Thursday, August 4, 2016

அழகான கற்றல் எது ??

அழகான கற்றல் எது ??

ஒரு முறை ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அவர்கள் பெண்கள் பள்ளி யின் விழா ஒன்றில் கலந்து கொண்டார்..

விழா முடிந்ததும் வழமை போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடந்தது.

அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்த தருணம்.

"ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.?"
இந்த கேள்வியை மாணவிகளிடையே அப்துல் கலாம் அவர்கள் முன் வைத்தார்.

ஒரு மாணவி "அங்கு வந்திருந்தவர்களில் அவர்தான் அழகாக இருந்தார்" என்கிறாள்..

அம்மாணவியின் பதிலில் கலாம் அவர்களுக்குத் திருப்தி இல்லை..
அடுத்த மாணவி "அங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு ஐஸ்வர்யா ராய் அறிவுப் பூர்வமாக சிறப்பான ஒரு பதிலைச் சொன்னார்"..

அதிலும் அவருக்குச் சம்மதமில்லை.. பலரும் பல கருத்துகளைப் பகிர்ந்தார்கள்.

இப்படியே போய்க் கொண்டு இருக்க, அரங்கமே புரிபடாத ஒரு அமைதியில் இருக்கிறது..

ஆசிரியர் உட்பட அத்தனை பேருக்கும் குழப்பமான குழப்பம்..

ஒரு ஆறாம் வகுப்பு பயிலும் சிறுமி எழுகிறாள் .அமைதியாக உரத்த குரலில் தன்னம்பிகையுடன் சொல்கிறாள் 

"ஏனென்றால் அந்த அழகிப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, அதனால்தான்".. 

அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது..

ஆனால் அங்கே ஒரே ஒரு கைதட்டல் ஓசை மட்டும் தனியாகக் கேட்கிறது..

அது கலாம் அவர்கள். தான்.

" நல்லது தேவதையே! இதுதான் உண்மையான பதில்..

அடுத்தவர்கள் யார் நம் அழகை நிர்ணயம் செய்வதற்கு..
அதற்கு முன் நம்மை நாமே அழகு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.?..

கனிவான அன்பும், தளறாத நம்பிக்கையும், உயர்வான எண்ணமும் கொண்ட நாம் எல்லாருமே அழகுதானே..

அந்த நம்பிக்கை தானே அழகு" என்கிறார்..

அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாகியது. மாணாக்கரின் மனதில் இந்த நம்பிக்கையை விதைத்தாலே போதும். அவர்களின் கற்றல் அழகாகி விடும் தானே ?/