கும் டீ எந்த இலையில் கிடைத்தது என்று எப்படித் தெரியும்?

 

டீ, சில மரபணு மாற்றங்களை உண்டு பண்ண முடியும் என்பதால் கருவில் வளரும் சிசுக்களுக்கு அவ்வளவு நல்லதல்ல. ஆகவே, கர்ப்பிணிப் பெண்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு காபியைவிட, டீ நல்லது என்றாலும், 2 கப் டீக்கு மேல் அருந்த வேண்டாம்.

 

காபியைச் சூடாக சுவைத்தால் நல்லது. ஆனால், டீயை மிகவும் சூடாகச் சுவைத்தால்... உணவுக் குழாயில் புற்றுநோய் வரலாம். ஆகவே, டீயை சற்று ஆறிய பிறகே குடிக்க வேண்டும்.


அதெல்லாம் சரி - நீங்கள் குடிக்கும் டீ உண்மையில் டீதானா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள். அண்மையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாதலங்களில் நடந்த அதிரடி சோதனைகளில், பெரும்பாலான கடைகளில் போலி டீத்தூள் விற்பனையான செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்தானே? .கே... காபி, டீ இரண்டில் எது நல்லது என்று உலகளவில் பட்டிமன்ற ரீதியில் விவாதித்து வருகிறார்கள். இருதரப்பு வாதங்களையும் உங்கள் முன் வைத்தேன். இப்போது நடுவர்போல் ஒரு தீர்ப்புச் சொல்கிறேன். காபி, டீ இரண்டுமே நல்லதுதான். பொதுவாக ஆண்களுக்கு காபியும்... பெண்களுக்கு டீயும் உகந்தது. காலையில் எழுந்ததும் 2 தடவை காபி அருந்துங்கள். பிறகு மாலை வரை 2 - 4 கப் டீ அருந்துங்கள்!