Saturday, February 11, 2017

உங்கள் மொபைலிலேயே அழகாய் புகைப்படம் எடுக்க 7 டிப்ஸ்!

ஒரு நல்ல புகைப்படம் எடுத்து அதைப் பார்த்து மகிழ ஆசையா?  டிஎஸ்எல்ஆர் கேமரா இல்லையா? உண்மையாக நாம வாழ்க்கைல சந்திக்கிற நிறைய சந்தர்பங்களை டிஎஸ்எல்ஆர் வெச்சு எடுக்க முடியாது. ஆனா இந்த மொபைல்போன் அந்த தருணத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் அதுவே பார்க்க கொஞ்சம் நல்ல இருந்தா...த நேம் இஸ் மொபைல் போட்டோகிராபி. உங்க மைண்ட் வாய்ஸ் கேட்டுடுச்சு.. "தம்பி..   கொஞ்சம் ஐடியாஸ்.."  அதானே?

1.எப்பொழுதும் தயாராக இருங்கள்:

Photography

உங்கள் மொபைலில் கேமராவை உடனே ஓபன் செய்யும் விதமாக ஷார்ட்கட் வைத்து கொள்ளுங்கள். நல்ல தருணங்களை மிக சுலபமாக மிஸ் செய்ய வாய்ப்புண்டு! ஒரு காட்சியை எடுக்கலாம், எடுக்க வேண்டாம் என்று யோசிக்கும் தருவாயில் அது நம்மைக் கடந்து சென்றுவிடும். ஆகையால் கிளிக் செய்ய ஒரு போதும் இரண்டாவது எண்ணம் வேண்டாம். பின் மொபைலை எப்பொழுதும் சார்ஜ் செய்ய மறக்க வேண்டாம்.  லென்ஸ்யும் பளிச்சென வைத்து கொள்ளுங்கள்.

2. உங்கள் மொபைலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

உங்கள் மொபைல் கேமராவின் சாதக பாதகங்களை அறிந்து வைத்து கொள்ளுங்கள்.உதாரணத்துக்கு சில மொபைல்போன் கேமரா இரவு நேர போட்டோகளுக்கு சரி வராது என்றால் பகல் நேரத்தில் மட்டும் புகைப்படம் எடுக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெளிச்சம் தான் போட்டோகிராபியின் முக்கிய அம்சம்.. இருந்தாலும் சில காட்சியமைப்புகள் அதை உடைத்துத் தள்ளும்.  

3. ஒரே விதமான ஸ்டைலில் சிக்க வேண்டாம்:

மொபைல் போட்டோகிராபி

நிறைய பேர் ஒரே விதமான புகைப்படங்களை எடுப்பதை பார்த்து இருப்போம். படத்தின் நிறத்தில்கூட மாற்றமிருக்காது.  அந்தத்  தவறை ஒரு போதும் நீங்கள் செய்ய வேண்டாம்.யார் கூறியது உங்களுக்கு லேண்ட் ஸ்கேப் போட்டோகிராபிதான் நன்றாக வரும் என்று? அதைத் தகர்த்து எறியுங்கள்.புது விதமான ஆங்கிள்களை முயற்சி செய்து பார்க்கவும். உதாரணமாக இன்செக்ட் வ்யூ.. அதாவது ஒரு பூச்சி நம்மை எப்படி எங்கு இருந்து பார்க்குமோ, அங்கு கேமராவை வைப்பது. இப்படி நிறைய ஆங்கிள்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு டிஎஸ்எல்ஆர் கேமரா போக முடியாத இடத்திற்கு நம்மை மொபைல் கேமரா கொண்டு செல்லும் என்பதை மறக்க வேண்டாம்.

