Sunday, September 18, 2016

யாரெல்லாம் சுகவாசி என்றால்,

யாரெல்லாம் சுகவாசி என்றால், 

சிரித்து மகிழ்ந்து வாழ்பவன், 
அதிகாலையில் எழுபவன், 
இயற்கை உணவுகளை உண்பவன், 
முளை கட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துபவன் சுகவாசி. 
அத்துடன், மண்பானைச் சமையலை உண்பவன், 
உணவை நன்கு மென்று உண்பவன், 
உணவில் பாகற்காய், சுண்டைக்காய் மற்றும் அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன், குளிர் பானங்களை அதிகம் உபயோகிக்காதவன், 
மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி.
மேலும், கவலைப்படாத மனிதன், 
நாவடக்கம் உடையவன், 
படுத்தவுடன் தூங்குகிறவன், 
தினம் ஒரு மணி நேரம் மவுனம் அனுசரிப்பவன், 
கோபம் இல்லாமல், நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி!
கற்பு நெறி தவறாது வாழ்பவர், 
மன்னிக்கிறவன், 
மன்னிப்பு கேட்கிறவன், 
ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன், 
வளையாத முதுகுத்தண்டுடன், நிமிர்ந்து உட்கார முடிந்தவன், 
இடது பக்கமாக படுத்து, காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி!
தூங்கி எழுந்ததும் காலை, இரண்டு டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன், 
கால முறையறிந்து உண்பவன், 
வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன், 
10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணாநோன்பு இருப்பவன் 
ஆகியோரே சுகவாசிகள்.

எந்த வீட்டில் பிரிட்ஜ் இல்லையோ, அந்த வீட்டனரும் சுகவாசிகள் தாம்!

'ஆரோக்கிய வாழ்விற்கு...' நூலிலிருந்து