Wednesday, April 6, 2016

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம்.

 


எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம்.! ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்..!

மேசம் ;-
ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்..பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.

ரிசபம்;-
ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்....

மிதுனம்;-
ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க..லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க...

கடகம் ;-
ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம் எல்லா உதவியும் கிடைக்கும்..

சிம்ம ராசி;-
சிம்ம ராசிக்காரங்கக்கிட்ட பொறுமையா பேசனும்..படபடன்னு பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க..நேர்மையா பேசலைன்னா கட்டம் கட்டிடுவாங்க...

கன்னி ;-
ராசிக்காரங்க நட்பை முறிச்சிக்க கூடாது அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு அதுவே உத்திரம் கன்னின்னா கொஞ்சம் எச்சரிக்கையா பார்த்து பேசுங்க...

துலாம்;-
ராசின்னா ஜாலியா பேசலாம்..சுவாதி கம்பீரமா நடந்துக்குவாங்க..கொஞ்சம் கவனமா இருங்க.உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்ருவாங்க

விருச்சிகம் ;-
அன்பா அனுசுரனையா பேசலாம்..கொஞ்சம் சால்ட்டா கிண்டலடிச்சா நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க..அன்புல தென்றல்..கோபத்துல சுனாமி..

தனுசு ;-
ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம்,..நாலு வார்த்தை பாராட்டுங்க...அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின் குணம்...அர்ஜுனன் ..கிருஷ்ணர் மீது வைத்திருந்தது சாதாரண அன்பு இல்லை..அந்த அன்புக்குத்தான் பகவானே மயங்கி கிடந்தார்..தேரோட்டியாக வந்தார்...வில்லுக்கு அர்ஜுனன் தனுசு ராசி.

மகரம் ராசி;-
மகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க..அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது.கடுமையான உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.

கும்பம் ;-
.அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க..உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க...

மீனம்;-
அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க..மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம்..