Sunday, May 8, 2016

ஒரு தந்தை பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.
அவர் தன் மகனுக்கு அறிவுரை
சொல்லவில்லை...
பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய
கடிதங்களின் சில பகுதிகள்.

👉 தோல்வியை ஏற்றுக்கொள்ளவும்,
வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

👉 பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்...

👉 வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன்,
பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை
ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்...

👉 பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது
கண்ணியம் என்று அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள்...

👉 சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச்
சொல்லுங்கள்.

👉 மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,
உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து
கொள்ளக் கற்றுக் கொடுங்கள்...

👉 குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

👉 அளவுக்கு அதிகமாய் இனிமையாகப்
பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்...

👉 தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்...!