Saturday, June 28, 2014

இது ஒரு பழந்தமிழ் விடுகதை



'மரம் அரைத்து, மரம் பூசி, மரம் ஏறிச் சென்றவன், மூன்று பேர், இரண்டு கால்களால் நடந்து சென்றதைப் பார்த்ததாகக் கூறினான்...'

இது ஒரு பழந்தமிழ் விடுகதை.

விடை புரிகிறதா? கொஞ்சம் யோசியுங்கள். புரியாவிட்டால், தொடர்ந்து படியுங்கள்.

மரம் அரைத்து - சந்தன மரத்தை அரைத்து, மரம் பூசி - சந்தனத்தை உடம்பெல்லாம் பூசி, மரம் ஏறி - பாதரட்சை கட்டைகளை போட்டுக் கொண்டு நடந்து சென்ற ஒருவன், மூன்று பேர் இரண்டு கால்களில் சென்றது என்று குறிப்பிட்டது: ஒரு தாய், இடுப்பில் ஒரு கைக் குழந்தையுடனும், வயிற்றில் (நிறை கர்ப்பமாக) ஒரு குழந்தையுடனும் சென்றதை!