4. டிஜிட்டல் ஜும்(Zoom) செய்ய வேண்டாம்:

எப்பொழுதும் தவறியேனும் போட்டோ எடுக்கும் பொழுது டிஜிட்டல் ஜும்(Zoom) செய்ய வேண்டாம். இது உங்களது போட்டோவின்  தரத்தை முழுமையாக பாதிக்கும்.நம்மிடம் இருப்பது மொபைல் போன்தான் டிஎஸ்எல்ஆர் கேமரா இல்லை, ஆகையால் முடிந்தவரை... நீங்கள் முன்னே சென்று ஃபோட்டோ எடுங்கள்.. ஃபோட்டோகிராஃபியில் முன்னே செல்வீர்கள்

5.மேக் இட் சிம்பிள்:

மொபைல் ஃபோட்டோகிராஃப்பி


நீங்கள் செய்யும் ஒவ்வொரு காட்சியமைப்பையும் சிம்பிளாக வைத்து கொள்ளுங்கள். வெற்றிடங்களைப்  பயன்படுத்துங்கள். உதாரணமாக வானம், சுவர். அதை வைத்து உங்கள் சப்ஜெக்டை முன் நிறுத்தவும். நிழல்களை மறக்க வேண்டாம்.  இது படத்திற்கு மேலும் வலு சேர்க்கும். அதே போலத்தான் கருப்பு வெள்ளை இமேஜ்களும். இவற்றின் மேல் எப்பொழுதும் ஓர் ஈர்ப்பு இருக்கும். முக்கியமாக  கதை சொல்லும் படங்களே சிறந்த ஒன்றாக இருக்கும். எதையும் எடுக்கிற கோணத்தில் எடுத்தால் ஏதோ ஒரு கதை சொல்லும். மேலே உள்ள புகைப்படத்தின் பூட்டுகள் சொல்லும் கதையை நினைத்துப் பாருங்கள்.

6. எடிட்டிங்கும் முக்கியமான ஒன்றுதான்:

போட்டோகிராபி

நீங்கள் பார்க்கும் சிறந்த புகைப்படங்கள் என கருதும் அனைத்துமே சிறிதாவது எடிட்டிங் செய்யப்பட்டதுதான். மொபைல் போட்டோகிராபிக்கும் இது பொருந்தும். எடிட்டிங் என்றால் இன்ஸ்டாகிராம் ஃபில்டர்களை படத்தின் மீது போடுவது இல்லை.
உங்கள் படங்களில் உள்ள சிறிய வெளிச்சத்  தட்டுப்பாடு  போன்றவற்றை நிவர்த்தி செய்ய சில ஆப்ஸ்கள் உதவியாக இருக்கும். அவற்றைக் கண்டுபிடித்து,  பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

7. பிரின்ட் செய்து பார்க்கவும்:

மொபைல்

நீங்கள் எடுத்த புகைப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து அதை பிரின்ட் செய்து பார்க்கவும். அதை உங்கள் நண்பர்களுக்கு அளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக அறைச் சுவர்களில் நீங்கள் எடுத்த படங்களை ஒட்டி வையுங்கள். இது புகைப்படங்களை மொபைல் திரையில் பார்க்கும் அனுபவத்தை விட மிகவும், வேறொரு அனுபவம்  தரும். நம்மையும் உற்சாகப் படுத்திக்கொண்டே இருக்கும்.  

DSLRல எடுத்தா மட்டும் இல்ல, மொபைல்ல எடுத்தும் நம்ம ரசனைகளை மேம்படுத்திக்கலாம். அதற்கான தன்முனைப்பு முக்கியம். ஏதாவது ஒரு வகைல சமூக வலைதளங்கள்ல பகிர்வது, தனி ஃபோல்டர்ல சேமிச்சு வெச்சு, நண்பர்கள்கிட்ட காமிக்கறதுனு பகிர்தல் இருந்துட்டே இருந்தா இன்னமும் உத்வேகமா இருக்கும். 

இதைப் படிச்சு முடிச்சதுமே, உங்க மொபைல்ல செமயா ஒரு அஞ்சு ஃபோட்டோ எடுக்கணும். செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?