Friday, August 19, 2016

மனைவியை மதிப்போம் மகிழ்வுடன் வாழ்வோம்

 
மரணம் வரை மனைவி


●ஓர் நாள் இரவு நேரத்தில் 
ஒரு ஏழை விவசாயி
தன் வேலைகளை எல்லாம் 
முடித்து விட்டு 
உறங்கிக் கொண்டிருந்தான்.. 

●அப்போது அவன் கனவில் 
கையில் கரும்பலகையுடன்
கடவுள் வந்தார்.. 

●"இந்த கரும்பலகையில், 
உனக்கு தெரிந்த முப்பது
உறவுமுறைகளின் 
பெயர்களை எழுது" என்றார்.. 

●அந்த விவசாயும், 
"அப்பா, அம்மா , 
தாத்தா , பாட்டி ,
மனைவி , மகன் , மகள் , 
அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி , 
சித்தப்பா , சித்தி , மாமா , அத்தை , 
காதலி , நண்பன்" என 
முப்பது பேர் பெயரை எழுதினான்.. 

●அப்பொழுது கடவுள், 
"கண்டிப்பாக இதில் நீ
இரண்டு பேர் பெயரை 
அழிக்க வேண்டும்., 
நீ யாரை இழக்க முடியும் 
என்று நினைக்கிறாயோ, 
அந்தப் பெயரை அழி" என்றார்.. 

●சற்று யோசித்த விவசாயி, 
காதலி , நண்பன் என 
இரண்டு பேர் பெயரை அழித்தான்.. 

●கடவுள் மறுபடியும், 
"இன்னும் இரண்டு பேர் 
பெயரை அழி" என்றார்.. 

●விவசாயும்
கொஞ்ச நேரத்தில், 
"மாமா , அத்தை" என
இரண்டு பேர் பெயரை அழித்தான்.. 

●விவசாயி இப்படியே, 
இரண்டு இரண்டு பேர்
பெயராக அழித்தான்..

●கடைசியாக 
அப்பா , அம்மா , 
மனைவி , மகன் , மகள் என 
இவர்கள் பெயர் மட்டுமே இருந்தது.. 

●கடவுள், 
"இதிலிருந்தும் இரண்டு பேர் பெயரை 
நீக்க வேண்டும்., 
நீ யார் பெயரை நீக்குவாய்?" என்றார்.. 

●விவசாயி வருத்தத்துடன் 
சிறிது நேரம் கழித்து, 
அப்பா , அம்மா 
பெயரை அழித்தான்.. 

●கடவுள் மீண்டும், 
"இன்னும் இரண்டு பேர் பெயரை 
அழிக்க வேண்டும்" என்றார்..

●கடவுளுக்கு சற்று 
எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.. 
"அடுத்ததாக இவன் யார் பெயரை 
அழிக்கப்போகிறான்?" என்று.. 

●அப்போது விவசாயி, 
மிகுந்த சோகத்துடனும் 
மன வேதனையுடனும்
மகன் , மகள் பெயரை அழித்தான்..

●கடைசியாக கரும்பலகையில், 
"மனைவி" பெயர் மட்டும் இருந்தது.. 

●கடவுள் ஆச்சரியமுடனும்
ஆவலுடனும் கேட்டார்..

●"மகன், மகள் பெயரை அழித்து விட்டு 
எதற்காக மனைவி பெயரை 
அழிக்கவில்லை?" என்று.. 

●அதற்கு விவசாயி, 
"மகள் எப்படியும் 
இன்னொரு வீட்டுக்கு 
வாழப் போய் விடுவாள்.. 

●மகன், 
அவனும் அவனுடைய 
மனைவி குழந்தை என வாழ்வான்.. 

●கடைசி காலம் வரை 
என்னோடு வாழக் கூடியவள் 
#என்_மனைவி மட்டும் தான்" என்றான்.. 

●விவசாயின் பதிலைக் கேட்டு 
வியந்து போன கடவுள், 
அவன் வேண்டிய வரத்தையெல்லாம்
கொடுத்துவிட்டு சென்றாராம்.. 


[ நம்முடைய 
வாழ்க்கைத் துணையாக
நாம் இறக்கும் வரை 
நம்முடன் வரக்கூடிய
நம்மோடு வாழக்கூடிய🏻
ஒரே உறவு, 
மனைவி மட்டும் தான்.. 

*மனைவியை மதிப்போம் 
மகிழ்வுடன் வாழ்வோம்.... ]